Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

ஒழுக்கமில்லாத பக்தி?

முருகனுக்கு அரோகரா! அதிலும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா! அரோகரா என்று மிகப்பெரிய கும்பல் கிளம்பியுள்ளது.திடீர் முருக பக்தர்களா?அல்லது உண்மையிலேயே நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி வேரூன்றிவிட்டதா என்பதை யூகிக்க முடியவில்லை. திருச்செந்தூரிலும், திருப்பரங்குன்றத்திலும் சமீபத்தில் தடபுடலாக கும்பாபிஷேகம் நிகழ்ந்திருக்கிறது. கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்குள் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் திருச்செந்தூர்  சென்றிருந்தோம். திருப்பதி போலவே வடிவமைத்து உருவாக்க வேண்டும் என்ற முயற்சி ஒரு புறம் தெரிந்தாலும், இது தமிழ்நாடு டா என்பது இன்னொரு புறம் […]

Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

சாஞ்ஞியமா ? வியாபாரமா?

ஆடி அமாவாசை தர்ப்பணம் இன்று. முன்னோர்கள் பசியோடு நம்மை அனுகுவார்கள்.அவர்களை நினைத்து வணங்கி விட்டு, அவர்களுக்காக படையல் செய்து பூஜை செய்து விட்டு அதை நாம் சாப்பிடுவது என்பது ஒரு நல்ல நடைமுறை. நமது முன்னோர்களை, நம் வாழ்வின் முன்னோடிகளை நினைத்து வணங்க வேண்டும் என்ற ஒரு நற்காரியம் நிறைவேற்றப்படுகிறது. அவர்களின் பெயரைச் சொல்லி காகங்களுக்கு உணவு செலுத்துவது, அதுவும் ஒரு வகையில் நற்காரியம் தான். நாம் ஏற்கனவே, பறவைகளுக்கு உணவு அல்லது நீர் தினசரி வைத்தால் […]

Categories
ஆன்மீகம் கருத்து

வாழ்க்கைக்கான சிந்தனை

நல்லதொரு சிந்தனையோடு முதல் நாளைத் துவங்குவோம். படித்ததில் பிடித்தது. ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய […]

Categories
ஆன்மீகம் தற்கால நிகழ்வுகள்

மகா கும்பமேளா- விமர்சனங்களின் தொகுப்பு

நவீன வளர்ச்சி, நவீன முன்னேற்றம், என்பது போல, நவீன மூடநம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை தான். உத்திரப்பிரதேச மாநிலம் பிராயக்ராஜ்ல் தற்போது நிகழ்ந்து வரும் மகா கும்பமேளாவில் நவீன மூடநம்பிக்கை ஒன்று பிறந்துள்ளது ஆச்சரியத்தையும், சிரிப்பையும் வரவழைக்கிறது. ஆமாம். மகா கும்பமேளாவில் குறிப்பிட்ட நாட்களில் நதியில் புனித நீராடுவது புனிதம், பெரும் பலன் என்று கூறப்படுகிறது. அதை நம்பி குளிக்கச் சென்று கூட்டத்தில் நசுங்கி இறந்தவர்களை நாம் ஏற்கனவே சாடியுள்ளோம். இது மாதிரியான மூட நம்பிக்கை அவசியமா என்று. அதற்குப் […]

Categories
ஆன்மீகம் தகவல்

திருப்பதி பயணம்- இனிய மற்றும் காரசார அனுபவம்

பயணங்கள் பொதுவாக மனிதனைப் பக்குவப்படுத்தும். புதிய மனிதர்களை, புதிய அனுபவங்களை சந்திக்க வைக்கும். அன்றாடம் நாம் பயணிக்கும் சிறிய தொலைவில் கூட சிறிய புது அனுபவங்களை சந்திக்க நேரும், அப்படியிருக்க ஒரு ஆன்மீக சுற்றுலா, புது அனுபவத்தைத் தராமலா போகும்? சமீபத்தில் திருச்செந்தூர் பயணித்த போது நமக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களையும், முகம் சுளிக்கும் சம்பவங்களையும் பகிர்ந்திருந்தோம். ஆனால் திருப்பதி எப்போதுமே முகம் சுளிக்கும் நிகழ்வுகளைப் பரிசாகத் தருவதில்லை. காரணம் கடுமையான நிர்வாக முறை. எப்பேர்ப்பட்ட பெரிய […]

Categories
ஆன்மீகம்

அதிசயங்களா நிகழ்கிறது திருச்செந்தூரில்?

சமீபத்திய காலத்தில் திருச்செந்தூர் கடலில் இருந்து,தினசரி ஏதாவது ஒரு கல்வெட்டு அல்லது சிலை கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது. தினசரி என்றால் நித்தமும் அல்ல, அவ்வப்போது ஏதாவது ஒன்று வெளிப்படுகிறது. காரணம் கடல் அரிப்பு. இந்த கடல் அரிப்பு காரணமாக ஏற்கனவே கடல் வெளியில் கிடந்து மறைந்து போன தேவையற்ற பொருட்கள் ஒவ்வொன்றாக வெளியேறுகிறது. ஆமாம். முன்பு கோவில் புணரமைக்கப்பட்ட போதோ, சீரமைக்கப்பட்ட போதோ ஏதோ ஒரு கல்வெட்டு எழுதப்பட்டு, பிறகு அது உபயோகப்படுத்தப்படாத காரணத்தால் கடற்கரையிலேயே […]

Categories
அறிவியல் ஆன்மீகம் தகவல் தற்கால நிகழ்வுகள்

தை பிறந்தால்?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வாக்கு இன்றளவிலும் பொதுமக்களால் நம்பப்படுகிறது. விவசாயம் என்பது பிரதான தொழிலாக இருந்த போது, அறுவடை முடிந்து தை மாதம் அனைத்தையும் கடவுளுக்கும் சூரியனுக்கும் படைத்து வழிபட்ட பிறகு, விளைச்சலை விற்றுப் பணமாக்கி, அதன்மூலமாக வருவாய் ஈட்டுவது வழக்கம். அதனால் தான், தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற சொல்லாடல் வந்தது. தைப் பொங்கல் என்பது தமிழனின் சிறப்பான பண்டிகை, மாட்டுப் பொங்கல் என்பது விவசாயத்திற்கு உற்ற துணையாக இருந்த மாடுகளுக்கு நன்றி […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

தேவையா இந்த அவலம்? – ஏகாதேசி நெரிசலில் பக்தர்கள் உயிரிழப்பு

நாம் அடிக்கடி விமர்சிக்கும் அதிதீவிர பக்தி, அல்லது மிதமிஞ்சிய பக்தி அல்லது விளம்பரத்திற்கான பக்தி அல்லது போட்டிக்கு பக்தி, எப்படி வேண்டுமானாலும் இதை சொல்லலாம். அதன் விளைவு இன்று விபரீதமாகி இருக்கிறது. திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையானை தரிசித்தே தீருவேன் என்று கூட்டம் கூட்டமாக ஆட்டு மந்தை போல முண்டியடித்த மக்கள். மூச்சு முட்டி இதுவரை 5 பேர் இறந்திருக்கிறார்கள்.இனியும் எண்ணிக்கை கூடலாம் என்றும் சொல்லப்படுகிறது. பலர் காயமடைந்திருக்கிறார்கள், மயங்கி விழுந்திருக்கிறார்கள். இவர்கள் செய்த தவறு […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

பக்தி என்பது என்ன?

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார் குறள் 10 இறைவனின் திருவடிகளை அடைந்தவரால் மட்டுமே இந்தப்பிறவி எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க இயலும் என்பது வள்ளுவர் வாக்கு. இறைவனின் திருவடியை அடைவது எப்படி? கள்ளம்கபடமில்லா பக்தியும், சக உயிர்களுக்கு நாம் செய்யும் உதவியும், நாம் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை நெறியும் தான் நம்மை அந்த இறைவனின் திருவடியில் சேர்க்கிறது. ஒரு விஷயத்தை நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ளும் பட்சத்தில் பக்தி என்பது என்ன என்பதை […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

இருதலைக் கொள்ளி எறும்பாக.. திமுக எனும் அரசியல் சாம்ராட்.

இருதலைக் கொள்ளி என்றால் என்ன? அதாவது இரு பக்கமும் எரியும் தீயால் கொள்ளியின் நடுவில் சிக்கிய எறும்பு தப்ப வழியின்றி மாட்டிக்கொள்வது போல துன்பம் சூழ்ந்து தப்ப வழியின்றி மாட்டிக்கொள்பவரை அப்படி உவமானமாகச் சொல்வர். சரி விஷயத்திற்கு வருவோம். நம் அனைவருக்கும் நன்கு அறியப்பட்ட விஷயம், திமுகவின் மூடநம்பிக்கை மறுப்புக் கோட்பாடு. திமுக பெரியார் வழியைப் பின்பற்றும் கட்சி என்பதால், ஆன்மீகத்தின் பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகளை அது காலங்காலமாக கடுமையாக எதிர்த்து வருகிறது. சொல்லப்போனால் இது கடவுள் […]