Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள் மறைவு

கரைந்து போன கனவுகள்

எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வெட்டுவது போல விபத்துகள் நிகழ்ந்து மிகப்பெரிய பாதிப்பையும் துயரத்தையும் உருவாக்கி விட்டுச் செல்வது தவிர்க்க இயலாத ஒன்றுதான். ஆனால் சில மனிதர்களின் அலட்சியத்தால் விபத்துகள் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச்சார்ந்த அக்காளும் தம்பியும் துடிதுடித்து இறந்து போவது என்பது மனதைத் துளைத்து விடும் தோட்டாக்கள் போன்றது. கடலூரில் பள்ளி வேனின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது என்பதில் பலரும் பலவிதமான கருத்துகளையும், செய்திகளையும் சொன்னாலும் கூட, நம் யாராலும் அந்த இழப்பை […]

Categories
நினைவுகள் மறைவு

குருவின் பாதங்களுக்குக் கண்ணீர் அஞ்சலி

மாதா, பிதா, குரு, தெய்வம். ஒரு மனிதனுக்கு தெய்வம் துணை நிற்காவிட்டாலும், மாதா, பிதா மற்றும் குரு ஆகியோர் ஒருபோதும் கைவிடுவதில்லை. சொல்லப்போனால் பலரது வாழ்வில் பல நேரங்களில் இந்த மூவரும் தான் தெய்வமாக நின்று வாழ்வைச் சிறப்பிப்பவர்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பின் போது போதித்த ஆசிரியர்கள் அனைவரும் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் தான். அதிலும் பாடம் மட்டும் நடத்தாமல் சற்றுக் கூடுதலாக மாணவர்கள் மீது அக்கறை கொண்டு நெருங்கிப் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

காவல்துறை யார் நண்பன்?

நமக்கு எதுக்குப்பா வம்பு என்று சாமானியர்கள் பலரும், பலவற்றை சகித்துக் கொண்டு தங்களது ஆத்திரத்தையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு இருக்குமிடம் தெரியாமல் வாழ்வதற்குக் காரணம், இந்த அமைப்பின் மீதான அதீத பயம் தான். காவல்துறை உங்கள் நண்பன் வாசகம் இங்கே யாருக்குப் பொருத்தம் என்பது தான் முதல் கேள்வி. விடை தெரியாத கேள்வி. காவல்துறை என்றால் ஒட்டுமொத்த காவல்துறையும் தங்களது வேலையைச் செய்யவில்லை அல்லது அனைத்து காவலர்களும் தவறானவர்கள் என்று சித்தரிப்பது நமது நோக்கமல்ல. காவல்துறையில் பணிபுரியும் […]

Categories
தற்கால நிகழ்வுகள் மறைவு

ஆழ்ந்த இரங்கல்!

விபத்து. தவர்க்க முடிந்தால் தவிப்பு இல்லை.ஆனால் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்து நம்மைத் துயரில் ஆழ்த்துவது தான் விபத்து. அதிலும் இவ்வாறு நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய பெரும் விபத்து என்றால் நம்மால் அவ்வளவு எளிதாகக் கடந்து விடவோ அல்லது ஜீரணிக்கவோ இயலாது. எத்தனை கனவுகளையோ, எத்தனை பாசங்களையோ, எத்தனை தொழில் ஏற்பாடுகளையோ, உயிர்களின் கூறாக, வெவ்வேறு நாட்டைச் சார்ந்த மக்களை தூக்கிப் பறக்கத் துவங்கிய , பறக்கும் விசை சரியாகக் கிடைக்காத காரணத்தால் பறக்கத் துவங்கிய சில […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இது விபத்தல்ல, கொலை!

கொலை என்பது திட்டமிட்டு, ஒருவரைத் துப்பாக்கி வைத்து சுடுவதும், அல்லது கத்தி வைத்துக் கிழிப்பதும் மட்டுமல்ல. ஒரு சுமாரான போக்குவரத்து இருக்கும் சாலையில் 20 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி வைத்து விட்டு அதை மறிக்காமல், மாற்று வழிப்பதாகைகள் வைக்காமல் அந்தப்பள்ளத்தில் அந்த வழியாகப் பயணித்த ஒரு குடும்பத்தில் இருவர் விழுந்து இறந்தால், அதுவும் கொலை என்று தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆமாம் இது விபத்து தான்.ஆனால் அந்த விபத்து நிகழக் காரணம் என்ன தெரியுமா? […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பிஞ்சு மனதில் விதைக்கப்பட்ட நஞ்சு

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. பசுமரத்தாணி போல என்ற வாக்கியங்கள் குழந்தைப் பருவத்தில், அதாவது இளம் வயதில் கற்றலை போதிப்பதற்கான வாக்கியங்கள். அதாவது இளம் வயதில் நல்ல விஷயங்களை, வாழ்க்கைக்குத் தேவையான போதனைகளை சொல்லிக்கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அதன் விளக்கம். எப்படி குழந்தைகள் நல்ல விஷயங்களை மனதில் பதிப்பித்துக் கொள்கிறார்களோ, அதேபோல, தன்னைச் சுற்றி இருக்கும் சமூகம் காட்டும் வக்கிரங்களையும், தீயவற்றையும் கூட எளிதாக உட்கிரகித்துக் கொள்கிறார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் சுற்றத்தில் பேசப்படும் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்

நமது ஊர்களில் ஒரு பிரபலமான சொல்லாடல் உண்டு.வெல்லம் சூப்புரது ஒருத்தன், வெரல சப்புறது ஒருத்தன் னு. இந்த கட்டுரையில் பேசப்போகும் விஷயத்திற்கு இந்த சொல்லாடல் சொல்லித் துவங்குவது என்பது தவறு தான். ஆனால் சமுதாயம் போகும் போக்கில் இப்படி சில விஷயங்களைத் தாறுமாறாக சாடை பேசாமல், சாடாமல் இருக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு செய்தி. ராசிபுரத்தில் ஒரு 9 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவனால் தாக்கப்பட்டு இறந்து விட்டான். இது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய செய்தி […]

Categories
தற்கால நிகழ்வுகள்

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் – நிறைவேறுமா?

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு அளித்தது இல்லாமல், அவரைக் கீழே தள்ளி விடப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. அந்தப்பெண்ணுக்கு மருத்துவ உதவியும், நஷ்ட ஈடும் அரசாங்கம் தர முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரிய விஷயம் தான். ஆனால் அந்த தண்டனையைச் செய்த நபருக்கு அளிக்கப்படும் தண்டனை என்பது இனி இதுபோன்ற செயல்களைச் செய்ய யாரும் துணிந்திரா வண்ணம் இருக்க வேண்டும். அதை பொதுவெளியில் யாரும் மறக்காதபடி செய்ய வேண்டும்! ஒரு பெண்ணை அவளது விருப்பமின்றி பாலியல் சீண்டல் செய்வதற்கே […]

Categories
அறிவியல் தற்கால நிகழ்வுகள்

உலகம் நம் கையில், நம் மூளை எதன் கையில் ?

உலகமே உன் கையில் என்று நம் கையிலிருக்கும் தொலைநுட்பக் கருவிகள் நமது கையில் உலகத்தைத் திணித்து விட்டு மூளையை அது எடுத்துக் கொள்கிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. சமீபத்திய ஒரு பயணத்தின் போது, எனது நண்பர் ஒருவர், தனது அலைபேசியின் மின்னூக்கியை மறந்து விட்டு வந்துவிட்டார். என்னுடையதும் அவருக்கு ஒப்பவில்லை. ஆகையால் அவரது அலைபேசி மறுநாள் காலை எழும்போது அணைந்து விட்டது. அவருக்கு ஏதோ ஒரு சின்ன ஆத்திரம், தனது வீட்டிற்கு அழைத்துப்பேச வேண்டும் என்று. நான் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

என்று தீருமோ இந்த மூடநம்பிக்கை சோகம்?

இஸ்ரோ தனது 100 ஆவது ராக்கெட்டை விண்வெளியில் வெற்றிகரமாக ஏவிய அதே நாளில் தான் இன்னொரு துக்க செய்தியைக் கேட்டறிந்தோம். மஹா கும்பமேளாவில் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் குளிப்பதற்காகத் திரண்ட காரணத்தால் 30 பக்தர்கள் மரணம், அதிகமானோர் காயம். இந்தப்பக்கம் நமது மாநிலத்தின் ஆளுநர் சனாதான தர்மத்தைப் பாதுகாப்போம் வளர்ப்போம் என்று பேட்டி கொடுக்கிறார். இப்படி சனாதான தர்மத்தைக் காப்போம் என்று பேட்டி அளிக்கும் எந்த மிகப்பெரிய ஆளுமையும் அந்த கும்ப மேளா கூட்டத்தில் […]