Categories
சிறுகதை நினைவுகள்

மாம்பழமும் நாமும்

மாம்பழம் பற்றி பலருக்கும் பல கதைகளும் இருக்கும். நமக்குத் தெரிந்து பரமசிவன் குடும்பம் பிரிந்ததே ஞானப்பழம் என்று பெயரிடப்பட்ட மாம்பழத்தின் காரணத்தினால்தான். அதைத் தாண்டி நமக்கெல்லாம், மாம்பழம் என்றவுடன் அப்துல்லா கதையும் ஞாபகத்தில் வரும். இதோ இங்கேயும் அதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஊரில் உள்ள ஒரு மிகப்பெரிய கஞ்சனின் மாம்பழத்தோட்டம் வழியாக அப்துல்லா நடந்து செல்கிறான்.அப்போது, அங்கே பழுத்துத் தொங்கிய மாம்பழங்களின் வாசனையை உணர்ந்து அவன், ஆஹா, எவ்வளவு மனம்.இதைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும் […]

Categories
கருத்து

பறவைகளுக்கு நீர் வைக்கலாமே?

மனிதா நான் பறவை. என்ன பறவை என்று கேட்கிறாயா? என் பெயர் சொன்னால் மட்டும் கண்டுபிடித்து விடுவாயா? காகம், குருவி, புறா, கழுகு போன்ற சில பறவைகள் தான் உனக்குப் பரிச்சயம். ஏன் அது கூடத் தெரியாமல் சிலர் இருக்கலாம். எங்களுள் ஆயிரக்கணக்கான இனம் உண்டு. எங்கோ மறைந்து விட்டன என் இனங்கள். ஆமாம் நாங்களும் இங்கே இந்த பொதுப்படையான பூமியிலே நிம்மதியாகப் பறந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் தான் இருந்தோம். ஏதேதோ மாற்றங்கள் எங்கள் இனங்களை […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

காணாமல் போன உணவுவிலைப் பட்டியல்- சூட்சமம் என்ன?

உணவகங்களில் சென்று மனதிற்குப் பிடித்த மாதிரி நாவில் இனிக்கும் ருசியோடு உணவருந்தும் ஆசை அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. முன்பெல்லாம் அது பௌர்ணமி, அமாவாசை போன்ற நிகழ்வாக, அவ்வப்போது என்ற ரீதியில் இருந்தது.ஆனால் இப்போதோ வரிசையாக திறக்கப்படும் உணவகங்களையும், அதில் இருக்கும் கூட்டத்தையும் பார்க்கும் போது வீட்டில் யாரும் சமைப்பதே இல்லையோ என்ற கேள்வி தான் எழுகிறது.சரி இந்தக்கேள்வியை நாம் அழுத்தம் திருத்தமாகக் கேட்டால் அது ஆணாதிக்கக் கேள்வி ஆகி விடும். ஆனால் வேறொரு கேள்வி என் மூளையில் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

ஆவின் மேஜிக்கில்- அரசாங்கம் செய்த மேஜிக்

ஆவின் கரீன் மேஜிக் பாலில் அரசாங்கம் செய்த மேஜிக். ஆவின் பாலில் கொழுப்பு 3% மட்டுமே இருக்கும் டபுள் டோன்டு அதாவது சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் 6% கொழுப்புடைய புல் க்ரீம் பால் வகைக்களைக் காட்டிலும், 4.5 சதவீத கொழுப்புடைய standard அதாவது நிலைப்படுத்தப்பட்ட பாலையே பெரும்பாலான மக்களும் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அதாவது ஆவின் பச்சை என்பது அதன் அடையாளம். அதன் பெயர் ஆவின் க்ரீன் மேஜிக் என்பது. சமன்படுத்தப்பட்ட பால் 1/2 லிட்டர் 20 ரூபாய்க்குக் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

கலவரத் திருவிழா

கலவரமான கோவை உணவுத் திருவிழா! கோவையில் சென்ற வார இறுதி நாட்களில் கொடிசியா வளாகத்தில் உணவுத்திருவிழா என்ற விளம்பரம் மிகவும் பிரபலமாக இணையத்தில் பரவி இருந்தது. கிட்டதட்ட 499 உணவு வகைகளை வெறும் 799 ரூ கொடுத்தால் உண்டு மகிழலாம் என்றும், அது போக, பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இருக்கும் என்றும் மிகப் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டது. நாமும் கூட அந்த விளம்பரத்தைக் கண்டிருக்கக் கூடும். வெறும் 800 ரூபாயில் 499 உணவு வகைகளை உண்டு மகிழப்போகிறோம் […]

Categories
குட்டி கதை தமிழ்

நம்ம வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்குனு தோணுதா?இதப்படிங்க முதல்ல.

கடவுள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் மனிதர்களைப் படைக்கிறார். ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை படைக்கப்பட்டவுடன் எல்லாரையும் பூலோகம் அனுப்ப திட்டம் தயார் ஆகிறது. பூலோகம் போகும் முன் கடவுளின் ஏற்பாட்டோடு, ஒரு விருந்தும் தயார் ஆகிறது. மனிதர்களிடம் சொல்லப்படுகிறது.“மனிதர்களே, நீங்கள் பூலோகம் செல்லவிருப்பதால் இங்கே வழி அனுப்பும் விருந்து ஒன்று வைக்கப்படும், சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த அறையில் கடவுள் உங்களை ஆசி கூறி வழி அனுப்புவார். அனைவரும் விரைவாக சாப்பிட்டு வாருங்கள்” என… உடல் படைக்கப்பட்டவுடன், உச்சகட்ட […]

Categories
தமிழ் நினைவுகள்

எங்கள் தெரு கோவில் கொடை நினைவுகள்

பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர். 1952 ஆம் ஆண்டே பராசக்தி படத்தில் திரு.சிவாஜி கணேசன் இந்த வசனத்தைப் பேசி நடித்திருப்பார். அப்படியிருக்கும் போது 2024 ல் சொல்லவா வேண்டும். நாம் பிழைக்கச் செல்லும் ஊரில் எத்தனை சொகுசுகளும் வசதிகளும் இருந்தாலும் கூட, பிறந்த ஊர் ஒரு குட்கிராமமாயினும், அந்த பிறந்த ஊரில் இருந்த ஏதோ ஒன்றை பிழைக்கச் சென்ற ஊரில் நாம் தொலைத்தது போன்ற அனுபவம் இல்லாமல் இங்கு யாருமில்லை. அப்படி என்னுடைய மனதிற்கு […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

மழை முன்னெச்சரிக்கை கூத்துகளும், கட்டாயமும்

மழை எச்சரிக்கை கூத்துகள். சமீபத்தில் மெரினா கடற்கரையில் நடந்த நிகழ்வின் போது முன்னெச்சிரிக்கையாக போதுமான அளவு தண்ணீர் ஏற்பாடு இல்லாத காரணத்தால் உயிரிழந்த மக்களின் கதையை அறிந்து வருந்தினோம். இன்று அதே சென்னை மக்கள் உலகம் அழியும் வண்ணம் முன்னெச்சிரிக்கைக் கூத்துகளை செய்வதைக்கண்டு வியந்து இதை எழுதுகிறோம். ஆம். இன்று தற்காலிகமாக நான் ஒரு காய்கறி அங்காடிக்கு செல்ல வேண்டிய கட்டாயம். அங்கே சென்று பார்த்தபோது எனக்குப் பெரிய வியப்பு. முக்கிய ரகங்களில் ஒரு காய்கறியும் மிச்சமில்லை. […]

Categories
தமிழ் நினைவுகள்

ஊர் சுற்றலாம் வாங்க – நாசிக் நகரம்

நாசிக் நகரம், இந்திய நாட்டின் மேற்கு பகுதியில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் ஒரு நகரம். கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ளஅழகான, சிறப்பான, தெய்வீகமான, பூர்விக வரலாறு கொண்ட நகரம். மேலும் இந்தியாவின் திராட்சை நகரம், மற்றும் ஒயின் எனப்படும் திராட்சை ரசத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படும் சிறப்பு உடையது. கிட்டதட்ட 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரமானது கடல் மட்டத்திலிருந்து 1916 அடி உயரத்தில் இருப்பதால் பகுதி மலைப்பிரதேசம் போல இனிய காலநிலை கொண்டது. இது […]

Categories
கருத்து சிறுகதை தமிழ்

மருந்தை விட்டது போகட்டும், வாழப்பழத்தையும் விட்டுட்டான்!

நமது வாழ்வியல் எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போலத்தான் மருத்துவ தேவைகளும் அமையும் என்பதை மறந்து சிலர், “நான் மருந்து மாத்திரைகளைத் தவிர்த்து வாழ்ந்து வருகிறேன்”, அல்லது “மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழ முயற்சி செய்கிறேன்” என்று கூறி வாழ்வியலையும் மாற்றிக் கொள்ளாமல் இறுதியில் பெரிய தாக்கங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அதை ஒரு உரையாடலாக பதிவிடுகிறோம்.இதில் சிறிது கற்பனை, மீதி உண்மை. (டூட் என்பது dude என்ற ஆங்கிலச் சொல்லை குறிக்கிறது. Dude என்பது கவலையில்லாமல் சுற்றும் […]