Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

ஒரு கைதியின் கருத்து.

இன்று ஒரு தினசரியின் வாசகர் கருத்து பக்கத்தில் ஒரு கட்டுரை பிரசுரிகரகப்பட்டிருந்தது. அந்த வாசகரின் பெயர், ரா.செல்வகுமார். முகவரி: தூக்குதண்டனைக் கைதி,மத்திய சிறைச்சாலை,திருநெல்வேலி. அதைப் பார்த்ததும் எனக்குள் ஏதோ சிறிய தாக்கம். ஒரு கைதி, அதுவும் தூக்கு தண்டனை கைதி என்றால், தன் வாழ்நாளை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு ஆள். அவர், ஒரு தினசரிக்கு தனது மனதில் பட்ட உண்மையான கருத்தை எழுதி இந்த உலகத்தோடு உறவாட நினைக்கிறார். நினைத்தாலே நெகழ்ச்சியாக உள்ளது. அவர் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வழக்கொழிந்த ஒழுக்கம்!

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இப்படி உயிரைக்காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேணிக்காக்கப்பட்ட ஒழுக்கமானது, தலைமுறைகள் தாண்ட, கலாச்சாரங்கள் சிறிது மாற, அதிலே காணாமல் போகிறது. 90 முதல் 2000 கால கட்டங்களில் , பள்ளிக்கு ஒழுங்கான சிகை அலங்காரத்தோடு செல்லாவிட்டாலே அடிதான். அடித்த கையோடு வீட்டுக்கு அனுப்பி சிகைமுடியை வெட்டி வரச்செய்வார்கள். வீட்டிற்குச் சென்றால், “நான்தான் முன்னாடியே சொன்னேன்ல, இன்னைக்குப் படிப்புப் போச்சா?“ என்று சொல்லி அங்கே இரண்டு அடி விழும். […]

Categories
தற்கால நிகழ்வுகள்

ஆண்களும் பலனடையும் மகளிர் உரிமைத் தொகை

பொதுவாக நலத்திட்டங்கள் என்பது அடித்தட்டு மக்கள் மேம்படுவதற்காக அரசாங்கத்தால் செய்யப்படும் சமுதாய முன்னெடுப்பு நடவடிக்கைகள். தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, கட்டணச்சலுகை இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் அடிப்படையாகத் துவங்கிய இந்த நலத்திட்ட உதவிகள், பஸ் பாஸ், மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப் என்று பரிணாம வளர்ச்சி அடைந்து , இன்று மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கு மாதமாதம் பணம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இப்படி மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகையானது அவர்கள் படித்த பள்ளி, அதாவது […]

Categories
கருத்து

சமுதாயம் நம் கையில்

சினிமாவை வெறும் சினிமாவாக பார்க்கும் மனநிலை எப்போது வரும் என்பது புரியவில்லை. ஒரு சைக்கோ கில்லர் திரைப்படத்தை பார்த்து சைக்கோவாக மாறாத இளைஞர்கள், ஒரு நேர்மையான காவல் அதிகாரி படம் பார்த்து காவல் அதிகாரியாக மாறாத இளைஞர்கள், கதாநாயகன் புகை பிடிப்பதை மட்டும் உடனடியாகப் பின் தொடர்கிறார்கள்? என்ன காரணம்? எளிதாக கிடைக்கிறது. இதில் குற்றம் சினிமாக்காரன் மீது மட்டுமா? பள்ளி சீருடையுடன் பாருக்குள் கூத்தடிக்கும் மாணவர்கள், பாருக்குள் செல்ல வழி கொடுத்தது சினிமா மட்டும் தானா? […]

Categories
தற்கால நிகழ்வுகள்

அரசுப்பேருந்து ஓட்டுநரின் அகங்காரம்

நமது பக்கத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தோம், அரசு அதிகாரிகளுக்குக் கடிவாளம் அவசியம் என்று. அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, சாதாரணமாக அரசுப் பணி செய்யும் அனைவருக்கும் அந்தக் கடிவாளம் அவசியம். சில வாரங்களுக்கு முன்பு நான் சந்தித்த மோசமான பேருந்து பயணத்தைப் பற்றியும், அது சம்பந்தமாக முதல்வர் பிரிவில் நான் அளித்த புகார் பற்றியும் எழுதியிருந்தேன். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து சரகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. “தெரியாம செஞ்சுட்டாங்க சார், நான் கண்டிச்சிருதேன்” என்று எளிதாக […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

அரசு அதிகாரிகளுக்குக் கடிவாளம் கட்டாயம்!

சமீபத்திய மாநில நிதிநிலை அறிக்கையில் அரசு அதிகாரிகளுக்கு அவர்களே வியக்கத்தக்க வகையில் பல சலுகைகள் அள்ளி வழங்கப்பட்டிருந்தது. அரசு வேலையில் இருப்பவர்கள் உயிர் துறக்கும் பட்சத்தில் மகளுக்கு திருமண செலவுக்கு 5 லட்சம், 1 கோடி ரூபாய்க்கு காப்பீடு என பிரம்மாண்ட சலுகைகள் வழங்கப்பட்டன. தனியார் ஊழியர்கள் பலரும் நிரந்தரமான வேலைச்சூழல் மற்றும் நியாயமான சம்பளம் என்பனவற்றிற்கே திண்டாடும் போது அரசு அதிகாரிகளுக்கு மட்டும் இத்தகைய சலுகை கொடுப்பதை இங்கே யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இதனால் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தேவையற்ற நுகர்வு தெருவில் தான் சேரும்.

குழம்ப வேண்டாம். நிறுத்துமிடமில்லாமல் இல்லாமல் கார் வாங்கக் கூடாது என்ற அரசாங்க நடவடிக்கை பற்றிய சிந்தனை. சமீபத்திய பகட்டுக் கட்டுரையில் நாம் பேசிய பல விஷயங்களைப் போல இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. கார் வாங்குறீங்களே?அத நிறுத்த இடமிருக்கா? இந்தக் கேள்வியை அது வரை யாருமே கேட்டதில்லை. இது வரை மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இவ்வளவு தான்.உங்களுக்கு சிலர் எவளோ, பான் கார்டு , ஆதார் கார்டு கொடுங்க, 0 டவுன் பேமண்ட்ல அடுத்த மாசம் கார் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்

நமது ஊர்களில் ஒரு பிரபலமான சொல்லாடல் உண்டு.வெல்லம் சூப்புரது ஒருத்தன், வெரல சப்புறது ஒருத்தன் னு. இந்த கட்டுரையில் பேசப்போகும் விஷயத்திற்கு இந்த சொல்லாடல் சொல்லித் துவங்குவது என்பது தவறு தான். ஆனால் சமுதாயம் போகும் போக்கில் இப்படி சில விஷயங்களைத் தாறுமாறாக சாடை பேசாமல், சாடாமல் இருக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு செய்தி. ராசிபுரத்தில் ஒரு 9 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவனால் தாக்கப்பட்டு இறந்து விட்டான். இது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய செய்தி […]

Categories
ஆன்மீகம் தற்கால நிகழ்வுகள்

மகா கும்பமேளா- விமர்சனங்களின் தொகுப்பு

நவீன வளர்ச்சி, நவீன முன்னேற்றம், என்பது போல, நவீன மூடநம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை தான். உத்திரப்பிரதேச மாநிலம் பிராயக்ராஜ்ல் தற்போது நிகழ்ந்து வரும் மகா கும்பமேளாவில் நவீன மூடநம்பிக்கை ஒன்று பிறந்துள்ளது ஆச்சரியத்தையும், சிரிப்பையும் வரவழைக்கிறது. ஆமாம். மகா கும்பமேளாவில் குறிப்பிட்ட நாட்களில் நதியில் புனித நீராடுவது புனிதம், பெரும் பலன் என்று கூறப்படுகிறது. அதை நம்பி குளிக்கச் சென்று கூட்டத்தில் நசுங்கி இறந்தவர்களை நாம் ஏற்கனவே சாடியுள்ளோம். இது மாதிரியான மூட நம்பிக்கை அவசியமா என்று. அதற்குப் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

சமுதாயம் செய்த கூட்டு பாலியல் வன்முறை

கோவையில் ஒரு 17 வயது பெண் கூட்டு பாலியல் வன்முறை. சமீபத்தில் கூட நம் பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்னு பாலியல் குற்றங்களுக்கு தண்டனை விதத்தில் இது குறையுமா என்று! அது ஒரு பார்வை.குற்றம் நடந்த பிறகான பார்வை. ஆனால்“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்” என்ற வள்ளுவனின் வாக்கை நாம் நினைக்காமல் விட்டது ஏனோ? ஆம், இந்தக்கூட்டுப் பாலியல் வன்முறை ஆள் அரவரமற்ற இரவிலோ, காட்டினுள்ளோ நடைபெறவில்லை. […]