Categories
கருத்து நினைவுகள்

இடைவேளை அவசியம்!

இடைவேளை- இடைவெளி அன்றாடம் ஓடும் இந்த ஓட்டத்திற்கு ஒரு சிறிய இடைவேளை தருவது தான் மீண்டும் அதே வேகத்தில் ஓடுவதற்கான ஆதாரம். எப்படி ஒரு தடகள வீரர் தன்னுடைய மொத்த ஓட்ட தூரத்தை பாகங்களாகப் பிரித்து, இடையில் ஒரு சிறிய இடைவெளி விட்டு, உடலுக்கும் காலுக்கும் ஓய்வு கொடுத்து மீண்டும் உந்தம் கொடுத்து ஓட்டத்தை வேகப்படுத்துகிறாரோ அதுபோல, நாமும் நமது அன்றாட ஓட்டத்திலிருந்து ஒரு சிறிய ஓய்வெடுத்து சொந்த ஊருக்கோ அல்லது வேறேதாவது ஒரு கோயில், சுற்றுலா […]

Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

ஒழுக்கமில்லாத பக்தி?

முருகனுக்கு அரோகரா! அதிலும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா! அரோகரா என்று மிகப்பெரிய கும்பல் கிளம்பியுள்ளது.திடீர் முருக பக்தர்களா?அல்லது உண்மையிலேயே நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி வேரூன்றிவிட்டதா என்பதை யூகிக்க முடியவில்லை. திருச்செந்தூரிலும், திருப்பரங்குன்றத்திலும் சமீபத்தில் தடபுடலாக கும்பாபிஷேகம் நிகழ்ந்திருக்கிறது. கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்குள் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் திருச்செந்தூர்  சென்றிருந்தோம். திருப்பதி போலவே வடிவமைத்து உருவாக்க வேண்டும் என்ற முயற்சி ஒரு புறம் தெரிந்தாலும், இது தமிழ்நாடு டா என்பது இன்னொரு புறம் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

மாட்டிக்கிட்டீங்க பங்கு!

திருட்டுகள் பலவிதம், திருடர்களும் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். இன்றைய சூழலில் திருட்டுத்தனம் செய்து அடுத்தவர்களை ஏய்த்துப் பிழைப்பது பெரும்பாலனோரின் முழுநேரத் தொழிலாகவே மாறிப்போனது. சில மாதங்களுக்கு முன் என் கண்முன்னே நிகழ்ந்த ஒரு பகல் நேர ஏமாற்று வேலை பற்றி பதிவிட்டிருந்தேன், பலரும் படித்திருக்கலாம்.ஒரு பரபரப்பான காய்கறி கடைக்கு வந்த ஒரு ஆள், ஏதோ ஒரு காய் வாங்கிவிட்டு 35 ரூ வியாபாரத்திற்கு 2000 ரூ தாளை நீட்டினான்.அந்தக் கடைக்கார அம்மாவோ கடிந்து கொண்டே, சில்லறை […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மீண்டுமொரு ஆணவப்படுகொலை!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். இதைச் சொன்ன வள்ளுவனின் சாதி என்னவென்று தெரியாத காரணத்தால் இன்னும் அவருக்குக் கொஞ்சம் மரியாதை மிஞ்சியுள்ளது. இல்லாவிட்டால், அவர் இந்தக் காரணத்தால் தான் இதைக் கூறினார், அந்தக் காரணத்தால் அதைக் கூறினார் என்று சொல்லி திருக்குறளுக்குப் புதிய உரை எழுதி விடுவார்கள். இந்த ஆண்டு 2026. வள்ளுவராண்டு 2056. அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று 2056 ஆண்டுகளாகப் படித்து விட்டு, ஒரு இளைஞன், மாற்று சமூகத்தில் உள்ள பெண்ணிடம் பழகியதற்காக, அந்தப் […]

Categories
கருத்து சினிமா

தலைவன் தலைவி – திரை விமர்சனம்

இரண்டு பறவைகள் காதலிப்பது அழகு தான். ஆனால் அந்தக் காதல் நிலையாக ஒரு மரக்கிளை, ஒரு பறவைக்கூடு, இதெல்லாம் அவசியம். மனிதர்களின் காதலும் அவ்வாறு தான்.நல்ல அன்பான கணவன் மனைவியின் அன்பும் உறவும் நீடித்து நிலைத்திருக்க, அவர்களுக்கு இடையிலான அன்பு மட்டும் போதாது. சுற்றமும், உறவும், நட்பும், குடும்பமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை ஜாலியான வகையில் எடுத்துரைத்த படம் தலைவன் தலைவி. பார்த்த உடன் காதல், தெய்வீகமான காதல் என்று இழுக்காமல், பெண் பார்க்கும் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இப்படி ஒரு சான்றிதழ் பெற முடியுமா?

வேலைனு வந்துட்டா நாங்கல்லாம் கம்ப்யூட்டர் மாதிரி. மேசைல காகிதம் இருந்தா கையெழுத்துப் போட்டுத் தள்ளிருவோம். அது எங்களோட இறப்புச் சான்றிதழாவே இருந்தாலும் சரி என்று நிரூபித்திருக்கிறார் இந்த வட்டாட்சியர். சமீபத்தில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்னா மாவட்டத்தில் ஒரு விவசாயி தனது வருமானச் சான்றிதழை விண்ணப்பித்திருக்கிறார். அவரது வருமானத்தை மாதம் 2500 ரூ என்றும், ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் என்றும் சொல்லி விண்ணப்பித்திருக்கிறார். தகவல்களை நேர்மையாக சரிபார்த்த அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அவருக்கு சான்றிதழ் […]

Categories
சினிமா

மாரீசன்- திரை விமர்சனம்

நல்ல படங்களில் லாஜிக் பார்க்கத் தோன்றுவதில்லை.கதை போகும் போக்கில் நாமும் இனிமையாகப் பயணிக்கலாம் என்று தான் தோன்றும். அதுபோல ஒரு இனிய பயணம் சொல்லும் கதை. ஒரு மறதி வியாதி உள்ள நடுத்தரம் தாண்டிய வயது உள்ள நபர், தன் வீட்டிற்குத் திருட வந்த திருடரிடம் உதவி கேட்டு அவருடனே பயணிக்கும் கதை. கதையின் ஒரு நாயகனான பகத் பாசில் ஒரு திருடன்.நாகர்கோவிலில் இருக்கும் ஒரு வீட்டில் திருட உள்ளே நுழைகிறார். அங்கே கதையின் இன்னொரு நாயகனான […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

என் உடலோடு பேசிய தருணம்

நான் என் உடலோடு பேசிக்கொண்ட தருணம்.பொதுவாக வேலை செய்யும் இடத்திலிருந்து வீட்டுக்கு, சுமார் 8.5 கிமீ தூரம் எப்போதும் இருசக்கர வாகன பயணம் தான். ஏறி அமர்ந்து டுபு டுபு என்று முறுக்கினால், 30-45 நிமிடத்தில் வீடு சேர்ந்து விடலாம். இடையில் ஒன்றிரண்டு மேம்பாலம், சில சிக்னல்கள், என்று பெரிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாதை தான். நேற்றைய முன் தினம் அந்த 8.5 கிமீ சைக்கிளில் பயணிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு அமைந்தது. அப்போது அந்தப்பயணத்தில் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

எனக்குக் கிடைத்த பரிசு!

நான் எழுதிய எழுத்துக்குக் கிடைத்த பரிசு , எனது சமூக வலைத்தள பக்கம் முடக்கம். நமது முந்தைய பதிவான கிட்னி விற்பனை செய்து வாழ்வு நடத்தும் அவல நிலை என்ற பதிவின் காரணமாக என்னுடைய பக்கம் முடக்கப்பட்டது. தொடர்ந்து நான் இந்த எழுத்துக்களின் வழியாக நண்பர்களோடு, உறவுகளோடு ஒரு தொடர்பில் இருக்க விரும்புவதால் புதிய கணக்கைத் துவங்கியுள்ளேன். தினசரி நமது நினைவுகள் பக்கத்தில் பதிவிடப்படும் கட்டுரைகளை சராசரியாக 30-40 நபர்கள் வாசித்து வரும் காரணத்தால் , இதைத்தொடர்ந்து […]

Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

சாஞ்ஞியமா ? வியாபாரமா?

ஆடி அமாவாசை தர்ப்பணம் இன்று. முன்னோர்கள் பசியோடு நம்மை அனுகுவார்கள்.அவர்களை நினைத்து வணங்கி விட்டு, அவர்களுக்காக படையல் செய்து பூஜை செய்து விட்டு அதை நாம் சாப்பிடுவது என்பது ஒரு நல்ல நடைமுறை. நமது முன்னோர்களை, நம் வாழ்வின் முன்னோடிகளை நினைத்து வணங்க வேண்டும் என்ற ஒரு நற்காரியம் நிறைவேற்றப்படுகிறது. அவர்களின் பெயரைச் சொல்லி காகங்களுக்கு உணவு செலுத்துவது, அதுவும் ஒரு வகையில் நற்காரியம் தான். நாம் ஏற்கனவே, பறவைகளுக்கு உணவு அல்லது நீர் தினசரி வைத்தால் […]