Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வரவேற்கிறோம் ஆவலுடன்!

பாரத் டாக்ஸி. ஓலா உபர் ரபிடோ போன்ற தனியார் வாடகை வாகன இணையவழி மற்றும் செயலி வழி தரகு நிறுவனங்களுக்கு மாற்றாக மத்திய அரசின் செயலி. இந்தச் செயலி இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்ற தகவல் பரவலாக உள்ளது. தனியார் செயலிகள் பரபரப்பான அலுவல் நேரங்களில் தனக்கு விருப்பமான கட்டணத்தை நிர்ணயிப்பதும், ஓட்டுநர்களிடம் அதிகமான தரகு கட்டணம் வசூலிப்பதும் என்ற பிரச்சினைகள் மிக அதிகமாக முன்வைக்கப்படுகிறது.இனி பாரத் டாக்ஸி என்ற செயலி வந்தபிறகு இந்தத் தரகுக் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

உழைக்கும் வர்க்கத்திற்குத் தொடரும் அவலம்.

மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படும் உழைக்கும் வர்க்கம். நாம் பலமுறை தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களின் அவல நிலை பற்றியும் அவர்களின் ஊதிய மோசடி பற்றியும் எழுதியிருக்கிறோம். தனியார் முதலைகள் தான் பணத்திற்கு பேராசைப்பட்டு உழைப்பவர்களை வயிற்றில் இடத்தில் பிழைக்கிறார்கள் என்றால் , அரசாங்கமும் அதையே செய்தால் எங்கே தான் சென்று முறையிடுவது இந்த பாவப்பட்ட பிறவிகள்? தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிகழும் அநியாயம் பற்றியது தான் இந்தப் பதிவு. தொகுப்பூதிய செவிலியர்கள் மட்டுமல்ல, துப்புறவுத் தொழிலாளர்களில் துவங்கி பல […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

நலிந்த கலைஞனின் கேள்வி.

படித்து பாதித்துப் பகிர்ந்தது! கேரளா காரனுக என்னைக்காச்சிம் தவில் நாதஸ்வரம், தப்பாட்டம் பறைனு யூஸ் பன்றாங்களா. நீங்க மட்டும் ஏன் எல்லாத்துக்கும் அவனுகளோட சிங்காரி மேளம், சென்டை மேளம்னு கூட்டிவந்து நம்மளோட பாரம்பரிய வாத்தியகாரவுங்க வகுத்துல அடிக்கிறிங்க. நம்ம ஊரு நையாண்டி மேளத்துக்கு ஈடா ஏதாவது இருக்கா… கீழ்கண்ட நாட்டுப்புறக்கலைகளில் எதை, எதை பார்த்துள்ளீர்கள்? சொல்லிட்டு தான் போங்களேன்..

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

தடம் மாறும் இளைஞர்கள்!

சமீப காலமாக இளைஞர்களின் போக்கு மிக மோசமாக மாறி இருப்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர முடிகிறது. சமீபத்திய சில செய்திகளின் மூலமாக இதை அறிந்திர முடிகிறது. எங்கள் ஊர் மிகச் சாதாரணமான சிறிய ஊர்தான்.மக்கள் மிக அதிகம் என்பதெல்லாம் இல்லை.தோராயமாக இவர் இன்னார் என்று அறிந்து கொள்ளும் ரகம் தான். அப்படியான ஊரில் , காவல் நிலையத்தின் அருகிலேயே பட்டப்பகலில் இருசக்கர வாகனம் ஒன்றில் பயணித்திருந்த மூன்று இளைஞர்கள் , நெடுஞ்சாலையில் வந்த காரை மறித்து கத்தியைக் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மருத்துவ மாஃபியா!

ஒரு மருத்துவரின் பதிவு. ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம்..(-டாக்டர்.பிரதீப் அகர்வால்) நான் ஒரு மருத்துவர் அதனால்தான் அனைத்து நேர்மையான மருத்துவர்களிடமும், முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன்.. மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எனில், மருத்துவர் கூறுகிறார், Streptokinase ஊசி போடுங்கள் என்று.. அதற்கு 9,000 ரூபாய் என்கின்றனர். ஆனால், ஊசியின் உண்மையான விலை ரூ. 700 – முதல் 900/- வரை மட்டுமே ஆனால் MRP ரூ. 9,000அப்பாவி மக்கள், என்ன செய்வார்கள் …. டைபாய்டு வந்ததெனில்,மொத்தம் 14 […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

அமீபா கற்றுத் தந்த பாடம்

அமீபா.இந்தப் பெயரைக் கேட்டதும் இப்போதைக்கு எல்லோருக்கும் நினைவில் வருவது இப்போதைய மூளை காய்ச்சல் ஏற்படுத்தும் அமீபா தான்.சபரிமலை செல்லும் பக்தர்களை மூக்கைப் பொத்திக் கொண்டு குளிக்கும்படியான உத்தரவுகளும், அமீபா காய்ச்சலுக்கான அறிகுறிகளும் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் இது சரிசெய்யக்கூடியது தான், யாரும் அந்தளவிற்கு பயப்பட வேண்டாம் என்ற செய்தி ஆறுதல்.இதே அமீபா என்ற பெயரைக் கேட்டதும் எனக்கு இன்னொரு விஷயமும் நினைவில் வந்தது. எந்த வகுப்பில் என்று தெரியவில்லை, அறிவியல் பாடத்தில் அமீபா படம் வரைந்து பாகம் […]

Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

கொஞ்சம் கேளு ஐயப்பா!

இன்று சமூக வலைதளத்தில் ஒரு பதிவைக் காண நேர்ந்தது.சபரி மலைக்கு வரும் மிக அதிகப்படியான கூட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்து ஒரு பதிவு. ஒழுக்கமான பக்தியோடு , 48 நாள் ஔ அதாவது ஒரு மண்டலம் நேர்த்தியாக விரதமிருந்து, சபரிமலைக்கு பக்திமார்க்கமாக மட்டுமே பக்தர்கள் சென்ற போது இவ்வளவு கூட்டமோ , ஆர்ப்பாட்டமோ இல்லை. இப்போது சும்மா பத்து நாளைக்கு விரதம், ஒரு வார விரதம், சபரிமலை பார்த்துவிட்டு அப்படியே குற்றாலத்தில் இன்பக் குளியல் என்று சபரிமலை […]

Categories
கருத்து நினைவுகள்

அந்த நாள் ஞாபகம்…

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே, நண்பனே! அன்று போல் இந்த நாள் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே ?என்று சிவாஜி கணேசனில் துவங்கி இன்று எஸ்.ஜே.சூர்யா வரை, வாழ்வில் பெரும்பாலானோர் வாழ்வின் கடந்த காலத்தை தான் இனிமை என்று சொல்வது எந்த விதத்திலும் மறுக்க முடியாத 100 சதவீத உண்மை. இந்த உலகில் உள்ள மனிதர்களிடம் திடீரென கடவுள் வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் பெரும்பாலானோரின் பதில் […]

Categories
கருத்து தகவல்

அறிவோம் ஆரோக்கியம்-2

உணவு முறை பற்றி நாம் எழுதிய கருத்தை ஒத்த ஒரு மருத்துவரின் கருத்து! நாம் ஏன் குண்டாகிறோம்?? நம்மில் பலர் இதை அனுபவத்தில் உணர்ந்திருப்போம் நான்லாம் காலேஜ் படிக்கும் போது எவ்ளோ சிலிம்மா இருந்தேன் தெரியுமா ?? மேரேஜ்க்கு அப்பறமா தான் தொப்பை போட்டு குண்டாகிட்டேன் என்போம். ஏன் நாம் குண்டாகிறோம்??? நாம் உட்கொள்ளும் உணவு முறை தான் வேறு என்ன இருக்க முடியும்?? நாம் உட்கொள்ளும் உணவில் பிரச்சனை இருக்கிறதா?? நம் தாத்தாக்கள் எல்லாம் இப்படி […]

Categories
கருத்து தகவல்

அறிந்து கொள்வோம்!

படித்ததில் பிடித்தது! சமீபத்தில் கிளினிக்கில்தாய் தனது தனையனுடன் என்னை சந்திக்க வந்திருந்தார். மகனுக்கு வயது ஆறு முடிந்து ஆறு மாதங்கள் கடந்திருக்க எடை 20 கிலோ கிராம் இருந்தான். காலையில் இருந்து காய்ச்சல்மூக்கொழுகல்மூக்கடைப்புஇருமல்தொண்டை வலிஉடல் வலிதலை வலிஉடல் சோர்வுஎனசீசனல் வைரஸ் ஜுரத்திற்கான பொருத்தத்தில் பத்தில் எட்டு பச்சக் என்று அவனிடம் பொருந்தி இருந்தன. “காலையில் இருந்த காய்ச்சல் அடிக்குது சார். பெரியாஸ்பத்திரி ( அரசு மருத்துவமனை) காய்ச்சல் மாத்திரை வீட்ல இருந்துச்சு.காலைல ஒன்னு கொடுத்தேன்.கேக்கல மதியம் பாதி […]