Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தித்திக்கும் தீபாவளி!

தீபாவளி.பண்டிகை என்றாலே மகிழ்ச்சி தான்.அதிலும் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம்.புத்தாடைகளும், மத்தாப்பும், பட்டாசும், பலகாரமும், என அது தரும் நினைவுகளும் மகிழ்ச்சியும் ஏராளம். குழந்தைப் பருவத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்து திகட்டத் திகட்டக் கொண்டாடும் பண்டிகை என்றால் அது தீபாவளி தான். அதிலும் குறிப்பாக 90 களின் குழந்தைகளுக்கு தீபாவளி என்பது தன் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத திகட்டாத இன்பத்தை அள்ளித் தந்த பண்டிகை தான். எனது வாழ்விலும் தீபாவளியைப் பற்றிய மகிழ்ச்சிப் பகிரல்கள் ஏராளம் உண்டு..இப்போது […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இன்னும் எத்தனை போலி?

டாக்டர் கிட்டயும் , வக்கீல் கிட்டயும் பொய் சொல்லக்கூடாதுனு சொல்லுவாங்க, ஆனா உங்ககிட்ட சொல்லக்கூடாத இன்னொன்னு, ” எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல”.கறந்துருவீங்களே? இப்படி கேப்டன் விஜயகாந்த் ரமணா படத்தில் ஒரு வசனம் பேசியிருப்பார். ஒரு தனியார் மருத்துவமனையில் நிகழும் மிகப்பெரிய அநியாயத்தை எதிர்த்து அவர் பேசிய வசனம் இது. அவரது குழந்தை சைக்கிளிலிருந்து கீழே விழுந்து அடிபட்டதற்காக மருத்துவமனை சென்ற அவருக்கு 40000 ரூபாய் வரை மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படும்பிறகு ஒரு இறந்தவரின் சடலத்தைக் கொண்டு சென்று, […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பசுந்தோல் போர்த்திய ஓநாய்கள்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். ஒழுக்கம் என்பது உயிரினும் மேலானது என்ற வள்ளுவனின் வாக்கு புத்தகத்திலும், தேர்வில் எழுதி இரண்டு மதிப்பெண் பெறுவதற்கும் தான் என்று மாறிப் போனது. கோவில், கடவுள், பக்தி , இறை நம்பிக்கை என்பது மனிதன் தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று பயந்து ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான்.ஆனால் இன்று அது ஒரு அன்றாட செயலாகவும், போட்டி மனப்பான்மையிலும், பகை மூட்டுவதற்கும் தான் பயன்படுகிறது. […]

Categories
கருத்து குட்டி கதை

நல்லதுக்குக் காலமில்லை.

படித்ததில் பிடித்தது! சமீபத்தில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்குப் பேசப் போயிருந்தேன்.பேசுவதற்கு முன்னால் என்னைத் தனி அறையில் உட்கார வைத்திருந்தார்கள்.பக்கத்தில் அமர்ந்திருந்தவர்தான் தமிழ் டீச்சராக இருக்க வேண்டும். கொஞ்ச நேரம் தயக்கத்தோடு பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று என்னைப் பார்த்து, “சார் எங்க ஸ்டூடன்ட்ஸ் லிட்டரரி காம்பெடிசன்ல சூப்பரா கவிதை எழுதியிருக்காங்க . படிக்கிறீங்களா?” என்றார். எனக்கும் பொழுது போக வேண்டுமென்பதால் ” கொடுங்க” என்று சுரத்தில்லாமல் சொன்னேன். அவர் வெளியே போய் நீலநிற ஃபைலை எடுத்து வந்தார். […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

கனவுகளை சிதைத்த விபத்து!

நாம் சரஸ்வதி பூஜை அன்று வாகனங்களுக்குத் தேவை பூஜை மட்டுமல்ல, பராமரிப்பும் தான் என்று எழுதியிருந்தோம். அதை நிரூபிக்கும் விதமாக நெஞ்சை உலுக்கும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. கனவுகளோடு வாழ்க்கையை வாழக் காத்திருக்கும் நான்கு இளைஞர்களின் வாழ்வை முடித்திருக்கிறது பாழாய்ப்போன தறிகெட்டு ஓடிய லாரி ஒன்று. ஓசூர் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.முன்னே சென்ற காரின் மீது தறிகெட்டு ஓடிய லாரி மோதி அந்தக்கார் அதற்கு முன்னே சென்ற ஒரு சரக்கு வாகனத்தில் மோத, காரில் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

நம் தங்கம், நம் உரிமை!

கையில இருக்கு தங்கம், கவலை ஏன்டா சிங்கம்னு ஒரு விளம்பரம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரொம்பப் பிரபலமா ஒளிபரப்பு ஆனது. அந்த விளம்பரம் வரும் முன்பே அது தான் நிலை. கையில தங்கம் இருக்கு என்ற தைரியம் எப்போதுமே இந்திய நடுத்தரக் குடும்ப மக்களுக்கு உண்டு. எனது சொந்த அனுபவத்தில், சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு கூட, நான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவமனை செலவு பற்றி நான் கவலை இல்லாமல் சொகுசாக மருத்துவ உபசரிப்புகளை […]

Categories
இலக்கியம் கருத்து

அன்றும், இன்றும் , என்றும் திருக்குறள்!

திருக்குறளில் நாம் எவ்வளவோ நல்ல கருத்துகளைக் கேட்டு கடந்து வந்திருப்போம். 2000 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு நூலை , அதாவது 2000 ஆண்டுக்குப் பிறகும் இன்றைய சூழலில் பயன்படும் கருத்துகளைக் கொண்ட நூலை எப்படி எழுதியிருக்க முடியும் என்று தினம் தினம் நாம் அந்த நூலை நினைத்து ஆச்சரியப்படும் அளவிற்கு நிறைய விஷயங்கள் அதனுள் பொதிந்து கிடக்கிறது. இன்றைய தினத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களைப் பார்க்கலாமா? முதல் விஷயம். ஏய் தாய்க்கெழவி நீளமா பேசாத!அதாவது சொல்ல […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

நீதியின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது?

ஒரு குற்றவாளியைப் பிடிப்பது முக்கியமல்ல, அவர் என்ன குற்றம் செய்தாலும் பரவாயில்லை.ஆனால் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தகுந்த சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாவிட்டால், அவர் விடுவிக்கப்படுவார் என்பது சாதகமா? பாதகமா? ஒரு சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து தூக்கி எறிந்து மறுநாள் அதே இடத்திற்குச் சென்று அந்தக் குழந்தையின் சடலத்தை எரித்தார் என்று பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டு, கீழ் நீதிமன்றத்திலும் , உயர் நீதிமன்றத்திலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தண்டனைக் குற்றவாளி தன்னுடைய பணபலத்தால் […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

அரசியல் எனும் வியாபாரம்!

அரசியல் என்பது மக்கள் சேவை, மக்களின் நலன், பொது சிந்தனை , பொது வாழ்வு என்பதெல்லாம் மாறி வியாபாரமாகிப் போனது.10 ரூ போட்டு 100 ரூ சம்பாதக்க, பதவி போகத்தை அனுபவிக்கத் தான் இன்றைய அரசியல்வாதிகளும் அரசியலும். உயர்மட்டத்தில் துவங்கி அடிமட்டம் வரை இன்று இதுதான் நிலை. ஒரு காலத்தில் கொள்கை ரீதியான அரசியல் முன்னெடுப்பு, கொள்கை ஈர்ப்பு, பொது சிந்தனை என்ற காரணத்திற்காக பணக்காரர்கள் முதல் பாமரன் வரை அரசியலில் ஈடுபட்டனர். அவரவர் தாங்கள் உழைத்த […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

இப்படி இம்சை செய்யலாமா?

ஊருக்குப் போய் வரும் வருத்தத்தைப் பற்றிய கட்டுரையை முந்தைய நாள் எழுதியிருந்தோம்.இந்த வருத்தத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக பேருந்து கட்டணங்கள், கூட்ட நெரிசல், வாடகைக் கார் ஆட்டோ கட்டணங்கள் நம்மை மேலும் பாடாய்ப்படுத்துவது உண்மை தான். நான் கல்லூரியில் படித்த காலத்தில் ஊரிலிருந்து கோவை செல்வது ஒரு பெரிய அக்கப்போர் என்றால் கோவை சென்ற பிறகு அங்கிருந்து எனது கல்லூரிக்கு மாநகரப்பேருந்தில் செல்வது அதை விடக்கொடூரமானது. ஊரிலிருந்து கோவை செல்லும் போதாவது, சில நேரம் […]