Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

மதங்களைக் கடந்து அன்பு பரவட்டும்.

இன்று நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு சம்பவம், காஷ்மீரில் நடந்த படுகொலைகள் தான்.சுற்றுலா சென்ற பயணிகளை, லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான தி ரெஸிடன்ட் ப்ரெண்ட்ஸ் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதிகள் எந்த மதம் என்று கேட்டுக் கேட்டு சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். இது இஸ்லாமிய தீவிரவாதிகளால் இந்து மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட அநியாய தாக்குதல் என்று பேசி, ஒரு மதத்திற்கு எதிராக இந்த பயங்கரவாத சம்பவத்தை அடிக்கோளிடுவது முறையல்ல. இஸ்லாமிய […]

Categories
சிறுதுணுக்கு

அப்பா- அன்பின் வெளிப்பாடு.

சொல்லித் தீர்க்க இயலுமோ?எழுதி தான் விளக்க இயலுமோ? அன்பை வெளிப்படுத்த ஆயிரமாயிரம் வழிமுறைகள் உண்டு. பசியிலிருப்பவனுக்கு உணவால் அன்பைப் பரிமாறலாம். சோகத்தில் இருப்பவனுக்கு ஆறுதலால் அன்பைப் பரிமாறலாம். கடனில் இருப்பவனுக்கு பண உதவியினால் அன்பைப் பரிமாறலாம். நோயிலிருப்பவனுக்கு மருத்துவத்தால் அன்பைப் பரிமாறலாம். கோபத்தினால் யாருக்கேனும் அன்பைப் பரிமாற இயலுமோ? சற்று வியப்பாகத்தானே இருக்கிறது? ஆனால் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தன் அன்பை கோபத்தால் பரிமாற ஒரு ஆள் இருக்கிறார்.“அப்பா” தியாகம் என்ற சொல்லை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வழிமுறை […]

Categories
கருத்து குட்டி கதை தற்கால நிகழ்வுகள்

தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்.

நண்பர்கள் இருவர் சித்திரை மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில். தான் தங்கியிருக்கும் அறையை சுத்தம் செய்து விட்டு, குளித்து விட்டு நல்ல பசியுடன் கடைக்குச் சென்று பார்த்தால் கூட்டம். அமர்ந்து சாப்பிட இடம் கிடைக்காது என்று தெரிந்து உணவுப் பொட்டலம் வாங்கிக்கொண்டு அறைக்குச் செல்கிறார்கள். நல்ல பசி என்பதால், பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் 65 என வகை வகையாக வாங்கிச் சென்றார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பாசத்துடன் பகிர்ந்து சாப்பிடுவதைப்பார்த்தால்… அடேயப்பா, இதுவல்லவா நட்பு? சாப்பிட்டு முடியும் […]

Categories
கருத்து

நட்பும், உறவும், சுற்றமும்.

நண்பர்கள். ஒரு வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள். அர்த்தங்கள் மட்டுமல்ல. அன்பும் அளவளாவியது. தாய் தகப்பனின் அன்புக்கும் ஆதரவுக்கும் ஈடாக, சகோதர, சகோதரிகளின் அக்கறைக்கு ஈடாக அன்பு காட்டி ஆதரவு செலுத்தும் நல் உள்ளங்கள். ஆயிரம் சொந்தங்களுக்கு ஈடானவர்கள்.சில நேரங்களில் அப்பா செய்ய வேண்டிய கடமைகளை செய்பவர்கள். சில நேரங்களில் அம்மா காட்ட வேண்டிய பாசத்தை காட்டுபவர்கள்.சில நேரங்களில் ஆசான் கொடுக்க வேண்டிய அறிவுரைகளைக் கொடுப்பவர்கள். ஆபத்தில் நம்மைக் காக்க முதல் ஆளாக நிற்பவர்கள். நம் பிரச்சினைய அவர் […]

Categories
கருத்து

ஆண்- பெண் நட்பு

ஆண் – பெண் நட்பு. ஆரோக்கியமான விஷயம். உரிமை காட்டும், உயிரைக் கொடுக்கும் ஆண் நண்பர்கள் உயிர் நட்புதான் என்றாலும்,பெண் தோழி என்பது ஆண்களுக்கு ஒலி கிரீடம் தான். டேய் என்னடா பண்ற சாப்டியா? வீட்ல அம்மா எப்படி இருக்காங்க? என்ன செய்றாங்க? அவங்களுக்கு உதவி பண்ணு ஒழுங்கா சாப்புடு என்று அக்கறையாகப் பேசும் பெண் தோழிகள் மனதிற்கு சுகம் தான்..என்றுமே இனிமை தான். ஆயிரம் ஆண் நண்பர்கள் இருந்தாலும் ஒரு ஆணுக்கோ, ஆயிரம் பெண் தோழிகள் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

முன்னாள் உயர் கல்வித்துறையா? கலவித்துறையா?

இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. என்ற திருக்குறளை அன்றாடம் சாமானியனும் மனதில் வைத்துக்கொண்டால் சொல்லாடல் எப்போதுமே சுகம் தான். சாமானியனுக்கே சொல்லாடல் அதாவது பேசும் மொழி என்பது முக்கியமானதாகி விட்டது.நாம் பேசும் வார்த்தைகளின் இனிமை தான் நம் எதிரில் இருப்பவரிடம் நமக்கான அடையாளத்தைக் காண்பிக்கும் ஒளித்திரை. அப்படி இருக்கும் போது ஒரு மாநிலத்தின் முக்கிய பிரிவில் மந்திரி பதவி வகிக்கும் அல்லது அந்தப் பதவிக்கான தகுதியுடைய ஒரு மூத்த கட்சி உறுப்பினர் எப்படிப் பேச […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

ஐயையோ அல்ல- ஹய்யா கோடை விடுமுறை

கோடை விடுமுறை. வரப்போகுது கோடை விடுமுறை.துவங்கிவிட்டது பெற்றோர்களுக்குத் தலைவலி. காலையில் எழுப்பி, குளிப்பாட்டி, சோறு ஊட்டி, பள்ளிக்கூடம் அனுப்புவதைக் காட்டிலும் கடினமான காரியம் கோடை விடுமுறையில் இதுகளைச் சமாளிப்பது. என்ன செய்யலாம்?பேசாம 2 மாசம் தாத்தா, பாட்டிக்கிட்ட அனுப்பிவிடலாமா? நோ நோ மம்மி பாவம். இல்ல இவனுங்கள அவங்க அத்தை வீட்டுக்கு அனுப்பிரலாமா?அவ கெடந்து அனுபவிக்கட்டும். இல்ல இல்ல, நம்ம இதுகள பத்து நாளைக்கு அனுப்பினா, அவ அந்த ரெண்டு பிசாசுகளையும் 20 நாளைக்கு இங்க அனுப்பிருவா. […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

போதையில் தடுமாறும் பாதை

போதை. இந்த வார்த்தையைக் கேட்டவுடனே நாம் யூகிக்கும் இணைப்புச் சொற்கள் மது, கஞ்சா, சிகரெட், புகையிலை, இப்போது, கொக்கைன், ஹெராயின், போன்றைவையும் இணைப்பில் சேர்ந்து விட்டன. ஆம் தற்போதைய தேதியில் இவையும் புழக்கத்தில் இணைந்து விட்டதாகச் செய்தி. இதிலும் தரம் உண்டு. கஞ்சா அடிப்பவன் மது போதைக்கு அடிமையானவனை விடக் கேவலமானவன்.மது குடிக்கும் போதைக் கைகள் கூட, கஞ்சா அடிப்பவர்களைக் கண்டால் , அவன் கஞ்சாக்குடிக்கிப் பய என்று வசைபாடுவார்கள். காரணம் மது போதையை விட வீரிமயான […]

Categories
கருத்து சிறுதுணுக்கு

துவண்டு விடாதே !

எத்தனை தூரமாயினும் மழைத்துளி மண்ணை அடையும். எத்தனை பள்ளம் மேடைக்கடந்தாலும் நதி ஆழியை அடையும். எத்தனை இன்னல் வந்தாலும் மனம் இறுதியில் மகிழ்ச்சி அடையும். வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் என்பது இரவு பகல் போலத்தானே? இரவின்றி பகலுக்கு ஏது மரியாதை? எப்படியும் விடியும். நமக்கும் தான். உதிக்க வேண்டியது சூரியனல்ல. பூமி தான் சூரியனைச்சுற்றி அடைய வேண்டும். சோகங்கள் வெறும்  கருமேகங்கள் போல. குளிர்ந்து மகிழ்ச்சியை மழையாகப்பொழியும். காற்று எனும் முயற்சி இருக்கும் வரை. துண்டுவிடாதே மனிதா! […]

Categories
கருத்து

மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பல்ல.

பெரியோர்களே தாய்மார்களே! கண்டிப்பா இதப் படிங்க. புள்ளைங்கள நிறைய மார்க் வாங்க சொல்லி வற்புறுத்தாதீங்க. நிறைய மார்க் வாங்கினா தான் நல்லா வாழலாம், இல்லாட்டி வாழவே முடியாதுனு சொல்லி பயமுறுத்தாதீங்க. வரப்போகும் தேர்வு முடிவன்று உங்கள் பிள்ளைகள் எதிர்பார்த்த அளவில் மதிப்பெண்கள் வாங்காவிட்டால் கூட தயவு செய்து சபிக்கவோ, வருத்தம் கொள்ளவோ வேண்டாம். தேர்ச்சி பெற்றாலே போதும். பிழைத்துக் கொள்ளலாம். சொல்லப்போனால் நல்ல மார்க் வாங்கிய பிள்ளைகள் பலர் இன்று சமுதாயத்தில் ஒரு பயத்துடனே வாழ்க்கையை நடத்த […]