Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

நல்லதைப் பாராட்டு – காட்பரீ விளம்பரம் உணர்த்தும் உண்மை

அறிவை, அன்பைப் பகிர மொழி அவசியமில்லை.ஒரு செயலோ, சைகையோ அல்லது ஒரு புன்னகையோ கூடப் போதும்தான். ஐந்தறிவு கொண்ட ஜீவன்களிடம் நாமென்ன பேசிப் பழகியா அன்பைப் பகிர்கிறோம்? ஐந்தறிவென்ன நம்மில் பலர் உயிர் இல்லாத வாகனங்கள் உட்பட சில பொருட்களின் மீதும் கூட பேரன்பு கொண்டிருக்கலாம். இவற்றுக்கெல்லாம் மொழி அவசியமில்லை. உலகில் மொழி வரும் முன்பே, அன்பும் அறிவும் பகிரப்பட்டு தான் இருந்திருக்கிறது. கும்மிடிப்பூண்டி தாண்டினால் சோறு கிடைக்காது, ஏக் சாய் தேதோ என ஹிந்தி பேசத் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தேவையற்ற நுகர்வு தெருவில் தான் சேரும்.

குழம்ப வேண்டாம். நிறுத்துமிடமில்லாமல் இல்லாமல் கார் வாங்கக் கூடாது என்ற அரசாங்க நடவடிக்கை பற்றிய சிந்தனை. சமீபத்திய பகட்டுக் கட்டுரையில் நாம் பேசிய பல விஷயங்களைப் போல இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. கார் வாங்குறீங்களே?அத நிறுத்த இடமிருக்கா? இந்தக் கேள்வியை அது வரை யாருமே கேட்டதில்லை. இது வரை மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இவ்வளவு தான்.உங்களுக்கு சிலர் எவளோ, பான் கார்டு , ஆதார் கார்டு கொடுங்க, 0 டவுன் பேமண்ட்ல அடுத்த மாசம் கார் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பகட்டா, உயிரா? சிந்திப்போமா?

வரவு எட்டணா, செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் குந்தணா என்ற பாடலையும், கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல என்ற பாடல்கள் வெளிவந்து பல காலம் ஆகி விட்டதால் நாமும் அதை மறந்து விட்டோம். சிக்கனம் என்ற வார்த்தை கிட்டத்தட்ட கஞ்சன் என்ற ரீதியில் கேலிக்குரிய வார்த்தையாகவே மாறிவிட்டது. ஒருவன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதைப் போல, எவ்வளவு செலவு செய்கிறான் என்பதிலும் பகட்டுப் போட்டி வந்து விட்டது. முன்பு எதிர் வீடு […]

Categories
கருத்து நினைவுகள்

வாசிப்பையும் நேசிப்போமே! – நினைவுகளைப் பற்றி – ஆசிரியர் குறிப்பு

இரவில் தூங்கும் முன் கதை சொல்லி, அறிவுரை சொல்லி, வியாக்கியானங்கள் பேசி தூங்க வைக்கும் தாத்தா பாட்டிகள் இங்கே இப்போது இல்லை. தாத்தாவும் ஃபேஸ்புக்கில் ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார், பாட்டியும் கூட சன் டிவியிலோ, விஜய் டிவியிலோ சீரியல் பார்த்துக்கொண்டிருக்கிறது. பிள்ளைகள் ஆங்ரி பேர்டாகவோ, டெம்பிள் ரன்னராகவோ மாறி ஒரு மாதிரியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கதையை வாய் வழியாகச் சொல்லி செவி வழியாகக் கேட்ட போது குழந்தைகளிடையே இருந்த சிந்திக்கும், உருவகப்படுத்தும், கவனிக்கும் திறமை இப்போது […]

Categories
கருத்து

பறவைகளுக்கு நீர் வைக்கலாமே?

மனிதா நான் பறவை. என்ன பறவை என்று கேட்கிறாயா? என் பெயர் சொன்னால் மட்டும் கண்டுபிடித்து விடுவாயா? காகம், குருவி, புறா, கழுகு போன்ற சில பறவைகள் தான் உனக்குப் பரிச்சயம். ஏன் அது கூடத் தெரியாமல் சிலர் இருக்கலாம். எங்களுள் ஆயிரக்கணக்கான இனம் உண்டு. எங்கோ மறைந்து விட்டன என் இனங்கள். ஆமாம் நாங்களும் இங்கே இந்த பொதுப்படையான பூமியிலே நிம்மதியாகப் பறந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் தான் இருந்தோம். ஏதேதோ மாற்றங்கள் எங்கள் இனங்களை […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

வகுப்பறையும், ஆசிரியர்களும்

மாதா, பிதா, குரு, தெய்வம். ஒரு மனிதனுக்கு மாதா, பிதாவை அடுத்து முக்கியமானவர் அவரது குரு. ஒரு குழந்தை வளர்ந்து சமுதாயத்தில் எப்படியான ஆளாக உருவாகிறது என்பது அந்த குழந்தையின் அப்பா, அம்மாவைத் தாண்டி அதன் ஆசிரியர்களின் கைகளிலும் உள்ளது. ஆசிரியர்களால் கண்டிக்கப்படாத மாணவன் பிற்காலத்தில் காவலர்களால் கண்டிக்கப்படுவான் என்ற சொல்லாடல் உண்டு. ஒரு ஆசிரியர் என்பவர் ஒரு குழந்தையின் ஒழுக்கமான வளர்ச்சிக்கு மிக முக்கிய அடித்தளமானவர். குழந்தைகள் தனது மொத்த உழைக்கும் தருணத்தையும், அதாவது பகல் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்

நமது ஊர்களில் ஒரு பிரபலமான சொல்லாடல் உண்டு.வெல்லம் சூப்புரது ஒருத்தன், வெரல சப்புறது ஒருத்தன் னு. இந்த கட்டுரையில் பேசப்போகும் விஷயத்திற்கு இந்த சொல்லாடல் சொல்லித் துவங்குவது என்பது தவறு தான். ஆனால் சமுதாயம் போகும் போக்கில் இப்படி சில விஷயங்களைத் தாறுமாறாக சாடை பேசாமல், சாடாமல் இருக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு செய்தி. ராசிபுரத்தில் ஒரு 9 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவனால் தாக்கப்பட்டு இறந்து விட்டான். இது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய செய்தி […]

Categories
சினிமா

D Ragavan -> Dragon  – திரை விமர்சனம்.

இந்த வாரம் வெளியான படங்கள் எல்லாமே பெரிய நடிகர்களோ, எதிர்பார்ப்போ, விளம்பரங்களோ இல்லாமல், தன்னை நம்பி வெளியானவை.அதாவது நல்ல கதைக்களம், திரைக்கதை அமைப்பு உடையவை போல. மிகப்பெரிய செலவு, விளம்பரம் இல்லாமல் இது அது மாதிரி தான் இருக்கும் போல என்று எதிர்பார்ப்புக் குறைவாக வந்து இன்று பல ரசிகர்களாலும் பத்துக்கு பத்து மதிப்பெண் வழங்கப்படும் படம் டிராகன். இந்தப்படத்தின் இயக்குனர் மாரிமுத்து அவர்கள், கதைக்கு மெனக்கெடவில்லை. தனது முந்தைய படமான ஓ மை கடவுளே படத்தின் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

சமுதாயம் செய்த கூட்டு பாலியல் வன்முறை

கோவையில் ஒரு 17 வயது பெண் கூட்டு பாலியல் வன்முறை. சமீபத்தில் கூட நம் பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்னு பாலியல் குற்றங்களுக்கு தண்டனை விதத்தில் இது குறையுமா என்று! அது ஒரு பார்வை.குற்றம் நடந்த பிறகான பார்வை. ஆனால்“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்” என்ற வள்ளுவனின் வாக்கை நாம் நினைக்காமல் விட்டது ஏனோ? ஆம், இந்தக்கூட்டுப் பாலியல் வன்முறை ஆள் அரவரமற்ற இரவிலோ, காட்டினுள்ளோ நடைபெறவில்லை. […]

Categories
தற்கால நிகழ்வுகள்

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் – நிறைவேறுமா?

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு அளித்தது இல்லாமல், அவரைக் கீழே தள்ளி விடப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. அந்தப்பெண்ணுக்கு மருத்துவ உதவியும், நஷ்ட ஈடும் அரசாங்கம் தர முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரிய விஷயம் தான். ஆனால் அந்த தண்டனையைச் செய்த நபருக்கு அளிக்கப்படும் தண்டனை என்பது இனி இதுபோன்ற செயல்களைச் செய்ய யாரும் துணிந்திரா வண்ணம் இருக்க வேண்டும். அதை பொதுவெளியில் யாரும் மறக்காதபடி செய்ய வேண்டும்! ஒரு பெண்ணை அவளது விருப்பமின்றி பாலியல் சீண்டல் செய்வதற்கே […]