Categories
கருத்து குட்டி கதை தகவல் தற்கால நிகழ்வுகள்

பேராசை பெருநஷ்டம்- இணைய மோசடிக் கதைகள்

பேராசை பெருநஷ்டம் இதனை விளக்க வழக்கமாக சொல்லப்படும் கதைகளில் முன்னொரு காலத்தில் ஒரு வியாபாரி இருந்தார் என்றும், முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒருவர் வீட்டில் வளர்ந்த தங்க முட்டையிடும் வாத்து என்றும் கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போதெல்லாம் இதை விளக்குவதற்கு முன்னொரு காலக் கதை எல்லாம் தேவையில்லை. தினம் தினம் செய்திகளில் பேராசையால் பெருநஷ்டமடைந்த பல மக்களை மாறி மாறி பார்த்துக் கொண்டு்தான் இருக்கிறோம். ஆன்லைன் மோசடி, வேலை வாங்கித் தருவதாக மோசடி, பங்கு பரிவர்த்தனை முதலீடு […]

Categories
இலக்கியம் குட்டி கதை தமிழ் பாடல் வரலாறு

உலகின் முன்னோடி தமிழன் – நீதிநெறி வரலாறு

தமிழக மன்னர்களின் நீதிநெறிமுறைகள் பற்றிய சிறிய தகவல்கள். கண்ணகி கோவலனுக்காக வழக்காடிய போது, பாண்டிய அரசன் நெடுஞ்செழியன் தன் தவறை உணர்ந்து கொண்டு, உடனடியாகத் தீர்ப்புக் கூறி அந்த இடத்திலேயே யானே கள்வன் என்று கூறி மரண தண்டனையை ஏற்றக் கொண்டான் என்பதை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம். இதில் நமக்குத் தெரியாத செய்தி என்னவென்றால் உலக வரலாற்றிலேயே ஒரு நீதிபதி, தன்னைத்தானே குற்றவாளி (யானே கள்வன்) என்று அறிவித்துக் கொண்ட முதல் வழக்கு இது தான். கதை 2: […]

Categories
கருத்து தமிழ்

சிசேரியன் எனும் அறுவை அரக்கன்

சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெறுவதில் தென் மாநிலங்களான, தெலுங்கானா, தமிழகம் மற்றும் ஆந்திரா முதலிடம். முன்பெல்லாம் பிரசவம் என்றால் ஒரு நாலு பெண்கள் வீடுகளில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை சுற்றி மறைத்து, சுடுதண்ணீர் எடுத்து, ஏதோ செய்வார்கள், குழந்தை பிறக்கும், தொப்புள் கொடி அறுக்கப்பட்டு , குழந்தையை சுத்தம் செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள். காலப்போக்கில் மருத்துவ வசதிகள் அதிகரித்த பிறகு, பிரசவம் என்பது வீடுகளில் செய்யப்படும் விஷயமல்ல.அதில் […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

பக்தி என்பது என்ன?

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார் குறள் 10 இறைவனின் திருவடிகளை அடைந்தவரால் மட்டுமே இந்தப்பிறவி எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க இயலும் என்பது வள்ளுவர் வாக்கு. இறைவனின் திருவடியை அடைவது எப்படி? கள்ளம்கபடமில்லா பக்தியும், சக உயிர்களுக்கு நாம் செய்யும் உதவியும், நாம் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை நெறியும் தான் நம்மை அந்த இறைவனின் திருவடியில் சேர்க்கிறது. ஒரு விஷயத்தை நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ளும் பட்சத்தில் பக்தி என்பது என்ன என்பதை […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஒரு உப்புக்கல்லுக்குப் பெறாத ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல்.

ஒரு நல்ல தலைவன் என்பவன் கஷ்டம் என்று வரும்போது மக்களோடு துணை நிற்பவனே! அதாவது துணை நிற்பது என்பது வெறும் நிவாரணத்தொகை வழங்குவது, இலவச அரிசி பருப்பு, மளிகை சாமான் என்று கேவலமான நிலைக்குச் சென்று விட்டது. ஒரு கப்பல் மூழ்குகிறது என்றால் அதில் இருக்கும், ஊழியர்கள், பயணிகள் என்று முடிந்த வரை பெரும்பாலான ஆட்களைக் காப்பாற்றி விட்டு, கப்பலோடு கப்பலாக மூழ்கிப் போவதோ, அல்லது கடைசி ஆளாக தப்பித்து உயிர்பிழைப்பதோ என்று செய்பவர்தான் கப்பலின் உண்மையான […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

கலவரத் திருவிழா

கலவரமான கோவை உணவுத் திருவிழா! கோவையில் சென்ற வார இறுதி நாட்களில் கொடிசியா வளாகத்தில் உணவுத்திருவிழா என்ற விளம்பரம் மிகவும் பிரபலமாக இணையத்தில் பரவி இருந்தது. கிட்டதட்ட 499 உணவு வகைகளை வெறும் 799 ரூ கொடுத்தால் உண்டு மகிழலாம் என்றும், அது போக, பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இருக்கும் என்றும் மிகப் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டது. நாமும் கூட அந்த விளம்பரத்தைக் கண்டிருக்கக் கூடும். வெறும் 800 ரூபாயில் 499 உணவு வகைகளை உண்டு மகிழப்போகிறோம் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

அலட்சியத்தின் விளைவு

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில் பயப்பட வேண்டிய சில விஷயங்களுக்கு பயப்படாமல் அலட்சியம் காட்டுவது, மூடத்தனம். அந்த அலட்சியத்தின் விளைவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தனை அறிவியல் முன்னேற்றம் அடைந்த காலத்திலும், ரயில்வே க்ராஸிங் அதாவது தண்டாவளத்தைக் கடக்கும் போது ரயிலில் அடிபட்டு மனிதர்கள் இறந்து போகிறார்கள் என்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று. அத்தனை துல்லியமான தகவல் வந்து, நேரத்திற்கு கதவுகள் முடப்பட்ட பிறகும், ரயில் வர தாமதமாகும் சிறிது நேரத்தில் […]

Categories
கருத்து தமிழ்

ஊழியரா?வீட்டு நாயா? நமது வேலைக் கலாச்சாரம் சரியா?

காலை எழுந்தவுடன் படிப்பு, பின்புகனிவு கொடுக்கும் நல்ல பாட்டு,மாலை முழுதும் விளையாட்டு என்று பாரதியார் பாடியது பாப்பாக்களுக்கு மட்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கத் துவங்கி விட்டார்களோ தெரியவில்லை. பிரத்தேயமாக தனியார் நிறுவனங்களில், தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்தப்பதிவு. வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற ஒரு வாக்கியம் ஏன் சொல்லப்படுகிறது என்பதை உணராமல், வீட்டுநாய்கள் போல 24 மணிநேரமும் வேலை செய்வதைச் சாடித்தான் இந்தப்பதிவு. ஆம். இன்றைய சூழலில் பெரும்பாலான தனியார் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

இருதலைக் கொள்ளி எறும்பாக.. திமுக எனும் அரசியல் சாம்ராட்.

இருதலைக் கொள்ளி என்றால் என்ன? அதாவது இரு பக்கமும் எரியும் தீயால் கொள்ளியின் நடுவில் சிக்கிய எறும்பு தப்ப வழியின்றி மாட்டிக்கொள்வது போல துன்பம் சூழ்ந்து தப்ப வழியின்றி மாட்டிக்கொள்பவரை அப்படி உவமானமாகச் சொல்வர். சரி விஷயத்திற்கு வருவோம். நம் அனைவருக்கும் நன்கு அறியப்பட்ட விஷயம், திமுகவின் மூடநம்பிக்கை மறுப்புக் கோட்பாடு. திமுக பெரியார் வழியைப் பின்பற்றும் கட்சி என்பதால், ஆன்மீகத்தின் பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகளை அது காலங்காலமாக கடுமையாக எதிர்த்து வருகிறது. சொல்லப்போனால் இது கடவுள் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

பழுதடைந்த நிர்வாகமும், பலியான உயிர்களும்.

சமீபத்தில் நாம் அனைவரும் கேள்விப்பட்டு, சிலர் வருத்தமும், சிலர் கேலிக்கூத்தும் செய்த செய்தி, உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூகுள் மேப், வழிகாட்டுதலின் பேரில், மகிழுந்தில் சென்ற மூவர், பாலத்திலிருந்து, மிகிழுந்து கவிழ்ந்து விழுந்து பலி. இதில் மூன்று உயிர் போய்விட்டதே எனப்பலர் வருத்தப்பட்டாலும், சிலர் இந்த செய்தி வெளியான இணையப்பக்கத்தில் சிரித்தும் வைத்திருக்கிறார்கள்.மூன்று உயிர் பலியானதைத் தாண்டி எதை எண்ணி சிரிக்கத் தோன்றியதோ தெரியவில்லை. வேறு சிலர் இது அந்த மாநிலத்தின் அரசியல் கட்சியின் நிர்வாகத்திறமை சரியால்லாத காரணத்தால் […]