Categories
குட்டி கதை தமிழ்

வடிவேலு, பார்த்திபன் வசன உருவகம் – இராமயணம் சஞ்சீவி மூலிகை காட்சி

அனுமனாக பார்த்திபன். ராமர் வேடத்தில் வடிவேலு. ராமர்: டேய் அனுமாரு இங்க வாடா, நம்ம ஆளுங்களையும் என் தம்பியையும் காப்பாத்தனும்னா, சஞ்சீவி மலையில இருக்கிற மூலிகைய புடுங்கிட்டு வரனும் டா. கொஞ்சம் சீக்கிரம் புடுங்கிட்டு வாடா! அனுமன்: (முணுமுணுத்தபடி) என்னைய பாத்தா பச்செல புடிங்கி மாதிரி தெரியுதா? ராமர்:யப்பா நீதான் நம்ம டீம்ல நான் என்ன சொன்னாலும் செய்வ, அதனால தான் உன்கிட்ட சொல்றேன். கொஞ்சம் கோச்சுக்காம, குரங்கு சேட்டையெல்லாம் செய்யாம, தயவு செஞ்சு கொஞ்சம் சீக்கிரம் […]

Categories
குட்டி கதை தமிழ்

விருந்தோம்பல் – குறளுடன் குட்டிக்கதைகள்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல் குறள் 84 மேற்கண்ட திருக்குறளின் பொருளானது, வீட்டிற்கு வந்தவர்களுக்கு மலர்ந்த முகத்துடன் நல்ல விருந்தோம்பல் செய்பவர்களின் இல்லத்திலே திருமகள் குடியிருப்பாள். இந்தக் குறளை விளக்கும் விதமாக ஒரு குட்டிக் கதை உள்ளது. இந்தக் கதையின் காலம் தமிழ் கடைச்சங்க காலம் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு ஊரில் ஒரு நல்ல மனிதர் வசித்து வந்தார். அவர் ஒரு வியாபாரி, அவ்வப்போது வெளியூர் பயணங்கள் செல்ல நேர்ந்த காரணத்தால் அவருக்கு […]

Categories
குட்டி கதை தமிழ் தற்கால நிகழ்வுகள்

உருவகக் கதை: தவெக தலைவருக்கு வந்த சோதனை

இன்றைய நாட்களில் மீம்கள் என்ற வகையிலான கேலி உருவகங்கள் அதிகப்படியான மக்களால் விரும்பப்படுகிறது. ஒரு திரைப்படத்தின் பிரபலமான காட்சியை வேறொரு நிகழ்வுக்கு உருவகப்படுத்தி கேலி செய்வது நடைமுறை. முன்பும் இது போன்ற கேலி செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் அது கேலிச் சித்திரங்களாகவோ அல்லது எழுத்து வடிவிலோ இருந்தது. உதாரணமாக பாரதியார் நடத்திய இதழில் கேலிச்சித்திரங்கள் பிரபலம். சமீபத்திய இந்து பத்திரிக்கை வரை நாம் அதைக் கண்டிருக்கலாம். அதேபோல, துக்ளக் என்ற வார இதழில் சோ அவர்கள் […]

Categories
சிறுகதை சினிமா தமிழ்

தீதும் நன்றும் பிறர்தரவாரா – சிறுகதை

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற புறநானூறு நூலின் வரிகளை முன்வைக்கும் கதை. இது கற்பனை கதையோ அல்லது வாசித்த கதையோ அல்ல. நான் கண்ட சினிமாவை கதையாக்கி இந்த கருத்தையும் முன்வைக்கிறேன். பேபி என்ற சினிமா. பாரதிராஜாவின் மகன் மனோஜ் கதாநாயகனாக நடித்திருந்த படம். படத்தின் கதை இதுதான். மனோஜின் மனைவி தனது முதல் பிரசவத்தில் பிறக்கும் குழந்தை இறந்து பிறப்பதால் சற்று மனநிலை பாதிப்புக்குள்ளாகிறார். பெரிய பாதிப்பாக இல்லாத காரணத்தால் குணமாகி இரண்டாவது முறை […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

சாலையோர காதல் கதை

ஒரு சிறிய உருவகப்படுத்தப்பட்ட கற்பனை காதல் கதை. திவ்யா – அழகி, யாருக்கும் பார்த்த உடனேயே பிடித்துவிடும் அவளை. பாலாஜி- கொஞ்சம் பழமைவாதி, 90 ஸ் ஸ்டைலிலானவன். இன்னும் கூட அவனைப்பார்த்தால் 90 ஸ் பீலிங் ஒட்டிக்கொள்ளும். எங்கள் ஏரியாவின் முதல் முக்கிய சாலை வழியாக வந்து இரண்டாவது முக்கிய சாலையை கடந்து, எங்கோ சென்று மறைந்து மீண்டும் வந்த வழியே செல்வது திவ்யாவின் அன்றாட வழக்கம்.திவ்யா வருவதும் தெரியாது போவதும் தெரியாது. அவளிடம் அப்படி ஒரு […]

Categories
குட்டி கதை தமிழ் வரலாறு

பண்டைய தமிழகத்தின் நாகரீகம் – கற்றோர் சிறப்பு

பண்டைய தமிழகத்தில் முதல், இடை, கடை என்ற மூன்று சங்க காலங்களிலும் தமிழை வளர்த்த புலவர்கள் பெரும் மதிப்போடும் மரியாதையோடும் வாழ்ந்தார்கள் என்பதை அறிவோம். அதில் நமக்கு வந்து சேர்ந்த சில கதைகளைத்தான் நாம் சற்று நினைவில் கொள்ளப் போகிறோம். “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சிவபெருமானையே குற்றம் சாட்டிய நக்கீரர் பெருமானை அறயாதோரும் இலர். தன் உயிரை விட தமிழ் வளர்க்கும் மூதாட்டியின் உயிரே முக்கியம் என ஔவைக்கு அரிய நெல்லிக்கனியைத் தந்த […]

Categories
இலக்கியம் தமிழ்

குறளுடன் குட்டிக்கதை – உயர்ந்த சிந்தனை

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினும் தள்ளாமை நீர்த்து. திருவள்ளுவர், குறள் 596 நாம் சாதிக்க நினைக்கும் காரியங்களை சிறியதாக நினைக்காமல் உயர்ந்த லட்சியங்களை சிந்தித்து அதை நோக்கிப் பயணிக்க வேண்டும்.அது முடியுமா முடியாதா என்ற சிந்தனையை விட்டு, ஒருவேளை அது முடியாவிட்டாலும் கூட அதை நான் அடைந்து விடுவேன் என்ற நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதை விளக்குகிறது இந்தக் குறள். இன்றைய சூழலில் மக்களின் மனநிலை மிகவும் குறுகிப் போனது.நம்மால் இது முடியாது, நம்மால் அது முடியாது, […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

கிளி (கிழிந்த) ஜோதிடம் – அனுபவங்கள்

ஜோதிடம், ஜாதகம், ஓலைச்சுவடி, கிளி ஜோசியம், கை ரேகை பலன், என்று விதவிதமாக, மனிதனின் வாழ்க்கை எப்படி அமையும்? என்ற ரீதியில் பல கோணங்களில் கணித்து சொல்ல பல வகையான ஆட்களை காண முடிகிறது. பெரும்பாலும் ஜாதகம் அதில் பிரதானமான ஒன்றாக உள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்தும் முன்பு இருவரின் ஜாதகங்களும் ஒப்பிடப்பட்டு நன்கு ஆராயப்பட்ட பிறகே பத்திரிக்கை அடிக்கப்படுகிறது. அப்படி இருந்தாலும் கூட சில திருமணங்கள் விவாகரத்தில் முடிவதற்கான காரணம் இருவரின் மனம் […]

Categories
குட்டி கதை தமிழ்

தெனாலிராமன் விகடகவியான கதை

அக்பருக்கு ஒரு பீர்பால் போல, நமது நாட்டில் கிருஷ்ணதேவ ராயரின் சபையை அலங்கரித்த தெனாலி ராமன் சிறப்பு. விகடகவி என்ற பட்டம் பெற்ற தெனாலி ராமனுக்கு ஏது அத்தகைய அறிவு, எவ்வாறு அப்படி பட்டம் பெற்றார் என்று சினிமா ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்திருக்கிறார். அந்தப்படத்தின் கதையின்படி மிகவும் வறுமையிலிருக்கும் தெனாலி ராமன் காளியிடம் கடுமையான வேண்டுதலில் இருந்து வரம் பெற்று அந்தப் பட்டத்தையும், கிருஷண் தேவராயரின் அன்பையும் பெறுகிறார். இதற்கு […]

Categories
இலக்கியம் குட்டி கதை தமிழ்

குறளுடன் குட்டி கதை -பொறையுடைமை

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ். குறள் 156, திருவள்ளுவர் அதாவது ஒருவர் செய்த தீங்குக்காக அவரை தண்டித்தவருக்கு அந்த ஒரு நாள் தான் இன்பம். ஆனால் அதைப் பொறுத்துக் கொண்டவருக்கு , இந்த உலகம் அழியும் வரை புகழ் உண்டாகும். இந்த திருக்குறளை நம்மாளு ஒருத்தரு கொஞ்சம் வித்தியாசமா புரிஞ்சிக்கிட்டாரு. எப்படின்னு விளக்கமா இந்தக் கதை மூலமா தெரிஞ்சிக்கோங்க. நம்மாளு விமான நிலையத்துல வேலை செய்யிற ஆளு. இந்தக்காலம் மாதிரி இல்ல, அந்தக்காலத்துல, அதாவது […]