Categories
கருத்து சிறுகதை தற்கால நிகழ்வுகள்

எது உண்மையான திறமை?

ஒரு சிறுகதை. ஒரு கானசபாவில் ஒரு வித்துவான் கச்சேரி செய்வதற்காக அனுமதி கேட்கிறார்.அவர் முன் பின் தெரியாத நபர் என்பதால் கானசபா மேலாளர் சிறிது யோசிக்கிறார்.ஆனால் அவரோ ஆள் பளபளவென, சிஷய்ர்கள் புடைசூழ வந்திருப்பதால் ஒரு சின்ன நம்பிக்கையும் அந்த மேலாளருக்கு இருந்தது. அவரது சிஷ்யர்களும் அவரைப்பற்றி ஆஹா, ஓஹோ என்று பெருமை பேச சரி, என்று கச்சேரிக்கு வாய்ப்பளித்து விட்டார். கச்சேரி அன்று அந்த வித்துவான் கச்சேரியை ஆரம்பம் செய்தார். நேரம் ஆக, ஆக கச்சேரிக்கு […]

Categories
கருத்து சிறுகதை நினைவுகள்

மனிதாபிமானம்- சிறுகதை

மனிதாபிமானம் பற்றிய ஒரு சிறு கதை. டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது.நமக்குத் தெரியும், கப்பலின் அழகு குறைந்து விடக்கூடாடது என்பதற்காக அதில் உயிர்காக்கும் படகுகள் குறைந்த அளவிலேயே இருந்தன என்று.அதனால் முதலில் வயதானவர்களையும், பெண்களையும் , குழந்தைகளையும் அந்தப் படகுகளில் ஏற்றி அனுப்பி விட முடிவாகிறது. அந்தக் கப்பலில் பயணித்த ஒரு ஜப்பானிய இளைஞனுக்கு இந்தச் சூழலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்படி நடுக்கடலில் இறந்து போவதில் அவனுக்கு விருப்பமில்லை. தன் தாய், தந்தை ,சகோதரர்களைக் காண […]

Categories
கருத்து சிறுகதை

புத்தகத்தில் இல்லா பாடம்!

அது ஒரு காற்றோட்டமான வகுப்பறை. பலதரப்பட்ட மாணவர்களையும் பார்த்த இருக்கைகள். சில இருக்கைகள் மட்டுமே கட்டமைப்பு சீர்குழையாமல் இருந்தன. மற்றவை எல்லாம் சின்ன சின்ன குறைகளோடு தான் இருக்கின்றன. அன்று முதல் நாள் வகுப்பு. பல்வேறு ஊர்களிலும் இருந்து தரவரிசைப் பிரகாரம் தேர்வான மாணவர்கள் கனவுகளோடு வந்தமர்ந்தனர். தனக்கென ஒரு நண்பனை, தோழியை அடையாளம் காண வேண்டும் என்ற தேடலோடு, புது இடம் என்ற பயமும் ஒவ்வொருவரின் மனதிலும் இருந்தது. தான் ஒரு சிறந்த வழக்கறிஞராக வேண்டும் […]

Categories
கருத்து குட்டி கதை நினைவுகள்

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை என்பதை நாம் அதிகமுறை கடந்து வந்திருப்போம்.அந்த சொல்லாடல் ஆனது ஏமாற்றுக்காரர்களை உருவகப்படுத்துவதற்காக சொல்லப்படும் சொல்லாடலாகவே இன்றளவும் இருநரது வருகிறது. அதாவது, இவன் சரியான திருடனா இருக்கானே, முழுப்பூசணிக்காயல்ல சோத்துல மறைக்கப் பாக்குறான் என்ற ரீதியில் தான் நாம் அதை அதிக முறை கேட்டிருப்போம். ஆனால் உண்மை அதுவல்ல. இது முற்றிலும் தவறானது. சரி, முழு பூசணிக்காய் சோத்துல மறைப்பது என்னவென்று இந்தக்கதையில் பார்க்கலாம். சிறிது காலத்திற்கு முன்பு ஒரு கிராமத்தில் […]

Categories
சிறுகதை

கணவர்களின் அவல நிலை.

படித்ததில் ரசித்தது! ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர் கணவர்என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது! வையத்தியரும் சொன்னதில்லை! மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை! ஒருநாள் வைத்தியர் வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே மனைவியைக் காணவில்லை. […]

Categories
சிறுகதை நினைவுகள்

மாம்பழமும் நாமும்

மாம்பழம் பற்றி பலருக்கும் பல கதைகளும் இருக்கும். நமக்குத் தெரிந்து பரமசிவன் குடும்பம் பிரிந்ததே ஞானப்பழம் என்று பெயரிடப்பட்ட மாம்பழத்தின் காரணத்தினால்தான். அதைத் தாண்டி நமக்கெல்லாம், மாம்பழம் என்றவுடன் அப்துல்லா கதையும் ஞாபகத்தில் வரும். இதோ இங்கேயும் அதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஊரில் உள்ள ஒரு மிகப்பெரிய கஞ்சனின் மாம்பழத்தோட்டம் வழியாக அப்துல்லா நடந்து செல்கிறான்.அப்போது, அங்கே பழுத்துத் தொங்கிய மாம்பழங்களின் வாசனையை உணர்ந்து அவன், ஆஹா, எவ்வளவு மனம்.இதைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும் […]

Categories
கருத்து குட்டி கதை சிறுகதை

ஒவ்வொருவருக்கு ஒரு திறமை

ஒரு கதை ஒன்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு படகில், ஆற்றைக் கடக்க மூன்று மனிதர்கள் படகில் அமர்ந்தனர். மூவரும் நன்கு படித்த அளிவாளிகள்.ஒருவர் பேராசிரியர், ஒருவர் எழுத்தாளர், ஒருவர் விஞ்ஞானி. படகோட்டி துடுப்புப் போட்டு படகை ஓட்ட, மூவரும் அமைதியாய் ஏன் வருவானென்று உரையாடத் துவங்கினார்கள். உலகின் மிக முக்கியமான, சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி எல்லாம் பேசினார்கள். அவர்கள் மூவரும் பேசிக் கொண்டதை வேடிக்கை பார்த்தவனாகப் படகோட்டி துடுப்பைப் போட அவர்கள் இவனிடம் மெல்லப்பேச்சுக் கொடுக்கிறரார்கள். “ஏம்ப்பா […]

Categories
கருத்து சிறுகதை

தவிப்பும், தன்னம்பிக்கையும் தந்த தருணம்.

படித்ததில் பிடித்துப் பகிர்ந்தது. நமது ஆசிரியர்கள் எழுதியதல்ல. எழுதியவர் யார் என்பது தெரியவில்லை. அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளும் , வாழ்த்துகளும். கொலம்பியா பல்கலைக்கழகம். கணித பேராசிரியர் பாடத்தை துவக்கினார். பாடத்தை துவக்கிய சில நிமிடங்களிலேயே அந்த மாணவனுக்கு உறக்கம் கண்களை சொக்கிக் கொண்டு வந்தது. அவனையும் அறியாமல் உறங்கினான். திடீரென மற்ற மாணவர்களின் சலசலப்பு சத்தம் கேட்டு கண் விழித்தான். கணித வகுப்பு முடிந்து பேராசிரியர் வெளியேறி இருந்தார். உறங்கியதை நினைத்து வெட்கப்பட்டுக் கொண்டே கரும்பலகையைப் […]

Categories
கருத்து சிறுகதை

டோரா புஜ்ஜி – சொன்ன கதை.

மிகப்பெரிய கதைகளை எப்போதும் தேடித் தேடிப் படிக்கத் தேவையில்லை. மிகச்சிறிய விஷயங்களிலருந்தே வெளிக்கொணரலாம். அதுபோலத்தான் இன்று ஒரு கதை என் மூளைக்குள் சிந்தனையைத் தூண்டியது. கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் வீட்டில் பொழுதோடு சுட்டி டிவியும் கார்ட்டூன் சேனல்களும் தான். அப்படி இன்று ஓடிக்கொண்டிருக்க, அதில் வந்த டோரா புஜ்ஜி என்ற வகையிலான கார்ட்டூனில் ஒரு சின்ன பகுதியைக் காண நேர்ந்தது. இப்ப நாம எல்லாம் ஒரு கதை படிக்கலாம் ப்ரெண்ட்ஸ். அது மூனு பன்னிங்கள பத்தின […]

Categories
கருத்து குட்டி கதை தற்கால நிகழ்வுகள்

தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்.

நண்பர்கள் இருவர் சித்திரை மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில். தான் தங்கியிருக்கும் அறையை சுத்தம் செய்து விட்டு, குளித்து விட்டு நல்ல பசியுடன் கடைக்குச் சென்று பார்த்தால் கூட்டம். அமர்ந்து சாப்பிட இடம் கிடைக்காது என்று தெரிந்து உணவுப் பொட்டலம் வாங்கிக்கொண்டு அறைக்குச் செல்கிறார்கள். நல்ல பசி என்பதால், பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் 65 என வகை வகையாக வாங்கிச் சென்றார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பாசத்துடன் பகிர்ந்து சாப்பிடுவதைப்பார்த்தால்… அடேயப்பா, இதுவல்லவா நட்பு? சாப்பிட்டு முடியும் […]