Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

டாக்டருக்கே பல்பா? ப்ரௌவ்னியின் மகிமை!

படித்ததில் பிடித்தது! கிளினிக்கில்மூன்றரை வயது பெண் குழந்தைக்குதொடர்ந்து மூன்று நாட்களாக காய்ச்சல்கூடவே வாந்தி பரிசோதித்ததில்சீசனல் ஜூரம் என்று கண்டறிந்துஅதற்குரிய சிகிச்சை பரிந்துரைத்து அனுப்பினேன். மறுநாள்குழந்தையின் அம்மா “காய்ச்சல் சரியாகிடுச்சு சார்.. பாப்பா மோஷன் கருப்பா போறா சார். பயமா இருக்கு.. அதான் கூட்டிட்டு வந்தேன்” காய்ச்சல் மூன்று நாட்களாக இருந்துநான்காவது நாள் குணமாகி கூடவேமலம் கருப்பாகச் சென்றால்நம்ம புத்தி நேராகடெங்குவுக்குத் தான் செல்லும். பரிசோதனை செய்தேன்.பாப்பா நன்றாக இருந்தார்.வாந்தி குணமாகி இருந்தது.வயிற்று வலி இல்லை. ஆனாலும் மலம் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

புயலில் பொரி சாப்பிடலாமா?

நாங்கலாம் புயல்லயே உக்காந்து பொரி சாப்புடறவங்க என்று வசனம் வேண்டுமானால் பேச எளிதாக இருக்கலாம்.ஆனால் புயல் அடித்தால் கதிகலங்கிப் போய்விடுவோம் என்பதை சமீபத்திய தானே, வர்தா , கஜா ஆகிய புயல்கள் நமக்குப் பாடம் நடத்திச் சென்றிருக்கின்றன. புயல் ஏன் உருவாகிறது எப்படி உருவாகிறது? நாம் பள்ளிக்கல்வியில் படித்த பகுதி தான்.கடல்நீர் வெப்பம் அதிகரிக்கும் போது அதன் மேல்பகுதி காற்று சூடாகி மேலே எழும். இதை நாம் பல நேரங்களில் உணர்ந்திருக்கலாம். கிணற்றிலோ குளம் குட்டையிலோ நல்ல […]

Categories
தகவல்

இந்திய இராணுவ வீரர்களின் உணவுமுறை.

படித்ததில் பிடித்தது! சமீபத்தில் ஒரு ராணுவ வீரரை சந்தித்தேன்வருட விடுமுறையில் என்னை சந்திப்பார்அவரிடம் ராணுவம் குறித்த செய்திகளை ஆர்வத்துடன் அறிந்து கொள்வது வழக்கம். இந்த முறை பேச்சு அவர் உண்ணும் உணவு பக்கம் திரும்பியதுசாதாரணமாக எந்த பிரச்சனையும் போரும் இல்லாத போது அவர்களது முகாமில் இருக்கும் போது வழக்கம் போல சோறு / சப்பாத்தி / பிரியாணி என்று உணவு கிடைக்கும் என்று கூறினார். அவர் சட்டிஸ்கர் நக்சல் அதிகம் உள்ள கானகப்பகுதிகளில் பணியாற்றும் வீரர்.பல சமயங்களில் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சிந்திக்க வேண்டிய கட்டாயம்!

பட்டாசு.தீபாவளிக்கும் கார்த்திகை தீபத்திற்கும், திருவிழாக்களிக்கும் இன்ன பிற சாவு போன்ற சடங்குகளுக்கும் பட்டாசு என்பது ஆடம்பரமாகவோ இன்றியமையாத ஒன்றாகவோ அல்லது அடிப்படைத் தேவையாகவோ என்று ஏதோ ஒரு கணக்கில் கட்டாயம் தேவை என்று வழக்கமாகிப்போனது. பட்டாசு வெடிப்பதில் நமக்கு பெரிய எதிர்ப்பு இல்லை , பட்டாசு தொழிலை நம்பியே வாழும் சிவகாசி என்ற ஊர் மக்களுக்காக நாமும் பட்டாசு வெடிப்பதை ஆதரித்தே பலமுறை எழுதியிருக்கிறோம். ஆனால் இந்த முறை ஒரு சிறிய மனக்குழப்பம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

எப்போது விடியுமோ?

இத விட மோசமான சூழ்நிலை வரவே வராதுல அப்படின்னு நாம நம்ம வாழ்க்கையில சில நேரங்களைக் கடந்து வந்திருப்போம். அப்படியொரு சம்பவம் தான் இது.ஆனால் இவருக்கு இது புதிதல்ல..இதைப் போன்ற பல மோசமான சூழ்நிலைகளை அவர் சந்தித்திருந்தாலும், விடாப்பிடியாக மனம் தளராமல் எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து தனக்கு மனநிறைவான வேலையைச் செய்பவர். வேறு யார்?தன் வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயி தான். இது வழக்கமாக நிகழ்வது தானே? பயிர் போட்டு […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இதெல்லாம் தப்பு ப்ரோ!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு. ஆனா இந்த விஷயத்தைக் கேளுங்க.எதிர்பார்த்ததை விட அதிக வரவு. வெற்றி என்றால் இப்படி இருக்க வேண்டும்.ஊர் உலகமே வியக்கும் அளவிற்கு மாபெரும் வெற்றி. சும்மா நாங்களும் வென்றோம், நாங்களும் வசூலித்தோம்னு பேசுகிறவர்கள் மத்தியில் , வசூல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், வெற்றி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் , இலக்கைத் தாண்டிய மாபெரும் வெற்றி என்பது இதுதான் என்று நிரூபணமாகி இருக்கிறது. இதை வாசித்த உடனே பலரும் மனதில் நினைத்திருப்பீர்கள், […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இன்னும் எத்தனை போலி?

டாக்டர் கிட்டயும் , வக்கீல் கிட்டயும் பொய் சொல்லக்கூடாதுனு சொல்லுவாங்க, ஆனா உங்ககிட்ட சொல்லக்கூடாத இன்னொன்னு, ” எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல”.கறந்துருவீங்களே? இப்படி கேப்டன் விஜயகாந்த் ரமணா படத்தில் ஒரு வசனம் பேசியிருப்பார். ஒரு தனியார் மருத்துவமனையில் நிகழும் மிகப்பெரிய அநியாயத்தை எதிர்த்து அவர் பேசிய வசனம் இது. அவரது குழந்தை சைக்கிளிலிருந்து கீழே விழுந்து அடிபட்டதற்காக மருத்துவமனை சென்ற அவருக்கு 40000 ரூபாய் வரை மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படும்பிறகு ஒரு இறந்தவரின் சடலத்தைக் கொண்டு சென்று, […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பசுந்தோல் போர்த்திய ஓநாய்கள்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். ஒழுக்கம் என்பது உயிரினும் மேலானது என்ற வள்ளுவனின் வாக்கு புத்தகத்திலும், தேர்வில் எழுதி இரண்டு மதிப்பெண் பெறுவதற்கும் தான் என்று மாறிப் போனது. கோவில், கடவுள், பக்தி , இறை நம்பிக்கை என்பது மனிதன் தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று பயந்து ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான்.ஆனால் இன்று அது ஒரு அன்றாட செயலாகவும், போட்டி மனப்பான்மையிலும், பகை மூட்டுவதற்கும் தான் பயன்படுகிறது. […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

கனவுகளை சிதைத்த விபத்து!

நாம் சரஸ்வதி பூஜை அன்று வாகனங்களுக்குத் தேவை பூஜை மட்டுமல்ல, பராமரிப்பும் தான் என்று எழுதியிருந்தோம். அதை நிரூபிக்கும் விதமாக நெஞ்சை உலுக்கும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. கனவுகளோடு வாழ்க்கையை வாழக் காத்திருக்கும் நான்கு இளைஞர்களின் வாழ்வை முடித்திருக்கிறது பாழாய்ப்போன தறிகெட்டு ஓடிய லாரி ஒன்று. ஓசூர் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.முன்னே சென்ற காரின் மீது தறிகெட்டு ஓடிய லாரி மோதி அந்தக்கார் அதற்கு முன்னே சென்ற ஒரு சரக்கு வாகனத்தில் மோத, காரில் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

நம் தங்கம், நம் உரிமை!

கையில இருக்கு தங்கம், கவலை ஏன்டா சிங்கம்னு ஒரு விளம்பரம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரொம்பப் பிரபலமா ஒளிபரப்பு ஆனது. அந்த விளம்பரம் வரும் முன்பே அது தான் நிலை. கையில தங்கம் இருக்கு என்ற தைரியம் எப்போதுமே இந்திய நடுத்தரக் குடும்ப மக்களுக்கு உண்டு. எனது சொந்த அனுபவத்தில், சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு கூட, நான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவமனை செலவு பற்றி நான் கவலை இல்லாமல் சொகுசாக மருத்துவ உபசரிப்புகளை […]