Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

நீதியின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது?

ஒரு குற்றவாளியைப் பிடிப்பது முக்கியமல்ல, அவர் என்ன குற்றம் செய்தாலும் பரவாயில்லை.ஆனால் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தகுந்த சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாவிட்டால், அவர் விடுவிக்கப்படுவார் என்பது சாதகமா? பாதகமா? ஒரு சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து தூக்கி எறிந்து மறுநாள் அதே இடத்திற்குச் சென்று அந்தக் குழந்தையின் சடலத்தை எரித்தார் என்று பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டு, கீழ் நீதிமன்றத்திலும் , உயர் நீதிமன்றத்திலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தண்டனைக் குற்றவாளி தன்னுடைய பணபலத்தால் […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

அரசியல் எனும் வியாபாரம்!

அரசியல் என்பது மக்கள் சேவை, மக்களின் நலன், பொது சிந்தனை , பொது வாழ்வு என்பதெல்லாம் மாறி வியாபாரமாகிப் போனது.10 ரூ போட்டு 100 ரூ சம்பாதக்க, பதவி போகத்தை அனுபவிக்கத் தான் இன்றைய அரசியல்வாதிகளும் அரசியலும். உயர்மட்டத்தில் துவங்கி அடிமட்டம் வரை இன்று இதுதான் நிலை. ஒரு காலத்தில் கொள்கை ரீதியான அரசியல் முன்னெடுப்பு, கொள்கை ஈர்ப்பு, பொது சிந்தனை என்ற காரணத்திற்காக பணக்காரர்கள் முதல் பாமரன் வரை அரசியலில் ஈடுபட்டனர். அவரவர் தாங்கள் உழைத்த […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வியாபாரக் கொலை!

ஏதோ ஒரு படத்தில் நடிகர் விவேக் அவர்கள் நகைச்சுவையாக ஒரு விஷயம் சொல்வார்.எங்க ஊரிலெல்லாம் மருத்துவமனைக்குச் சென்றால் தான் இறந்து விடுவோமோ என்ற பயம் இருக்கிறது என்று. அதை அப்போது இருந்த கால கட்டத்தில் வெறும் நகைச்சுவையாகக் கடந்து செல்ல இயலவில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றைய நவீன மருத்துவ உலகில், சளி இருமலுக்காக டானிக் உட்கொண்ட 11 குழந்தைகள் உயிர்பலி ஆகி உள்ளது என்பது மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை உண்டு செய்திருக்கிறது என்பதில் மாற்றுக் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

தேவை தொழிலாளர் நலன்!

தொழிலாளர் நலன் என்ற வார்த்தை இப்போதெல்லால் மிகப்பெரிய நிறுவனங்களை மிரட்டுவதற்காகவும், பணம் பறிப்பதற்காகவும் ஒரு சிலருக்கான ணுக போகங்களை அனுபவிப்பதற்குமான வார்த்தையாகிப் போனது. உண்மையிலேயே தொழிலாளர் நலம் அல்லது ஊழியர்கள் நலன் என்பதை இப்போதெல்லாம் ஒரு கிள்ளுக்கீரையாகத் தான், ஒரு சம்பிரதாய வார்த்தையாகத்தான் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து சிறிய முதலாளிகள் வரை பயன்படுத்துகிறார்கள். சமீபத்திய ஒரு செய்தி.டி.சி.எஸ், அதாவது டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் எனப்படும் ஐடி நிறுவனம் , வரும் ஆண்டில் 2 சதவீத ஊழியர்களை, (6 […]

Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சாதிகள் இல்லையாடி பாப்பா?

சாமி படத்தில் ஒரு நல்ல நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு காட்சி. மறைந்த நடிகர் விவேக், குழந்தைகளை வைத்துக் கொண்டு பாடம் நடத்துவார். ” சாதிகள் இல்லையடி பாப்பா” என்று அவர் சொல்வார். உடனே குழந்தைகள் பக்கத்தில் இருந்து,நாயர் கடையில டீ வாங்கினேன், கோனார் தமிழ் உரையில படிக்கிறேன், செட்டியார் வூட்ல கடன் வாங்கினேன் என்று அந்தக் குழந்தைகள் சொன்ன உடனே, அவர் என்னையே சிந்திக்க வச்சுட்டேளே என்பார். நேற்றைய செய்தித்தாளில் ஒரு செய்தியைக் கண்டதும் எனக்கும் அப்படி […]

Categories
கருத்து சினிமா தகவல் நினைவுகள்

மலை மனிதனின் கதை

மனமிருந்தால் மலையையும் புரட்டிப் போடலாம் என்ற கடந்து வராதோர் இல்லை. அதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இந்த மனிதர்.மலையைப் புரட்டவில்லை.நொறுக்கியே விட்டார். தெய்வாத்தா லாகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். திருக்குறளில் பொருட்பாலில் அரசியல் இயலில் 62 ஆவது அதிகாரமான ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்தில் வரும் இந்தக் குறிளினை நாம் பலமுறை வாசித்திருப்போம். இந்தக்குறளை தன் வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் தான் இந்த மலை மனிதர் தசரத் மான்ஜி. யார் இவர்? எதற்காக மலையை உடைத்தார் என்பதைக் காணலாம். […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

தன்னைத்தானே அழிக்கும் சினம்!

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம். திருக்குறளில் அறத்துப்பால் பகுதியில் துறவறவியலில் 31 ஆவது அதிகாரத்தில் வரும் இந்தக் குறிளின் பொருளை அறியாதோர் எவருமிலர். ஆனால் நமது அன்றாட வாழ்வில் இதைப் பின்பற்றுகிறோமா என்றால் நிச்சயம் இல்லை என்பதே 90 சதவீத மக்களின் பதில். ஏன் எதற்கு என்று தெரியாமல் கூட சிலர் கோப்பப்படுவதும், அற்ப காரணங்களுக்காக கோபம் கொள்வதும், வந்த கோபத்தை அடக்கிக் கொள்ள இயலாமல் செய்வதறியாது சில தவறுகளைச் செய்வதும் பலருக்கு அன்றாட […]

Categories
அறிவியல் ஆன்மீகம் கருத்து தகவல்

புரட்டாசி ஸ்பெஷல்!

கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பிஎல்லா உயிருந் தொழும். திருக்குறளில் அறத்துப்பாலில், துறவறவியலில் 26 ஆவது அதிகாரமாக வரும் புலால் மறுத்தலில் உள்ள திருக்குறள்.இது.இதன் பொருள் என்னவென்றால், பிற உயிர்களைக் கொல்லாதவனை புலால் உணவை அதாவது அசைவ உணவை மறுத்தவனை உலகின் உயிர்கள் கைகூப்பி வணங்கும். லாஜிக் படி பார்த்தால் நாம் உண்ணும் கோழி ,ஆடு, மாடு, மீன் இவற்றுக்கெல்லாம் கையே இல்லையே? ஆக மனிதனாகப்பட்டவன் திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளையும் பின்பற்றி வாழ முடியாது என்பதற்காகத்தான் […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

முயலுக்கு மூன்று கால்தானா?

2026 தேர்தலுக்காக பல கட்சிகளும் பலவிதமான கூட்டணிக் கணக்குகளைப் போட்டு வெற்றிக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சியோ எந்தவித கூட்டணியும் அமைத்துக்கொள்ளப் போவதில்லை என்ற அதே நிலையில் இருப்பதால் இந்தக் கூட்டணிக் கணக்கு குழப்பங்கள் இல்லை. ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில், மக்கள் இருக்கும் மனநிலையில், கூட்டணி அமைக்காமல் வெல்வது எந்த விதத்திலும் சாத்தியமில்லை என்பதைத் தெரிந்திருந்தும் கூட, நாங்கள் எங்கள் நிலைப்பாடில் இருந்து மாறுவதில்லை, ஆனால் வெற்றியும் வேண்டும் என்றால், அது […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

கொஞ்சம் திருந்தலாமே?

திருடனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளைக் கடந்து வந்திருப்போம் நாம்.இது திருடர்களுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக தவறு செய்யும் அனைவருக்கும் தான். மனிதனாகப் பிறந்து ஆறறிவோடு உலகின் மற்ற ஜீவராசிகளை ஒப்பிடும் போது உட்சபட்ச அதிகாரம் படைத்து உலகை ஆட்டிக்கொண்டிருப்பது போதாதா ?சக மனிதர்களையும் சங்கடப்படுத்தி , ஏய்த்து , கஷ்டப்படுத்தி தவறு செய்து வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறோம்.அப்படி தவறு செய்து வாழ்ந்த சாதிக்க என்ன இருக்கிறது? ஏற்கனவே பூமி பாரம் தாங்காமல் […]