Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பூ வச்சிருந்தது குத்தமாடா?

வாழ்க்கை சில நேரங்களில் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். நல்ல வாய்ப்புகளைத் தரும், நல்ல தருணங்கள் அமையும், நாட்கள் மகிழ்வானதாக நகரும். அந்த நேரங்கள் அப்படியே நீடித்து விடாதா என்று கூடத் தோன்றும். ஆனால் அது நீடிக்காது. பல நேரங்களில் நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் சோதனை? நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? என்று வடிவேலு புலம்பும் விதமாகத் தான் வாழ்க்கை நம்மை பாடாய் படுத்தும். சாலை ஓரத்தில் ஓரமாய்த் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென ஓடி […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பாகுபாடு- பைகளுக்கும் உண்டு!

புறக்கணிப்பு, அவமரியாதை , சிறுமைபடுத்துதல், ஒதுக்கி வைத்தல் போன்றவை இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் நாம் ஆறறிவு கொண்டு படைக்கப்பட்டிருக்கிறோம்.ஆனால் மனித இனத்தில் தான் இவையெல்லாம் மிக அதிகமாக நிகழ்கிறதோ என்ற எண்ணம். குழந்தைகளின் மனதில் அது மாதிரியான ஏற்ற தாழ்வு வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் பள்ளிகளில் சீருடை என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால் இன்றைய கால கட்டத்தில் , நாம் பிஞ்சு குழந்தைகளிடமே அந்த பாகுபாடு, தனிமைப்படுத்துதல் போன்றவற்றை நமக்குத் தெரியாமலே விதைத்துக் கொண்டிருக்கிறோம். உருளைக்கிழங்கு செல்லக்குட்டி […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மோசடி கதைகள்- தொடர்ச்சி

இணையதளம். இன்றைய தேதியில் 100 ல் 60க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு தன் கை கால், மூளை போல இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இணையதளம் என்று இங்கு குறிப்பிடப்படுவது, பொழுதுபோக்கு ஊடகங்களில் துவங்கி தகவல் ஊடகங்கள் வரை அனைத்தும் தான். இவை அனைத்தும் இந்த அளவிற்கு உபயோகத்தில் இருப்பதற்குக் காரணம், இவை கைபேசயிலேயே கிடைப்பது தான் இரும்புத்திரை படத்தில் அர்ஜூன் அவர்கள் செல்லும் வசனம் போல, முதன் முதலாக ராக்கெட் அனுப்ப உபயோகப்படுத்தப்பட்ட […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மோசடிகள் பலவிதம்!

மோசடி என்பது இன்று நமது வாழ்க்கையில் யதார்த்தமான ஒன்றாகவே மாறிப்போனது. முன்பெல்லாம் மோசடிகளைக் கண்டு முகம் சுளித்த நாம், இப்போது அதை மிக யதார்த்தமாக, ஓ அப்படியா என்று கடந்து போகத் துவங்கி விட்டோம். போதாக்குறைக்கு மோசடிப் பேர்வழிகளை கதாநாயகர்களாக சித்தரித்துப் பல படங்கள் வருகின்றன. மோசடி செய்பவர்கள் அல்லது திருட்டுத்தொழில் செய்பவர்களைக் கோமாளிகள் போல பாவித்து பல நகைச்சுவை காட்சிகளையும் யதார்த்தமாக ரசித்துப் பழக விட்டோம். அதாவது ஒருவனின் பணத்தை ஒருவன் மோசடி செய்வதை வயிறு […]

Categories
கருத்து சினிமா தகவல் தற்கால நிகழ்வுகள்

இரத்தத்தில் கலந்தது சினிமா!

சினிமா . இன்றைய காலகட்டத்தில் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் மிக முக்கியமான ஒன்று சினிமா. வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்பதோடு அல்லாமல், கோடி கோடியாகப் பணம்புரளும் ஒரு பெரிய துறையும் கூட. இந்தத் துறையின் தொழில் வாய்ப்பைய நம்பி ஆயிரக்கணக்கான ஊழியர்கள், தொழிலாளிகள் உண்டு என்பதிலும் மாற்றமில்லை. கோடிகளில் சம்பாதிக்கும் கதாநாயகன், நாயகி, இயக்குனரில் துவங்கி , தினக்கூலி பெற்றுக் கொண்டு லைட் பிடிக்கும் லைட் மேன் வரை சினிமா என்ற தொழிலை நம்பி இருப்பவர்கள் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மீண்டும் மீண்டுமா? சுங்கச்சாவடி கட்டண உயர்வு!

சுங்கச் சாவடி கொள்ளை பற்றி நாம் முன்னரே ஒரு கட்டுரை விரிவாக எழுதியிருக்கிறோம். நமது கட்டுரையில் எழுதப்பட்ட பல சாராம்சங்களின் அடிப்படை மாறாமல் இன்று ஒரு தினசரி நாளிதழில் தலையங்கத்தில் சமீபத்திய சுங்கச் சாவடி கட்டண உயர்வு பற்றியும், மற்ற ஒளிவு மறைவுகள் பற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது. முதல் விஷயம், முக்கியமான விஷயம் என்னவென்றால் சுங்கச்சாவடி என்பது நெடுஞ்சாலைகளில் 60 கிமீ தொலைவிற்கு ஒன்றுதான் இருக்க வேண்டும்.அந்த வகையில் கணக்கிட்டால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 20 சுங்கச் சாவடிகள் தான் […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வார்த்தைய விடலாமா எடப்பாடி சார்?

இடக்கரடக்கல் என்ற ஒரு விஷயத்தைக் நாம் படித்திருப்போம்.ஒரு பொருளை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, ஆனால் அந்த இடத்தின் ஒழுக்கம் கருதி அந்த விஷயத்தை வேறு விதமாக சொல்வது தான் இடக்கரடக்கல் எனப்படும். உதாரணத்திற்கு அவன் எங்கே என்று கேட்கும் போது , மலம் கழிக்கச்செல்கிறான் என்று சொல்வதை விட கொள்ளைப்புறம் செல்கிறான் என்று சொல்லி அந்த விஷயத்தைத் தெரிவுபடுத்துவதோடு அல்லாமல், சொல்ல வந்த விஷயத்தையும் முகசுழிவு இல்லாமல் சொல்லி விடுகிறோம். இதுபோல இடக்கரடக்கல் என்பது இன்றைய […]

Categories
அரசியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

ஆத்துக்குள்ளே …..அயிலயிலா!!

காற்றில் பறக்கும் வாக்குறுதிகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவ்வளவு ஏன், நீ சொல்றத தண்ணியில தான் எழுதனும் னு பேச்சுவாக்கில் கேலி பேசுவதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அது நிஜத்தில் நிகழ்ந்தால் எப்படி இருக்கும்? நிகழ்ந்து தான் விட்டது. உங்களைத் தேடி ஸ்டாலின் என்று கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி ஆங்காங்கே முகாம்கள் அமைத்து, மருத்துவ காப்பீடு துவங்கி பல வகையான பிரச்சினைகளையும் மனுக்களாகப் பெற்று உடனடியாகத் தீர்வு தருகிறோம் என்று இந்த ஆளும் திமுக அரசு செய்த மாபெரும் வெற்றித் திட்டத்தில், […]

Categories
கருத்து தகவல் தமிழ் தற்கால நிகழ்வுகள்

க்யா ச்சையியே?சர்க்கார் உத்யோக்?

க்யா ச்சையியே? என்னாங்க தலைப்பு ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி தோணுதா? இல்ல, இருக்காது, நம்மில் பலருக்கும் இது இந்தி என்றும் இதன் அர்த்தம் என்ன வேண்டும் என்பதென்றும் தெரிந்திருக்கும். காரணம், இந்தியை நாம் பழகாவிட்டாலும் இந்தி நம்மோடு பழகி விட்டது. தேவைக்காக நியாயமான முறையிலும், சில மோசடியான முறையிலும். அப்படி மோசடியாக நுழைந்த இந்திக்காரர்கள் கதை தான் இது. ஆம் ஏற்கனவே, நாம் பல அரசு வேலைகளிலும், ஐஐடி ஐஐஎம் போன்ற மத்திய அரசு கல்வி […]

Categories
கருத்து சிறுதுணுக்கு தகவல் தற்கால நிகழ்வுகள்

மனிதன் ஏன்தான் இப்படி ஆனானோ?

உலகில் கொரோனா, பூகம்பம் , வெள்ளம், சுனாமி , மேக வெடிப்பு மழை போன்றவை எல்லாம் வந்து மனித இனம் வாடும் போது மனம் வெதும்பத் தான் செய்கிறது. ஆனால் சில செய்திகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் மனித இனத்திற்கு இந்த தண்டனை போதாது என்று தான் தோன்றுகிறது. ஆம், மனித இனமே ஒட்டுமொத்தமாக அழிந்தாலென்ன என்ற அளவிற்கான கோபத்தை சில விஷயங்கள் ஏற்படுத்துகின்றன. அப்படி இருவேறு துயர செய்திகள் இன்று கேள்விப்பட நேர்ந்தது. முதலாவது, […]