பிரிவின் வலியை சொல்லும் ராசாத்தி என்ற பாடலை பற்றி அருண் பாரதி இங்கு எழுதுகிறார். அதே பெயரில் ஒரு பாடலை கொண்ட சமீபத்தில் வெளியாகியிருக்கும் வள்ளியம்மா பேராண்டி என்ற இசைத்தொகுப்பை பற்றி இந்த கட்டுரை. பிக்சன் பிக்சன் (பெரிய மகன்) என்று இவரது அம்மாவும் அப்பாவும் அழைக்க, பிக்சன் இன் உலகத்துக்குள் நுழைகிறோம். “பொக்க பொக்க பொக்கை வள்ளி பாட்டி, you‘re மை ஸ்வீட்டி” என்று விளையாட்டாக ஆரம்பமாக்கிறது இவரது கதை. பிக்சன் என்பவர் வேறு யாருமில்லை […]
Tag: தற்கால நிகழ்வுகள்
“பிச்சை புகினும் கற்கை நன்றே“ ஒருவருக்கு பிச்சை எடுக்கும் நிலை வந்தாலும் கல்வி கற்பதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறிய ஔவையின் வழிவந்த தமிழ் சமூகத்தில், நீ நல்லா படி, நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று அரசாங்கமே பல திட்டங்களை முன் எடுத்து செய்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக பல சந்தர்ப்பங்களிலும் இருந்து உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் நல்ல கல்யறிவு மற்றும் அதிகப்படியான பெண்கல்வி விகிதம் இருக்கும் மாநிலம் என்ற ரீதியில் […]
ஒரு செயலை செய்யும் போது அதற்கான பலன் கிடைக்காவிட்டால் சோர்வடைந்து அந்த செயலில் இருந்து பின்வாங்குதல் என்பது நம்மில் பலருக்கும் வாடிக்கையான ஒன்று. அப்படியான நமக்கான ஒரு முன்மாதிரி வினேஷ் போகட். இன்று இந்தியர்களின் இதயம் நொறுங்கிப்போக காரணமானவர். ஆனால் அவரும் பிறக்கும் போது நம்மைப்போன்ற ஒரு சாதாரண ஆள்தானே? மல்யுத்தத்தில் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டிக்குத் தகுதியான ஒரே இந்தியப் பெண்மனி என்ற சாதனை புரிந்து, அடுத்த நாளே இறுதிப்போட்டிக்கு தகுதியான ஆள் தகுதிநீக்கம் செய்யப்பட்டார் என்ற வரலாறையும் […]
நிலைகுலைந்து வரும் பொது ஒழுக்கம். தனிமனித ஒழுக்கம் அல்லது பொது ஒழுக்கம் என்பது தற்போது பரவலாக வெகுவாக நிலைகுலைந்து வருகிறது. தண்ணீரை வீணாக்குவது, குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவது, போக்குவரத்து விதிமுறைகளில் அத்துமீறல், இப்படி சிறிய விஷயங்களில் துவங்கி, குறைந்த மதிப்பீட்டில் பத்திரப்பதிவு, வருமான வரி ஏய்ப்பு என்று பெரிய விஷயங்கள் வரை பொது மக்கள் தங்கள் சுய மற்றும் பொது ஒழுக்கத்தில் தவறி தான் இருக்கிறார்கள் என்பது 100 சதவீத உண்மை. ஒரு அரசு அதிகாரி, […]
நினைவுகளுக்கும் இந்த நாளுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. நம்மை விட்டுப் பிரிந்தாலும் நம் நினைவுகளை விட்டு நீங்காமலிருக்கும் நம் முன்னோர்களை நினைத்துக்கொள்ளும் முக்கியமான நாள். தர்ப்பணம் கொடுப்பது, வீட்டிலே படையல் போட்டு பூஜை செய்வது என்று இன்றைய நாளில் இறந்து போன தாத்தா பாட்டி உட்பட அனைவரும் நம் நினைவில், நம் வார்த்தைகளில் ஒருமுறை வந்து போகாமல் இருப்பதில்லை. ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதில் மிக முக்கிய அமாவாசை ஆக கருதப்படுகிறது. புரட்டாசி, தை மாதங்களிலும் தர்ப்பணம் […]
சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் வரை உயர இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. தொழில் வரி என்பது நாம் அனைவரும் செலுத்தும் மாநில அரசின் வரி. தொழில் வரி என்றால் வியாபாரம் செய்பவர் அல்லது தொழில் செய்பவர் மட்டுமே கட்டும் வரி என்பதல்ல பொருள். ஒவ்வொரு தொழிலாளியும், முதலாளியும் அவரவர் வருமானத்திற்கு ஏற்ப கட்டும் வரி. உதாரணத்துக்கு, நான் ஒரு மிகப்பெரிய உணவகத்தில் சர்வராக வேலை செய்து மாதம் ரூ 20,000 சம்பளம் பெறுகிறேன் எனில் […]
பிடித்த வேலையோ, பிடிக்காதவேலையோ, ஆத்மார்த்தமாக செய்ததோ அல்லது அலுவலுக்காக செய்ததோ, நேர்மையாக இருந்தார்களோ ஏமாற்றினார்களோ. எப்படி இருந்தாலும் ஒரு மனிதனின் ஆன்மா, ஆழ்மனது, ஒரு வேலையை தொடர்ந்து செய்யும் போது அதற்கு அடிமையாகி விடுகிறது.
நினைவுகளில் இருந்து நீங்காமலிருக்கும் சில விஷயங்களில் ஒன்று சாப்பாடு. சோறு தான் சார் முக்கியம் என்று வாழும் பல உன்னத ஜீவன்களுக்கு இது சமர்ப்பணம். நம் அனைவருக்கும் என்றோ, எங்கேயோ, எப்போதோ சாப்பிட்ட ஒரு உணவு, அது நிகழ்ச்சி விருந்தாகவோ, கோவில் திருவிழா பந்தியாகவோ அல்லது உணவக விருந்தாகவோ கூட இருந்திருக்கலாம், அது என்றும் இனிய நினைவு தான். அப்படி இங்கே பலரும் கடந்து வந்திருக்கக் கூடிய இனிய உணவு உபசாரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் […]
விஞ்ஞானமும், அறிவியலும் வெண்டைக்காய் தக்காளி போல பழகிப்போன இந்த நாட்களில் கூட நாம் புருவம் உயர்த்தி அதிசயிக்கும் வகையில் முன்னோர்களின் சில கட்டடக் கலைகள் இருக்கத்தான் செய்கின்றன. தஞ்சை பெரிய கோவிலின் கட்டிட அறிவியலைப்பதிவிட்டு அதிசயித்த நமக்கு இன்னொரு அதிசயமும் பரிட்சையமானது. அது தற்போதைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரிலிருந்து சுமார் 100 கிமீ தொலைவில், நால்கோடா மாவட்டம் பனகல் என்ற பகுதியில் அமைந்திருக்கும் சாயா சோமேஸ்வரர் ஆலயம். இது குன்டுரு சோடாஸ் (தெலுங்கு சோழர்கள்) […]
EMI – Equated Monthly Installment, எனும் கொடிய கிருமி உருவெடுக்கும் முன்னரே கைமாத்து, கடன் போன்ற விஷயங்கள் புழக்கத்தில் இருந்து வந்த ஒன்று தான். அதாவது மாத ஊதியத்தைக்காட்டிலும் அதிகமாக ஏதாவது தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படும் போது இவ்வாறான கைமாத்துகள் அல்லது வட்டிக்கு கடன் வாங்குதல் போன்றவை புழக்கத்தில் இருந்த ஒன்று. இப்படி கடன் வாங்கும் போது ஏற்படும் பிரச்சினை என்னவென்றால் வட்டி. பெரிய தொகை ஒன்றை தேவைக்கென வாங்கிவிட்டு, அந்தத் தொகைக்கான வட்டியை […]