பிரியாணி, பெரும்பாலான நபர்களால் விரும்பி சாப்பிடப்படும், அல்லது அவ்வாறு ஒரு மாயையைக் கொண்டிருக்கும் பிரபல உணவு வகை.இது உண்மையிலேயே பெரும்பாலான நபர்களால் விரும்பி உண்ணப்படுகிறதா என்ற கேள்விக்கு ஆதாரமாக, ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிடப்படும் உணவு வகை பிரியாணி என்றே கூறப்படுகிறது. பிரியாணி என்பது ஈரான் நாட்டில் உருவாகி இப்போது தெற்கு ஆசியப்பகுதியில் இருக்கும் பிரபல உணவு. பிரியாணி என்ற வார்த்தை அரிசி என்பதைக் குறிக்கும் பிரிஞ்ச் என்ற பெர்சிய வார்த்தையிலிருந்தோ, அல்லது பிரியன் அ […]
Tag: தற்கால நிகழ்வுகள்
நேற்று ஒரு சின்ன வேலையாக பெங்களூர் வரை சென்று ஒரே நாளில் சென்னை திரும்ப வேண்டியிருந்தது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இரவு தாமதமாக புறப்படும் ரயிலில் முன்பதிவு செய்து விட்டால் வசதி என்று எண்ணி பெங்களூருவில் கிளம்பி, சென்னை பெரம்பூர் வழியாக பாட்னா செல்லும் SMVB – DNR SPL ரயிலில் முன்பதிவு செய்து ரயில் நிலையத்தை நோக்கி பாதிக்கு மேற்பட்ட தூரம் பயணித்த போது, யதார்த்மாக ப்ளாட்பார்ம் நம்பரும், கோச் பொஷிஷனும் சரிபார்க்கலாம் என யத்தனித்தால், […]
உலகில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு தன்னிறைவு அடைதல், அல்லது உச்சநிலை என்பது இருக்கும். ஆங்கிலத்தில் destination என்று எளிமையாக சொல்லலாம். அப்படி ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்குமான destination ஒலிம்பிக்ஸ் என்பதில் மாற்றுக்கருத்தல்ல. ஒலிம்பிக்ஸ் என்பது கிரிக்கெட் மாதிரியான பைத்தியக்கார ரசிகர்களை கொண்டிருக்கவில்லை. விளம்பரத்தில் பணம் சம்பாதிப்பது மட்டும் நோக்கமாக தெரியவில்லை. அதற்கென்று ஒரு தனி மரியாதை உண்டு. பண்டைய கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில், சேயுசு கோவிலடியில் சமய விழாவாகத் துவங்கிய இந்த விளையாட்டுப் போட்டிகள் இன்று […]
வீட்டிற்கு ஒன்று துவங்கி 4,5 என நீளும் பட்டதாரிகளின் எண்ணிக்கை,ஆரோக்கியமானது என்றாலும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் வழிவகுக்கிறது. கல்வி கிடைப்பதற்காக உருவாக்கப்பட்ட வசதிகள், நடவடிக்கைகள் வேலைவாயப்புக்கு சரிவர செய்யப்படவில்லையோ, அல்லது இடைவெளி நிரப்பப்படவில்லையோ என்பதை நாம் வேறொரு கட்டுரையில் பார்க்கலாம். இந்தக் கட்டுரையில் நேர்காணலுக்கு எப்படித்தயாராக வேண்டும் என்று தற்போது பரவலாக நடக்கும் வேடிக்கைகளைப் பற்றி பார்க்கலாம். முதலில் இந்த நேர்காணல் கூற்றுகள் ஐடி நிறுவனங்களில் துவங்கியது. இன்று மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் வரை வந்து விட்டது. […]
திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தின் கதையும் ஓட்டமும் இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்க்காதவர்கள் எச்சரிக்கையாக அணுக்கலாம். சென்ற வாரம் நமது பக்கத்தில் இந்தியன் படத்தின் எதிர்பார்ப்புகளை பற்றி அருண் பாரதி அவர்கள் எழுதியிருந்தார். பலத்த எதிர்பார்புகளுடன் வந்த திரைப்படம் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற வில்லை. சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றுவதை பார்த்தல் படம் ரொம்ப மொக்கையாக இருக்கலாம் என்று உத்தேசித்து நானும் விட்டுவிட்டேன். தெரிந்தோ தெரியாமலோ இந்த படத்தின் பாடல்கள் என்னோடு ஒட்டிக்கொண்டன. […]
சினிமா மற்றும் ஆன்மிகம் தான் இன்று கோடிகளில் பணம் கொழிக்கும் தொழில்துறை அல்லாத இரு துறைகள் என்பது மறுக்க முடியாத உண்மை. சினிமா ஆவது பல கோடிகளில் செலவு செய்து பல மனிதர்களின் உழைப்பில் உருவாகி திரையில் ஓடி மக்கள் மனதைக்கவர்ந்தால் தான் வெற்றியும் பணமும். ஆன்மீகம் அப்படி இல்லை. பழனிக்குச் சென்றால் பயனுண்டு, திருப்பதி சென்றால் திருப்பமுண்டு, ஐயப்பனைக்கண்டால் ஆனந்தமுண்டு என்று நம்பி அங்கே சென்று அழுது புரண்டு தங்கள் பிரார்த்தனைகளைக் கொட்டும் எத்தனை பக்தர்களுக்கு […]
இந்தியாவின் முதல் கடற்பாலம் என்ற பெருமையோடு அல்லாமல் 2010 மும்பையின் பாந்த்ரா பாலம் திறக்கப்படும் வரை, மிக நீளமான பாலம் என்ற பெருமையையும் தன்னுள்ளே தக்கவைத்திருந்த பாலம்.
பார்க்கலாம் இந்த இந்தியன் நம் நினைவுகளில் குடியிருக்கும் அந்தப்பழைய இந்தியனுக்கு ஈடு கொடுப்பாரா என்று.
நினைவுகள் வாசகர்களோடு இந்தியனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு யாம் பெற்ற அந்த சிறிய மனசந்தோஷத்தை நீவிரும் பெற விரும்புகிறோம்.
மெட்ராஸ்ல லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க..? நவநாகரீக சென்னையின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறிய எனக்கு எதிர்வீட்டில் வசிப்பவர், ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. அலுவலகத்தில் பணி நேரத்தில் எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் அந்த குடியிருப்பிலும். தண்ணீர் மின்விசைப்பம்புகள் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டது. சுவிட்ச் எல்லோருக்கும் பொதுவாக வெளியே இருந்தாலும் கூட, தண்ணீர் தேவை என்றால் அவரிடம் சொல்லியே சுவிட்ச் போட வேண்டும்.அந்த குடியிருப்பின் வீட்டு உரிமையாளர்கள் கூட ஒரு ஒழுக்கமான பராமரிப்பு […]
கில்லர் சாராயம்
கள்ளச்சாராயம் குடித்து உயிர்பலி. இந்த 2024 ஆம் ஆண்டிலும் கள்ளச்சாராயம் குடிக்க அவசியம் என்ன இருக்கிறது. தமிழ்நாடு என்ன சவுதி அரேபியா போல, குஜராத் போல சரக்கு கிடைக்காத இடமா? அரசாங்கமே ரேஷன் கார்டுக்கு ஒரு நாளைக்கு ஒரு குவார்ட்டர் என்று கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற ரீதியில் இங்கே வியாபாரம் படுஜோராக இருக்கிறது. மேலும் வட இந்திய மாநிலங்கள் போல இங்கே பணப்புழக்கம் இல்லாமலும் இல்லை. சின்ன சின்ன தொழிலாளியும் கூட சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நல்ல […]