ஆசிரியர் பணியில் எனது தனிப்பட்ட அனுபவம் என்பது கசப்பாக இருந்த விதத்தை பகுதி 1 ல் பேசியிருந்தோம். இந்த பகுதியில் மற்ற சில அவலங்களைப் பற்றி பிரச்சினைகள் பற்றி பேசலாம். பொதுவாக எந்தவொரு வேலைக்கு சேரும் போதும், பட்டதாரிகளின் பட்டம் நிர்வாகத்தால் வாங்கி வைக்கப்படுவதில்லை. ஏன் மாவட்ட ஆட்சியாளராகவே பணியாற்றும் நபரிடமும், நேர்காணல் முடிந்த பிறகு, அவரது பட்டங்களை சோதித்து விட்டு அதைத் திருப்பி அளித்து விடுவார்கள். ஆனால் இந்த தனியார் கல்லூரிகளிலோ, அடமானம் போல நாங்கள் […]
Tag: தற்கால நிகழ்வுகள்
ஆசிரியர் பணி – அவலப்பணி
இன்று ஒரு தலையங்கம் பார்த்தேன். அறிவை வளர்க்கும் ஆசிரியர் பணி என்ற தலைப்பில். அது சரிதான். ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி என்றும் சொல்வடை உண்டு. ஏத்திவிடும் ஏணி, நகர்த்திவிடும் தோனி என்று செப்டம்பர் 5 ஆம் தேதி பெரிய பாராட்டுப் பத்திரமே நடக்கும். இதெல்லாம் சரிதான். ஆனால், உண்மையிலேயே ஆசிரியர்களின் நிலை என்ன? அதை யாரும் அறிந்து கொள்வதுமில்லை, கேள்வி கேட்பதும் இல்லை. நான் சொல்லவருவது தனியார் பள்ளி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் […]

இன்றைய நாட்களில் மீம்கள் என்ற வகையிலான கேலி உருவகங்கள் அதிகப்படியான மக்களால் விரும்பப்படுகிறது. ஒரு திரைப்படத்தின் பிரபலமான காட்சியை வேறொரு நிகழ்வுக்கு உருவகப்படுத்தி கேலி செய்வது நடைமுறை. முன்பும் இது போன்ற கேலி செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் அது கேலிச் சித்திரங்களாகவோ அல்லது எழுத்து வடிவிலோ இருந்தது. உதாரணமாக பாரதியார் நடத்திய இதழில் கேலிச்சித்திரங்கள் பிரபலம். சமீபத்திய இந்து பத்திரிக்கை வரை நாம் அதைக் கண்டிருக்கலாம். அதேபோல, துக்ளக் என்ற வார இதழில் சோ அவர்கள் […]
உனக்கென்னப்பா நீ ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்ற சொல்லாடலை நாம் அடிக்கடி எங்கேயாவது கடந்து வந்திருப்போம். அதாவது கஷ்டப்படாமல் வாழ்வில் சிறப்பாக வாழ்ந்து, வெவ்வேறு உயரங்களை, ஒரு பாமரன் கனவில் கூட நினைக்க முடியாத உயரங்களை எளிதாக அடையும் பெரிய பதவியிலிருக்கும் அல்லது பெரிய பணக்கார வீட்டு பிள்ளைகளை பார்த்து பலரும் சொல்லும் வசனம் தான் “உனக்கென்னப்பா, நீ ராஜா வீட்டு கன்னுக்குட்டி” இன்றைய சூழலில் அப்படி ஒரு ராஜா வீட்டு கன்னுக்குட்டி தான் நமது மாநிலத்தின் […]
அரசுப் பணியாளர்களின் தனித்தன்மை சமீபத்தில் பரபரப்பான செய்தி ஒன்று. சென்னை மேயரின் பெண் தபேதார் பணியிட மாற்றம் என்பது. இவர் லிப்ஸ்டிக் அதாவது உதட்டுச்சாயம் பூசுவதை நிறுத்த மறுத்த காரணத்தால் தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் எனவும், அப்படியென்றால் பணியிட மாறுதல் அடைந்த பிறகு மணலியில் லிப்ஸ்டிக் போட்டால் தப்பு இல்லையா என்றும் ஒரு பக்கம் வலைத்தளவாசிகள் வறுத்து வருகிறார்கள். ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அவரது பணியிட மாறிதலுக்கு மேயர் அலுவலகம் […]
புரட்டாசி என்றாலே பல புத்தர்கள் உருவாகும் மாதமாகி விட்டது. சிறு வயதில் எனக்கு விவரம் தெரியவில்லையா அல்லது சமீப காலமாகத்தான் இப்படி மக்கள் அதீத பக்தியில் ஆழ்ந்து விட்டார்களா என்று எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.புரட்டாசி புத்தர்கள் என்று நான் குறிப்பிடுவது புரட்டாசி மாதம் மட்டும் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று விரதம் இருப்பவர்களைத் தான். எனது நினைவின் படி எங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மக்கள் கூட்டம் […]
கண்ணுக்குத் தெரியாமல் ஆரம்பித்து விட்ட இறுதி உலகப்போர். எல்நினோ எனும் பருவநிலை மாற்றம் காரணமாக வறட்சியில் வாடும் தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள், மக்களின் பசியைப் போக்குவதற்கும், வறட்சியின் சூழலை கட்டுக்குள் வைக்க அவர்கள் எடுத்துள்ள முடிவு நம்மை கடுமையான சோகத்தில் ஆழ்த்துவதாக உள்ளது. எல் நினோ பருவநிலை மாறுதலால் பனாமா கால்வாயில் ஏற்பட்ட தண்ணீர் சிக்கலை பற்றி இந்த பக்கத்தில் எழுதியிருந்தோம். தற்போது தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே என்ற நாட்டில் எல் நினோ பருவநிலை மாறுதலால் […]
ஓர் அரசன் என்பவன் மக்களின் குறைகளை கேட்டு அதைக் களைந்து அவர்கள் குறைதீர்க்கும் வகையில் நல்லாட்சி தருபவனாக இருக்க வேண்டும் என்று பல இலக்கியங்களிலும் படித்திருக்கிறோம். இவ்வளவு ஏன் தனது குட்டியை தேரில் ஏற்றி சாகடித்ததற்காக, நீதி கேட்ட பசுவுக்காக தனது மகனையே தேரில் வைத்து நசிக்கிக்கொன்று நீதி காத்தமனுநீதிச்சோழனின் கதையை இன்றளவும் பெருமையாகப் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். மொத்த நாடும் தன்னுடைய சொத்து என்று ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் கொண்ட மன்னனுக்கே இப்படியான பண்புகள் […]
சமீபத்திய பரபரப்பான செய்தி பற்றிய சிறிய அலசல் தான் இது. அரசுப்பள்ளியில் ஆன்மீகம் பேசிய ஒருவரை பாதியில் அவரது பேச்சை நிறுத்தச் செய்து அவர்மீது சர்ச்சை பேச்சு பேசிய காரணத்திற்காக வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை இரு வேறு அரசியல் குழுக்கள் வரவேற்றும் , எதிர்த்தும் பேசி வருகிறார்கள். அதாவது பள்ளியில் ஆன்மீகம் பேசினால் என்ன தவறு? அவர் மறுபிறவி பற்றி தானே பேசினார், திருக்குறளிலும் மறுபிறவி பற்றி பல கருத்துகள் உள்ளனவே, அப்படியென்றால் திருக்குறளையும் தடை செய்வீர்களா? […]
ஆடு 🐐 வெட்டலாமா? திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் GOAT படத்தின் கதையும் ஓட்டமும் இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்க்க விரும்புபவர்கள் எச்சரிக்கையாக அணுகலாம். ஒரு பெரிய நடிகரின் படம் அதுவும் எதிர்பார்ப்பைக் கிளப்பி இரண்டு மூன்று நாட்களாக திரையரங்குகளில் இணைய வழி முன்பதிவில் யாருக்குமே சரியாக நுழைவுச்சீட்டு கிடைக்காமல், அடித்துப்பிடித்து எப்படியோ ஒரு நுழைவுச்சீட்டைப் பெற்று படம் பார்க்க அமரும் போது எதிர்பார்ப்பு இல்லாமல் அமர முடியாது. அந்தப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் சந்தோஷம் இல்லாவிட்டால் […]