Categories
தற்கால நிகழ்வுகள்

சமுதாயம் செய்த கூட்டு பாலியல் வன்முறை

கோவையில் ஒரு 17 வயது பெண் கூட்டு பாலியல் வன்முறை. சமீபத்தில் கூட நம் பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்னு பாலியல் குற்றங்களுக்கு தண்டனை விதத்தில் இது குறையுமா என்று! அது ஒரு பார்வை.குற்றம் நடந்த பிறகான பார்வை. ஆனால்“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்” என்ற வள்ளுவனின் வாக்கை நாம் நினைக்காமல் விட்டது ஏனோ? ஆம், இந்தக்கூட்டுப் பாலியல் வன்முறை ஆள் அரவரமற்ற இரவிலோ, காட்டினுள்ளோ நடைபெறவில்லை. […]

Categories
தற்கால நிகழ்வுகள்

மும்மொழித் தகராறு- மத்திய மாநில அரசுகளின் தவறு.

இன்று அல்ல, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இதுதான் அரசியல் பரபரப்பு. இந்தி மொழியைத் திணிக்காதே! ‘இந்தி மொழியைத் திணிக்காதே’ என்று துவங்கி, ‘இந்தி தெரியாது போடா’ வரை வந்துவிட்டோம்.இப்போது மீண்டும் மத்திய அரசிடமிருந்து இதே மாதிரியான ஒரு போக்கு. இதில் ஆராய வேண்டும் என்றால், கல்வி என்பது மத்திய பட்டியலிலோ, மாநிலப் பட்டியலிலோ இல்லை. அது பொதுப்பட்டியல். அதன் அடிப்படையில் ஒரு தனி மாநிலத்திற்கு அதன் கல்வித்திட்டத்தைக் கட்டமைத்துக் கொள்ள நமது சட்டம் உரிமை அளித்திருக்கிறது. அப்படியிருக்கும் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் – நிறைவேறுமா?

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு அளித்தது இல்லாமல், அவரைக் கீழே தள்ளி விடப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. அந்தப்பெண்ணுக்கு மருத்துவ உதவியும், நஷ்ட ஈடும் அரசாங்கம் தர முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரிய விஷயம் தான். ஆனால் அந்த தண்டனையைச் செய்த நபருக்கு அளிக்கப்படும் தண்டனை என்பது இனி இதுபோன்ற செயல்களைச் செய்ய யாரும் துணிந்திரா வண்ணம் இருக்க வேண்டும். அதை பொதுவெளியில் யாரும் மறக்காதபடி செய்ய வேண்டும்! ஒரு பெண்ணை அவளது விருப்பமின்றி பாலியல் சீண்டல் செய்வதற்கே […]

Categories
அறிவியல் தற்கால நிகழ்வுகள்

உலகம் நம் கையில், நம் மூளை எதன் கையில் ?

உலகமே உன் கையில் என்று நம் கையிலிருக்கும் தொலைநுட்பக் கருவிகள் நமது கையில் உலகத்தைத் திணித்து விட்டு மூளையை அது எடுத்துக் கொள்கிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. சமீபத்திய ஒரு பயணத்தின் போது, எனது நண்பர் ஒருவர், தனது அலைபேசியின் மின்னூக்கியை மறந்து விட்டு வந்துவிட்டார். என்னுடையதும் அவருக்கு ஒப்பவில்லை. ஆகையால் அவரது அலைபேசி மறுநாள் காலை எழும்போது அணைந்து விட்டது. அவருக்கு ஏதோ ஒரு சின்ன ஆத்திரம், தனது வீட்டிற்கு அழைத்துப்பேச வேண்டும் என்று. நான் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

சாமானிய மக்கள் கதிகலங்கும் விமான நிலைய விதிமுறைகள்

சாமானியர்களை மிரட்டுகின்றன விமான நிலைய சோதனைகளும், விதிமுறைகளும். ஆமாம். நான் முதல்முறையாக விமானத்தில் பயணிக்கக் கிளம்பிய போது யாதார்த்தமாக எனது பையை அங்கே கீழே வைத்து விட்டு, சிறிது நகர்ந்து என் குடும்ப்க் கூட்டத்தை ஒருங்கிணைக்கலாம் என்று நகர்ந்த போது அங்கிருந்து பாதுகாவலர்கள் லப லப என்று கத்தியது, ஒரு மாதிரி மனதில் பாரத்தை தான் ஏற்படுத்தியது. ஆனால் அது அவர்களது பணி, விதிமுறை என்பதை நான் அறியாமல் இல்லை. பிறகு பல வருடம் கழித்து விமானம் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ?

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் , ஆனால் கோவில்பட்டியில் குடிநீருக்கே திண்டாட்டம் என்று முன்னாளில் ஒரு கேலி சொலவடை எங்கள் ஊரில் உண்டு. அதாவது எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் இருந்த போது இந்த சொல்வடை சொல்லப்படுவது உண்டு. இது எதற்காக சொல்லப்பட்டது என்றெல்லாம் ஆராயத் தேவையில்லை. சும்மா ஒரு கோர்வையான வார்த்தைக்காக சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் அது கோர்வைக்காக அல்லாமல் உண்மையாகவே சொல்லப்படலாமோ என்று தோன்றுகிறது. ஆம், இந்து முன்னனி, இந்து ஆதரவு, இந்து முன்னேற்றம், […]

Categories
தற்கால நிகழ்வுகள்

என்று தீருமோ இந்த மூடநம்பிக்கை சோகம்?

இஸ்ரோ தனது 100 ஆவது ராக்கெட்டை விண்வெளியில் வெற்றிகரமாக ஏவிய அதே நாளில் தான் இன்னொரு துக்க செய்தியைக் கேட்டறிந்தோம். மஹா கும்பமேளாவில் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் குளிப்பதற்காகத் திரண்ட காரணத்தால் 30 பக்தர்கள் மரணம், அதிகமானோர் காயம். இந்தப்பக்கம் நமது மாநிலத்தின் ஆளுநர் சனாதான தர்மத்தைப் பாதுகாப்போம் வளர்ப்போம் என்று பேட்டி கொடுக்கிறார். இப்படி சனாதான தர்மத்தைக் காப்போம் என்று பேட்டி அளிக்கும் எந்த மிகப்பெரிய ஆளுமையும் அந்த கும்ப மேளா கூட்டத்தில் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இதுதானா வளர்ச்சியின் பலன்?- நெல்லை மருத்துவமனை சம்பவம்.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஆம்புலன்ஸ் கதவு திறக்க முடியாத காரணத்தால் , ஒரு உயிர் போனதை அறிந்து வருந்திய நாம்,வளர்ச்சியடைந்துவிட்டதாகப் பெருமிதம் கொள்ளும் நமது மாநிலத்தில் நிகழ்ந்த கொடுமையை எப்படி சகித்துக்கொள்ளப் போகிறோம்? வளர்ச்சி அடைந்து விட்டோம் என்று புள்ளி விவரங்கள் சொல்வதெல்லாம் சரிதான்,ஆனால் கடைநிலைப் பாமரனும் அந்தப்புள்ளி விவரத்தில் காட்டப்பட்ட வளர்ச்சியின் பலனை அடையாமல் போனால், அது நம் சொந்த சகோதர சகோதரியைப் பட்டினி போட்டு விட்டு, பார்க்க வைத்து நாம் மட்டும் உணவு […]

Categories
தமிழ் நினைவுகள் வரலாறு

உலகின் மூத்த குடி – தொல்பொருள் சொல்லும் தமிழக வரலாறு

உலகின் மூத்தகுடி உன்னதமான எமது தமிழ்க்குடி என்று மார்தட்டிப் பெருமை பேச வேண்டிய தருணம் இது. அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகுத்தி என்ற வரிகளைப் படித்து விட்டு வாய்ச் சவடால் என்று சொல்லும் காலம் மறைந்து விட்டது. சிந்து சமவெளி தான், இல்லை இல்லை, ஐரோப்பியா தான், அட அதுவுமில்லை, எகிப்துதான், அப்ப சீனா என்ன தக்காளியா என்று நாகரீகத்தின் முன்னோடி நாங்கள் தான் என்று ஆளாளுக்குப் போட்டி போட்டுக் கொண்டு வரலாற்றை எழுதி அதை ஒரு தலைமுறை […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இப்படியும் ஒரு இழப்பா?

ஒரு அரசின் அடிப்படைக்கடமை என்பது குடிமக்களுக்கான தரமான வாழ்க்கையை கொடுப்பது மட்டுமல்லாது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பது. மக்களின் அடிப்படைத் தேவையான உணவு, உடை இருப்பிடம் ஆகியவற்றைப் போதுமான கல்வியும், வேலைவாயப்பும் வழங்குவதை வைத்து அவரவர் பூர்த்தி செய்து கொள்வார்கள். ஆனால் மருத்துவ செலவு என்பது சாதாரண மக்கள் அனைவராலும் ஈடுசெய்ய இயலாத ஒன்று. இங்கு அன்றாட நோய்கள் ஏழை பணக்காரனைப் பார்த்து வருவதில்லை. பாமரனுக்கும் லட்சங்களில் செலவு வைக்கும் நோய்களும் இன்றைய நாட்களில் வருவது இயல்பாகி […]