Categories
தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

திரும்பிப் பார்க்க வைத்த இந்தியப் பெண்கள் அணி!

தலைநிமிரந்து பார்க்கிறது இந்தியா ! திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்தியப்பெண்கள் கிரிக்கெட் அணி. இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி என்றால் தூக்கிப் பிடிக்கவும் தாங்கி நிற்கவுமர் கோடான கோடி ரசிகர்கள் உண்டு. ஆனால் பெண்கள் கிரிக்கெட் அணி இப்போது தான் ஓரளவிற்கு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்த்தாலே நாம் இதை விளங்கிக் கொள்ளலாம்பாத்திர சோப்பிலிருந்து துணி துவைக்கும் பவுடர் வரை அனைத்தையும் ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள் தான் விற்று வருகிறார்கள். இவ்வளவு பேசுறியே செவ்வாழ நீ […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

டாக்டருக்கே பல்பா? ப்ரௌவ்னியின் மகிமை!

படித்ததில் பிடித்தது! கிளினிக்கில்மூன்றரை வயது பெண் குழந்தைக்குதொடர்ந்து மூன்று நாட்களாக காய்ச்சல்கூடவே வாந்தி பரிசோதித்ததில்சீசனல் ஜூரம் என்று கண்டறிந்துஅதற்குரிய சிகிச்சை பரிந்துரைத்து அனுப்பினேன். மறுநாள்குழந்தையின் அம்மா “காய்ச்சல் சரியாகிடுச்சு சார்.. பாப்பா மோஷன் கருப்பா போறா சார். பயமா இருக்கு.. அதான் கூட்டிட்டு வந்தேன்” காய்ச்சல் மூன்று நாட்களாக இருந்துநான்காவது நாள் குணமாகி கூடவேமலம் கருப்பாகச் சென்றால்நம்ம புத்தி நேராகடெங்குவுக்குத் தான் செல்லும். பரிசோதனை செய்தேன்.பாப்பா நன்றாக இருந்தார்.வாந்தி குணமாகி இருந்தது.வயிற்று வலி இல்லை. ஆனாலும் மலம் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

இது மிகவும் தவறு!

சமீபத்தில் ஒரு காணொளி காட்சியைக் காண நேர்ந்தது.ஒரு பெண் அரசு அதிகாரி, தன்னை அணுகி ஏதோ பணி நிமித்தமாக வந்திருந்த ஒரு நடுத்தர மதிப்புள்ள வயது மிக்க ஆறு, அதுவும் அந்தப் பெண்ணை விட வயதில் அதிகமான ஆளை நிற்க வைத்துக் கொண்டே வெகு நேரமாக , தனக்கு என்ன உணவு வேண்டும், தனது பணியாளர்களுக்கு என்ன உணவு வேண்டும், தனது வண்டி ஓட்டுனருக்கு என்ன உணவு வேண்டும் என்று நீளமான பட்டியலை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

புயலில் பொரி சாப்பிடலாமா?

நாங்கலாம் புயல்லயே உக்காந்து பொரி சாப்புடறவங்க என்று வசனம் வேண்டுமானால் பேச எளிதாக இருக்கலாம்.ஆனால் புயல் அடித்தால் கதிகலங்கிப் போய்விடுவோம் என்பதை சமீபத்திய தானே, வர்தா , கஜா ஆகிய புயல்கள் நமக்குப் பாடம் நடத்திச் சென்றிருக்கின்றன. புயல் ஏன் உருவாகிறது எப்படி உருவாகிறது? நாம் பள்ளிக்கல்வியில் படித்த பகுதி தான்.கடல்நீர் வெப்பம் அதிகரிக்கும் போது அதன் மேல்பகுதி காற்று சூடாகி மேலே எழும். இதை நாம் பல நேரங்களில் உணர்ந்திருக்கலாம். கிணற்றிலோ குளம் குட்டையிலோ நல்ல […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

அறிவில்லா கத்துக்குட்டி?

ரேஷனில் பொருள் வாங்க மக்கள் வரத்தேவையில்லை.நடமாடும் ரேஷன் வருகிறது. மருந்து வாங்க மருத்துவமனைக்கு மக்கள் வரத்தேவையில்லை. மருந்துகள் வீடு தேடி வருகிறது. பல அரசு சார்ந்த துறை ரீதியான வேலைகளை இணையதளத்திலேயே முடித்துக் கொள்ளலாம். இப்படி பல விஷயங்களுக்காக மக்களை அலைய விடாமல் எல்லாம் இல்லம் தேடி பல விஷயங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதைத்தாண்டி மக்களும் உணவு மளிகை என்று பல விஷயத்தையும் வீட்டில் இருந்தபடியே இணையத்தில் பதிவிட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள். சினிமாவும் கூட முன்புபோல திரையரங்குளுக்குச் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சிந்திக்க வேண்டிய கட்டாயம்!

பட்டாசு.தீபாவளிக்கும் கார்த்திகை தீபத்திற்கும், திருவிழாக்களிக்கும் இன்ன பிற சாவு போன்ற சடங்குகளுக்கும் பட்டாசு என்பது ஆடம்பரமாகவோ இன்றியமையாத ஒன்றாகவோ அல்லது அடிப்படைத் தேவையாகவோ என்று ஏதோ ஒரு கணக்கில் கட்டாயம் தேவை என்று வழக்கமாகிப்போனது. பட்டாசு வெடிப்பதில் நமக்கு பெரிய எதிர்ப்பு இல்லை , பட்டாசு தொழிலை நம்பியே வாழும் சிவகாசி என்ற ஊர் மக்களுக்காக நாமும் பட்டாசு வெடிப்பதை ஆதரித்தே பலமுறை எழுதியிருக்கிறோம். ஆனால் இந்த முறை ஒரு சிறிய மனக்குழப்பம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

எப்போது விடியுமோ?

இத விட மோசமான சூழ்நிலை வரவே வராதுல அப்படின்னு நாம நம்ம வாழ்க்கையில சில நேரங்களைக் கடந்து வந்திருப்போம். அப்படியொரு சம்பவம் தான் இது.ஆனால் இவருக்கு இது புதிதல்ல..இதைப் போன்ற பல மோசமான சூழ்நிலைகளை அவர் சந்தித்திருந்தாலும், விடாப்பிடியாக மனம் தளராமல் எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து தனக்கு மனநிறைவான வேலையைச் செய்பவர். வேறு யார்?தன் வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயி தான். இது வழக்கமாக நிகழ்வது தானே? பயிர் போட்டு […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இதெல்லாம் தப்பு ப்ரோ!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு. ஆனா இந்த விஷயத்தைக் கேளுங்க.எதிர்பார்த்ததை விட அதிக வரவு. வெற்றி என்றால் இப்படி இருக்க வேண்டும்.ஊர் உலகமே வியக்கும் அளவிற்கு மாபெரும் வெற்றி. சும்மா நாங்களும் வென்றோம், நாங்களும் வசூலித்தோம்னு பேசுகிறவர்கள் மத்தியில் , வசூல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், வெற்றி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் , இலக்கைத் தாண்டிய மாபெரும் வெற்றி என்பது இதுதான் என்று நிரூபணமாகி இருக்கிறது. இதை வாசித்த உடனே பலரும் மனதில் நினைத்திருப்பீர்கள், […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தித்திக்கும் தீபாவளி!

தீபாவளி.பண்டிகை என்றாலே மகிழ்ச்சி தான்.அதிலும் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம்.புத்தாடைகளும், மத்தாப்பும், பட்டாசும், பலகாரமும், என அது தரும் நினைவுகளும் மகிழ்ச்சியும் ஏராளம். குழந்தைப் பருவத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்து திகட்டத் திகட்டக் கொண்டாடும் பண்டிகை என்றால் அது தீபாவளி தான். அதிலும் குறிப்பாக 90 களின் குழந்தைகளுக்கு தீபாவளி என்பது தன் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத திகட்டாத இன்பத்தை அள்ளித் தந்த பண்டிகை தான். எனது வாழ்விலும் தீபாவளியைப் பற்றிய மகிழ்ச்சிப் பகிரல்கள் ஏராளம் உண்டு..இப்போது […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இன்னும் எத்தனை போலி?

டாக்டர் கிட்டயும் , வக்கீல் கிட்டயும் பொய் சொல்லக்கூடாதுனு சொல்லுவாங்க, ஆனா உங்ககிட்ட சொல்லக்கூடாத இன்னொன்னு, ” எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல”.கறந்துருவீங்களே? இப்படி கேப்டன் விஜயகாந்த் ரமணா படத்தில் ஒரு வசனம் பேசியிருப்பார். ஒரு தனியார் மருத்துவமனையில் நிகழும் மிகப்பெரிய அநியாயத்தை எதிர்த்து அவர் பேசிய வசனம் இது. அவரது குழந்தை சைக்கிளிலிருந்து கீழே விழுந்து அடிபட்டதற்காக மருத்துவமனை சென்ற அவருக்கு 40000 ரூபாய் வரை மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படும்பிறகு ஒரு இறந்தவரின் சடலத்தைக் கொண்டு சென்று, […]