Categories
கருத்து நினைவுகள் மறைவு

நகல் எடுக்க இயலாத அசல்-அப்பா

பிரதி எடுக்க முடியாத அசல்.அவரைப்போல ஆயிரம் பேர் அறிவுரை கூறலாம்.. அவரைப்போல அக்கறை காட்ட கூட ஆள் வரலாம்.. அவரது அன்பு போலவே சிலர் அன்பு காட்டலாம்.. ஆனாலும் அவர் அவர்தானே? என்றுமே நகல் எடுக்க இயலாத அசல்.. ஆயிரம் ஆயிரம் கவிஞர்கள் புகழ்பாடினாலும், பல்லாயிரக்கணக்கான வார்த்தைகள் கொண்டு கவிதை நூலாக கோர்த்தாலும் அவரின் பெருமையை ஈடு செய்ய இயலுமோ? இவர்தான் அவர்,நமக்காப அவர் செய்தது இதுதான் என யாராவது விளக்கிட இயலுமோ? இவர் இல்லாதிருந்தால் நம் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

கண்ணாடியைப் பார்த்து துப்பிக் கொள்வோமா?

பழைய பதிவு தான்.ஆனால் இன்றைக்கும் இதன் அவசியம் தீரவில்லை. மெர்சல் திரைப்படம்! ஒரு காட்சியில் விஜய் அவர்கள் கோவில் கட்டுவதை விட மருத்துவமனை கட்டுதல் அவசியம் என்ற முடிவை எடுப்பார்! அதை நமக்கு கொரோனாவின் உச்சகாலம் உணர்த்தியது. சென்னையின் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டது.அதாவது ஆரம்ப கட்ட பரவலின் போது.அதன்பிறகு என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். நம்மிடம் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்று ஒப்புக்கொள்ளும் சூழ்நிலை […]

Categories
கருத்து நினைவுகள் மறைவு

அப்பாக்களுக்காக..

If u want to be a role model, be a father or a teacher..அனுபவித்த வாசகம்… மழைக்கால மாலை பொழுதுகள் கொடுத்த அறிவும், அனுபவமும் ஏராளம்.. மழைக்கால மாலை நேரத்தில் மட்டுமே அப்பா  வீட்டில் இருப்பது வழக்கம்.. வெளியே போக முடியாது என்பதால் மட்டுமே வீட்டில் இருப்பார். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு வேலையை செய்ய மிதிவண்டியை மிதித்துக் கொண்டிருப்பார், நாங்கள் சுகமாக வாழ்வதற்காக. இப்போது போல அப்போதெல்லாம் பெரிதாக செலவெல்லாம் செய்ததில்லை.. வீட்டு […]

Categories
சினிமா நினைவுகள்

ஆண்டவா- மீண்டு வா- கமல் ரசிகன்

பூசாரிக்கு அலங்காரம் செய்யத் தெரியாவாட்டால், கருவறையில் இருக்கும் கடவுள் கூட அலங்கோலம் தான்.ஆனாலும் கடவுள் எப்போதும் கடவுள் தான்..கல்லாகப் பார்த்தால் கல்.சிலையாகப் பார்த்தால் சிலை. அப்படி ஒரு அற்புதமான சிலை தான், இப்போது தொடர்ச்சியாக அலங்கோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவாக கமலஹாசன் படங்கள் என்றால் ஓரிரு நாட்களிலும், நானே சினிமாவிற்குத் தனியாகப் போக ஆரம்பித்த பிறகு முதல் நாளிலும் படம் பார்த்து விடுவேன். பின்புலமும் காரணமும் இல்லாமல் இல்லை. என் தந்தையும் சரி எனது அண்ணனும் சரி தீவிரமான […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

தாய் மொழியும், தந்தையின் ஊரும்

சொந்த ஊர் , மொழி என்பது எப்போதும் ஒரு தனி உணர்வு தான் நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த ஊர் பற்றியோ அல்லது சொந்த ஊர் சம்பந்தமான ஆட்களைப் பற்றியோ, பேசும் போதும், அவர்களைப் பார்க்க நேர்ந்தாலோ அல்லது பழக நேர்ந்தாலோ அது ஒரு தனி இன்ப உணர்வு. இன்னும் சிறிது நேரம் இவர்களோடு உறவாடக்கூடாதா, என்று மனம் ஏங்கும்.ஆனாலும் பணியோ சூழ்நிலையோ அதை அனுமதிக்காத போது கனத்த இதயத்தோடு, அவர்களிடம் விடைபெற்று, அப்பப்ப […]

Categories
சிறுகதை நினைவுகள்

மாம்பழமும் நாமும்

மாம்பழம் பற்றி பலருக்கும் பல கதைகளும் இருக்கும். நமக்குத் தெரிந்து பரமசிவன் குடும்பம் பிரிந்ததே ஞானப்பழம் என்று பெயரிடப்பட்ட மாம்பழத்தின் காரணத்தினால்தான். அதைத் தாண்டி நமக்கெல்லாம், மாம்பழம் என்றவுடன் அப்துல்லா கதையும் ஞாபகத்தில் வரும். இதோ இங்கேயும் அதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஊரில் உள்ள ஒரு மிகப்பெரிய கஞ்சனின் மாம்பழத்தோட்டம் வழியாக அப்துல்லா நடந்து செல்கிறான்.அப்போது, அங்கே பழுத்துத் தொங்கிய மாம்பழங்களின் வாசனையை உணர்ந்து அவன், ஆஹா, எவ்வளவு மனம்.இதைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும் […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வறுமை தந்த அனுபவம்.

இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலான குழந்தைகள் வறுமை என்பதை உணரும் விதமாக வளர்வதில்லை. இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது பெரும்பான்மை மட்டுமே. 100 சதவீதம் அல்ல. இன்றைய நாளில் பொதுவாகவே ஒரு 3-4 வயது குழந்தை செல்போனை முழுமையாக இயக்கும் அளவிற்கு திறன் பெற்ற குழந்தைகளாகவும், பெரும்பாலான வீடுகளில் செல்லும் என்பது அத்தியாவசியம் போலவும் ஆகிப் போனது. எங்களது, அதாவது 90 களில், வீடுகளில் தொலைக்காட்சி என்பதே அரிது. தொலைக்காட்சியைக் கூடப்பக்கத்து வீடுகளில் சென்று தான் பார்க்க வேண்டிய கட்டாயம். ஆனால் […]

Categories
கருத்து

நட்பும், உறவும், சுற்றமும்.

நண்பர்கள். ஒரு வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள். அர்த்தங்கள் மட்டுமல்ல. அன்பும் அளவளாவியது. தாய் தகப்பனின் அன்புக்கும் ஆதரவுக்கும் ஈடாக, சகோதர, சகோதரிகளின் அக்கறைக்கு ஈடாக அன்பு காட்டி ஆதரவு செலுத்தும் நல் உள்ளங்கள். ஆயிரம் சொந்தங்களுக்கு ஈடானவர்கள்.சில நேரங்களில் அப்பா செய்ய வேண்டிய கடமைகளை செய்பவர்கள். சில நேரங்களில் அம்மா காட்ட வேண்டிய பாசத்தை காட்டுபவர்கள்.சில நேரங்களில் ஆசான் கொடுக்க வேண்டிய அறிவுரைகளைக் கொடுப்பவர்கள். ஆபத்தில் நம்மைக் காக்க முதல் ஆளாக நிற்பவர்கள். நம் பிரச்சினைய அவர் […]

Categories
கருத்து

அப்பாக்களுக்காக-1

குழந்தைப் பருவத்தில் நாயகனாக, வழிகாட்டியாகத் தெரியும் அதே தந்தை விடலைப் பருவத்தில் வில்லனாகத் தெரிவது வழக்கம். அதைச் செய்யாதே, இதைச்செய்யாதே mobile ரொம்ப உபயோகிக்காதே, சிகரெட் பிடிக்கும் பழக்கம் வந்துவிட்டதோ? தண்ணி அடிக்கிற மாதிரிதெரியுதே? என்ன செலவு பண்ற? நல்ல ஆட்களோட மட்டும் பழகு. நல்ல பழக்கங்களைப் பழகு என்று சொல்லும் போதும், கேட்கும் போதும், வெறுப்பாகத் தான் தோன்றுகிறது. சும்மா எப்ப பாரு advice. என்ற வாசகத்தை உபயோகிக்காதவர்கள் வெகு குறைவு. ஆனால் அவர் பேசுவது […]

Categories
நினைவுகள்

இனிக்கும் நினைவுகள்!

பள்ளி ஆண்டு விழா! பெற்றோர், பெரியோர், தாத்தா, பாட்டி, பேரக் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் ஒருங்கிணைந்த நீங்கா நல்ல நினைவுகளைத் தரும் நிகழ்வு பள்ளியின் ஆண்டு விழா. இதன் உணர்வு எனக்கு 1992 துவங்கி இப்போது வரை பயணிக்கிறது. ஆமாம். 1992 ல் எனது பள்ளியின் ஆண்டு விழா!இந்த ஆண்டு எனது மருமகளின் பள்ளி ஆண்டு விழா. 1992 லும், இப்போதும் எனக்குக் கிடைத்த உணர்வு என்பது ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட […]