Categories
கருத்து குட்டி கதை நினைவுகள்

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை என்பதை நாம் அதிகமுறை கடந்து வந்திருப்போம்.அந்த சொல்லாடல் ஆனது ஏமாற்றுக்காரர்களை உருவகப்படுத்துவதற்காக சொல்லப்படும் சொல்லாடலாகவே இன்றளவும் இருநரது வருகிறது. அதாவது, இவன் சரியான திருடனா இருக்கானே, முழுப்பூசணிக்காயல்ல சோத்துல மறைக்கப் பாக்குறான் என்ற ரீதியில் தான் நாம் அதை அதிக முறை கேட்டிருப்போம். ஆனால் உண்மை அதுவல்ல. இது முற்றிலும் தவறானது. சரி, முழு பூசணிக்காய் சோத்துல மறைப்பது என்னவென்று இந்தக்கதையில் பார்க்கலாம். சிறிது காலத்திற்கு முன்பு ஒரு கிராமத்தில் […]

Categories
சிறுதுணுக்கு தகவல் நினைவுகள்

The kiss of life.

1967 ம், ஆண்டு எடுக்கப் பட்ட “The Kiss of Life.” என பெயரிடப் பட்ட புகைப்படமே இது, ராண்டல் மற்றும் தொம்சன் ஆகிய இருவரும், வழமையான எலேக்ரிசிட்டி பவர் கேபிள் மீது சீர்திருத்தம் செய்து கொண்டிருந்த போது, திடீர் என, ராண்டல் உடல் மின்சாரத்தினால் தாக்கப்பட்டு அடுத்த வினாடியே, அந்த வயர்களில் சிக்குண்டு நினைவிழந்து போகிறார். அவர் கீழே, விழாமல் தாங்கிப் பிடித்த தொம்சன், செயற்கை சுவாசம் கொடுக்கும் போது எடுக்கப் பட்ட படமே இது […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

காவல்துறை யார் நண்பன்?

நமக்கு எதுக்குப்பா வம்பு என்று சாமானியர்கள் பலரும், பலவற்றை சகித்துக் கொண்டு தங்களது ஆத்திரத்தையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு இருக்குமிடம் தெரியாமல் வாழ்வதற்குக் காரணம், இந்த அமைப்பின் மீதான அதீத பயம் தான். காவல்துறை உங்கள் நண்பன் வாசகம் இங்கே யாருக்குப் பொருத்தம் என்பது தான் முதல் கேள்வி. விடை தெரியாத கேள்வி. காவல்துறை என்றால் ஒட்டுமொத்த காவல்துறையும் தங்களது வேலையைச் செய்யவில்லை அல்லது அனைத்து காவலர்களும் தவறானவர்கள் என்று சித்தரிப்பது நமது நோக்கமல்ல. காவல்துறையில் பணிபுரியும் […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

கள் மட்டும் தான் சமுதாய சீரழிவோ?

சில விஷயங்களை நாம் மிக யதார்த்தமாகப் பழகிக் கொண்டோம்.கள்ளு இறக்கத் தடை இருக்கும் இதே மாநிலத்தில் கொக்கைன் மிக எளிதாக வெகு காலமாகப் புழக்கத்தில் இருந்திருக்கிறது. அதுவும் மிகப் பிரபலமான மனிதர்களிடையே அது சர்வ சாதாரணமாகக் கைமாறியிருக்கிறது. நாம் இதுநாள் வரை கள்ளு இறக்க ஏன் தடை? அதுவும் ஒரு தொழில் தானே?பனை மரங்களின் எண்ணிக்கை கூடும், அதைச் சார்ந்த தொழில்கள் பெருகும் என்று கேள்வி கேட்டதுமில்லை. கொக்கைன் போதையில் சினிமா பிரபலங்கள் என்பதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடையவுமில்லை […]

Categories
கருத்து நினைவுகள் மறைவு

நகல் எடுக்க இயலாத அசல்-அப்பா

பிரதி எடுக்க முடியாத அசல்.அவரைப்போல ஆயிரம் பேர் அறிவுரை கூறலாம்.. அவரைப்போல அக்கறை காட்ட கூட ஆள் வரலாம்.. அவரது அன்பு போலவே சிலர் அன்பு காட்டலாம்.. ஆனாலும் அவர் அவர்தானே? என்றுமே நகல் எடுக்க இயலாத அசல்.. ஆயிரம் ஆயிரம் கவிஞர்கள் புகழ்பாடினாலும், பல்லாயிரக்கணக்கான வார்த்தைகள் கொண்டு கவிதை நூலாக கோர்த்தாலும் அவரின் பெருமையை ஈடு செய்ய இயலுமோ? இவர்தான் அவர்,நமக்காப அவர் செய்தது இதுதான் என யாராவது விளக்கிட இயலுமோ? இவர் இல்லாதிருந்தால் நம் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

கண்ணாடியைப் பார்த்து துப்பிக் கொள்வோமா?

பழைய பதிவு தான்.ஆனால் இன்றைக்கும் இதன் அவசியம் தீரவில்லை. மெர்சல் திரைப்படம்! ஒரு காட்சியில் விஜய் அவர்கள் கோவில் கட்டுவதை விட மருத்துவமனை கட்டுதல் அவசியம் என்ற முடிவை எடுப்பார்! அதை நமக்கு கொரோனாவின் உச்சகாலம் உணர்த்தியது. சென்னையின் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டது.அதாவது ஆரம்ப கட்ட பரவலின் போது.அதன்பிறகு என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். நம்மிடம் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்று ஒப்புக்கொள்ளும் சூழ்நிலை […]

Categories
கருத்து நினைவுகள் மறைவு

அப்பாக்களுக்காக..

If u want to be a role model, be a father or a teacher..அனுபவித்த வாசகம்… மழைக்கால மாலை பொழுதுகள் கொடுத்த அறிவும், அனுபவமும் ஏராளம்.. மழைக்கால மாலை நேரத்தில் மட்டுமே அப்பா  வீட்டில் இருப்பது வழக்கம்.. வெளியே போக முடியாது என்பதால் மட்டுமே வீட்டில் இருப்பார். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு வேலையை செய்ய மிதிவண்டியை மிதித்துக் கொண்டிருப்பார், நாங்கள் சுகமாக வாழ்வதற்காக. இப்போது போல அப்போதெல்லாம் பெரிதாக செலவெல்லாம் செய்ததில்லை.. வீட்டு […]

Categories
சினிமா நினைவுகள்

ஆண்டவா- மீண்டு வா- கமல் ரசிகன்

பூசாரிக்கு அலங்காரம் செய்யத் தெரியாவாட்டால், கருவறையில் இருக்கும் கடவுள் கூட அலங்கோலம் தான்.ஆனாலும் கடவுள் எப்போதும் கடவுள் தான்..கல்லாகப் பார்த்தால் கல்.சிலையாகப் பார்த்தால் சிலை. அப்படி ஒரு அற்புதமான சிலை தான், இப்போது தொடர்ச்சியாக அலங்கோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவாக கமலஹாசன் படங்கள் என்றால் ஓரிரு நாட்களிலும், நானே சினிமாவிற்குத் தனியாகப் போக ஆரம்பித்த பிறகு முதல் நாளிலும் படம் பார்த்து விடுவேன். பின்புலமும் காரணமும் இல்லாமல் இல்லை. என் தந்தையும் சரி எனது அண்ணனும் சரி தீவிரமான […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

தாய் மொழியும், தந்தையின் ஊரும்

சொந்த ஊர் , மொழி என்பது எப்போதும் ஒரு தனி உணர்வு தான் நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த ஊர் பற்றியோ அல்லது சொந்த ஊர் சம்பந்தமான ஆட்களைப் பற்றியோ, பேசும் போதும், அவர்களைப் பார்க்க நேர்ந்தாலோ அல்லது பழக நேர்ந்தாலோ அது ஒரு தனி இன்ப உணர்வு. இன்னும் சிறிது நேரம் இவர்களோடு உறவாடக்கூடாதா, என்று மனம் ஏங்கும்.ஆனாலும் பணியோ சூழ்நிலையோ அதை அனுமதிக்காத போது கனத்த இதயத்தோடு, அவர்களிடம் விடைபெற்று, அப்பப்ப […]

Categories
சிறுகதை நினைவுகள்

மாம்பழமும் நாமும்

மாம்பழம் பற்றி பலருக்கும் பல கதைகளும் இருக்கும். நமக்குத் தெரிந்து பரமசிவன் குடும்பம் பிரிந்ததே ஞானப்பழம் என்று பெயரிடப்பட்ட மாம்பழத்தின் காரணத்தினால்தான். அதைத் தாண்டி நமக்கெல்லாம், மாம்பழம் என்றவுடன் அப்துல்லா கதையும் ஞாபகத்தில் வரும். இதோ இங்கேயும் அதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஊரில் உள்ள ஒரு மிகப்பெரிய கஞ்சனின் மாம்பழத்தோட்டம் வழியாக அப்துல்லா நடந்து செல்கிறான்.அப்போது, அங்கே பழுத்துத் தொங்கிய மாம்பழங்களின் வாசனையை உணர்ந்து அவன், ஆஹா, எவ்வளவு மனம்.இதைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும் […]