Categories
ஆன்மீகம் தமிழ் நினைவுகள்

ஊர் சுற்றலாம் வாங்க- நாசிக் நகர அழிகியல் – இரண்டாவது பாகம்

அழகிய நாசிக் நகரின் அழகியலை வர்ணித்த முதல் பகுதியின் தொடர்ச்சியாக இந்த இரண்டாவது பகுதி. ஒரு ஊரில் இத்தகைய சிறப்புகள் மொத்தமும் இருப்பதைக் கண்டு வியந்து போனேன். இது ஒரு பகுதி மலை வாசஸ்தளம். கடல் மட்டத்திலிருந்து 1916 அடி உயரம் கொண்டது.நமது மாநிலத்தின் ஊட்டியில் பாதி உயரம்.ஆதலால் இங்கு ஊட்டியின் தட்பவெப்ப சூழலில் பாதியை அனுபவிக்கலாம். அடுத்தது, இந்த நகரம் கோதாவரி ஆற்றங்கரையில் உள்ளது.ஆர்ப்பரித்து ஓடும் நதியின் அழகில் மயங்கித்தான் போகிறோம். ராமாயண காவியத்தோடு மிகுந்த […]

Categories
தமிழ் நினைவுகள் மறைவு

இளைப்பாறுங்கள் சாம்ராட் – ரத்தன் டாடா

மிகப்பெரிய தொழிலதிபர், பெரிய கார்ப்பரேட் முதலாளி என்பதையெல்லாம் தாண்டி, மிகப்பெரிய கொடை வள்ளல் என்ற ஒரு விஷயம் தான் அவர்மீது மொத்த இந்திய மக்களுக்கும் அன்பு ஏற்படுத்தியது. கொரோனா காலங்களிலும் சரி, மற்ற காலங்களிலும் சரி அள்ளிக் கொடுப்பதில் ஒரு போதும் அவர் எவரை விடவும் குறைந்ததில்லை. சரியான புள்ளிவிவரங்கள் இல்லாவிட்டாலும் வாய்வழியாக சொல்லப்படும் கருத்தின் படி அவர் தனது சம்பாத்தியத்தில் கிட்டதட்ட 60-65 சதவீதம் வரை தானமாக அளித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் அவ்வளவு கொடுத்திருந்தாலும் […]

Categories
தமிழ் நினைவுகள்

ஊர் சுற்றலாம் வாங்க – நாசிக் நகரம்

நாசிக் நகரம், இந்திய நாட்டின் மேற்கு பகுதியில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் ஒரு நகரம். கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ளஅழகான, சிறப்பான, தெய்வீகமான, பூர்விக வரலாறு கொண்ட நகரம். மேலும் இந்தியாவின் திராட்சை நகரம், மற்றும் ஒயின் எனப்படும் திராட்சை ரசத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படும் சிறப்பு உடையது. கிட்டதட்ட 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரமானது கடல் மட்டத்திலிருந்து 1916 அடி உயரத்தில் இருப்பதால் பகுதி மலைப்பிரதேசம் போல இனிய காலநிலை கொண்டது. இது […]

Categories
தமிழ் நினைவுகள்

தொலைக்காட்சி – அதிசய பெட்டியின் நினைவுகள் (பாகம் 2)

அரிதாகக் கிடைத்த ஒன்று அருகிலேயே இருக்க, இருக்க அதன் மதிப்பு குறைந்து கொண்டே வரும் என்பது தொலைக்காட்சிக்கும் பொருந்தும். தொலைக்காட்சி சம்பந்தமான நினைவுகளை முதல் பகுதியில் அளவளாவினோம். தொலைக்காட்சியின் மீது நான் கொண்ட அன்பை, எனது தனிப்பட்ட காதலை, என் குடும்பத்தின் மதிப்புமிக்க சொத்தைப் பற்றிய தனிப்பட்ட நினைவுகளை இந்தப்பகுதியில் பதிகிறேன். எங்கள் வீட்டில் இருந்தது ஒனிடா வகை வண்ணத் தொலைக்காட்சி, அதுவும் 20 இன்ச் அளவில். பெரும்பாலான வீடுகளில் கதவு வைத்த சாலிடர், பிபிஎல் போன்ற […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஆசிரியர் பணி – அவலப்பணி- பகுதி 2

ஆசிரியர் பணியில் எனது தனிப்பட்ட அனுபவம் என்பது கசப்பாக இருந்த விதத்தை பகுதி 1 ல் பேசியிருந்தோம். இந்த பகுதியில் மற்ற சில அவலங்களைப் பற்றி பிரச்சினைகள் பற்றி பேசலாம். பொதுவாக எந்தவொரு வேலைக்கு சேரும் போதும், பட்டதாரிகளின் பட்டம் நிர்வாகத்தால் வாங்கி வைக்கப்படுவதில்லை. ஏன் மாவட்ட ஆட்சியாளராகவே பணியாற்றும் நபரிடமும், நேர்காணல் முடிந்த பிறகு, அவரது பட்டங்களை சோதித்து விட்டு அதைத் திருப்பி அளித்து விடுவார்கள். ஆனால் இந்த தனியார் கல்லூரிகளிலோ, அடமானம் போல நாங்கள் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஆசிரியர் பணி – அவலப்பணி

இன்று ஒரு தலையங்கம் பார்த்தேன். அறிவை வளர்க்கும் ஆசிரியர் பணி என்ற தலைப்பில். அது சரிதான். ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி என்றும் சொல்வடை உண்டு. ஏத்திவிடும் ஏணி, நகர்த்திவிடும் தோனி என்று செப்டம்பர் 5 ஆம் தேதி பெரிய பாராட்டுப் பத்திரமே நடக்கும். இதெல்லாம் சரிதான். ஆனால், உண்மையிலேயே ஆசிரியர்களின் நிலை என்ன? அதை யாரும் அறிந்து கொள்வதுமில்லை, கேள்வி கேட்பதும் இல்லை. நான் சொல்லவருவது தனியார் பள்ளி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் […]

Categories
தமிழ் நினைவுகள்

தொலைக்காட்சி – அதிசய பெட்டியின் நினைவுகள்

தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடே இன்று இல்லை என்ற நிலை வந்து விட்டது. முன்பெல்லாம் ஒரு தெருவில் ஓரிரு வீடுகளிலோ அல்லது ஊரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் தொலைக்காட்சி அறையிலோ காணப்பட்ட அரிய வகை பொருள் இன்று மிகச்சாதாரண பொருளாகிப் போனது.அதிலும் அதில் ஒளிபரப்பபடும் விஷயங்களும், நேரமும் சிறிது காலத்திற்கு முந்தைய நிலையை ஒப்பிடும் போது இப்போது மிக அபிரிமிதமாகிப் போனதால் அதற்கான மரியாதை குறைந்து விட்டது போன்ற தோற்றம் உருவாகி வருகிறது. முன்பெல்லாம் வாரம் ஒன்றோ அல்லது […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

அமாவாசை சம்பிரதாயம்- சடங்கா அல்லது வியாபாரமா?

முதலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி என்ற இரு நாட்களும் பூமியின் சுழற்சியால் மாதம் ஒரு முறை வரும் சுழற்சியான நாட்கள் என்பதையும், இந்த இரு நாட்களுக்கும் விசேஷ சக்தி என்பதெல்லாம் இல்லை என்பதையும், ஈர்ப்பு விசையில் உள்ள மாறுதல் காரணமாகவே கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளன என்பதையும் அறிவியல் பூர்வமாக நாம் அறிந்திட வேண்டும். சரி இது அறிவியல்.அதாவது ஒரு இருசக்கர வாகனம், அல்லது ஒரு மகிழுந்து எப்படி இயங்குகிறது என்று கேட்டால், இயந்திரவியல் விளக்கம் […]

Categories
கருத்து சிறுகதை தமிழ்

மருந்தை விட்டது போகட்டும், வாழப்பழத்தையும் விட்டுட்டான்!

நமது வாழ்வியல் எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போலத்தான் மருத்துவ தேவைகளும் அமையும் என்பதை மறந்து சிலர், “நான் மருந்து மாத்திரைகளைத் தவிர்த்து வாழ்ந்து வருகிறேன்”, அல்லது “மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழ முயற்சி செய்கிறேன்” என்று கூறி வாழ்வியலையும் மாற்றிக் கொள்ளாமல் இறுதியில் பெரிய தாக்கங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அதை ஒரு உரையாடலாக பதிவிடுகிறோம்.இதில் சிறிது கற்பனை, மீதி உண்மை. (டூட் என்பது dude என்ற ஆங்கிலச் சொல்லை குறிக்கிறது. Dude என்பது கவலையில்லாமல் சுற்றும் […]

Categories
சினிமா தமிழ்

ரசிக்கக்கூடிய என்டர்டைனர் – கடைசி உலகப்போர் – சினிமா விமர்சனம்

Lockdown சமயத்தில் வெளியான சிறப்பான கலை படைப்புகளில் ஒன்று “நான் ஒரு ஏலியன்“ என்ற ஹிப்ஹாப் தமிழாவின் இசைதொகுப்பு.  நல்ல நினைவுகளை ஏன் தேடிக்கொள்ள வேண்டும், நட்பு பாராட்டுவத்தின் முக்கியத்துவம், வாழு வாழவிடு, போன்ற தத்துவங்கள் வெளிப்படும் துடிப்பான ஆல்பம் என்று சொல்லலாம். எல்லாம் முடிஞ்சி திரும்பி பார்த்தாநினைவு மட்டும்தான் இருக்கும்,அந்த நினைவில் வாழும் சில ஞாபகங்கள்தான்கடைசி வரைக்குமே நிலைக்கும்.நல்ல நட்பு, சுற்றி சொந்தம்,கடைசி வரைக்குமே அன்ப தரனும்.ஒரு வேலை மரணம் வந்தாக்கூடநான் சிரிச்சிக்கிட்டேதான் கண்ண மூடனும்.நான் […]