சில நினைவுகள் இனிமையாகவும், சில நினைவுகள் தீராத ரணமும் தரும் விதமாக அமைவது இயற்கை. அப்படி இனிமையாக அல்லாத நினைவுகள் நல்ல பாடத்தை தரும் என்பதில் ஐயமில்லை. சமகால வராலாற்றில் மறக்க முடியாத நாள் செப்டம்பர் 11,2001. உலகத்திற்கே தீவிரவாதத்திற்கு எதிரான பெரிய படிப்பினையைத் தந்த மிகக் கொடுமையான ஏற்றுக்கொள்ளப்படாத அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த நாள். அமெரிக்காவிலிருந்த உலக வர்த்தக மையம் மற்றும் பாதுகாப்புத்துறையின் பென்டகன் கட்டிடம் ஆகியவை தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட விமானங்களைக் கொண்டு தாக்கப்பட்ட நாள். […]
Tag: நினைவுகள்
மில்கா சிங். (நவம்பர் 20,1929 – சூன் 18,2021) இந்திய தடகள வீரர். தனது மின்னல் வேக ஓட்டத்திற்காக பறக்கும் சீக்கியர் என்று அழைக்கப்பட்டவர். காமன்வெல்த் போட்டிகளில் தனிநபர் தடகள விளையாட்டில் தங்கம் வென்ற முதல் சுதந்திர இந்தியாவின் வீரர் என்ற பெருமைக்கு உரியவர்.2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இவரது இந்த சாதனை யாராலும் முறியடிக்கப்படவில்லை. அது போல ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற வீரராக இவர் மட்டுமே திகழ்கிறார். […]
இந்திய சுதந்திரப்போர் வேட்கையை முதலில் தூண்டிய ஒரு வீரனை சற்று நினைவில் கொள்ளலாம். இது வேலூர் சிப்பாய் கலகத்திற்கெல்லாம் முன்னோடியாக 1751 லேயே வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வீரனின் கதை. இன்றைய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் என்ற ஊரை தலையிடமாகக் கொண்ட பாளையத்தின் அரசன் பூலித்தேவனை சற்றே நினைவில் கொள்ளலாம். நெற்கட்டான் செவல் மருவி நெற்கட்டும்செவல் என அர்த்தமே மாறி நிற்கிறது. அதையும் கட்டுரையில் பார்க்கலாம். முதலில் பாளையத்தின் வரலாறு. பூழி நாடு:1378 […]
காற்றில் நஞ்சை கலந்துகாசெனும் பேயை அடைந்திட,ஓசோனில் ஓட்டை விழுந்துஓயாத இரைச்சலும் பெருகி,பூச்சியும் மாண்டொழிந்துபுல்வெளிகள் காய்ந்து கருக, ஆட்டமும் அதிகம் ஆகிஆள்பவன் நான் எனக்கருதி,ஓட்டமாய் ஓடியே மனிதன்ஒன்பதாம் கோளையும் தாண்டிட,பூமியே தனக்கென கருதிபூதமாய் மாறிய மனிதன்அத்தனை வளத்தையும் சுரண்டிமொத்தமாய் அபகரிக்க நினைத்தான். ஆர்ப்பரித்து வந்த கடல்ஆட்களை கொன்று குவித்தும்,சிலிர்த்து எழுந்த கோளதுவாய்பிளந்து கொன்று குவித்தும்,வெடித்து கிளம்பிய எரிமலைவெப்பத்தால் கருக்கி எரித்தும்திருந்தவே இல்லை மனிதன்திமிர் பிடித்ததாலே! பொறுத்துக் கொண்ட அன்னைபொங்கி விட்டாள் இன்றுகொரோனா எனும் கிருமிகொலை செய்கிறது நின்று,அகங்காரம் கொண்ட […]
க்ளோவர் இலை வடிவ மேம்பாலம். இந்த வகையான மேம்பாலம் போக்குவரத்து மிக அதிகமான இடங்களில், வாகனங்கள் ஒரு திசையிலிருந்து இரண்டு அல்லது மூன்று திசைகளுக்கு பிரிந்து தடையில்லாமல் செல்வதற்காக ஏற்படுத்தப்படும் பாலம் . இந்தப்பாலங்கள் கீழ்க்கண்ட இந்த இலையின் வடிவில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக, தேவைகளுக்கு ஏற்ப, இணைக்கும் திசைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது. அமெரிக்காவின் வெர்ஜினியா, கலிபோர்னியா, மிச்சிகன், போன்ற மாநிலங்களிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரிலும் இந்த […]
ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்! ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர் கதை தானாம்! அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்,குனிஞ்சி பார்த்தா பூமி,இடையில் அவன்தான் பாரம்.கால் நடக்க நடக்க நீளும் தூரம். மாரி செல்வராஜ் (“ஒரு ஊருல ராஜா” பாடல் வரிகள், இசை சந்தோஷ் நாராயணன்) சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, சில சினிமாக்கள், புத்தகங்களைப்போல நல்ல கருத்துகளைத் தருவதாகவும், சில சினிமாக்கள் நமது வாழ்க்கையில் நாம் கடந்து வந்த நல்ல மற்றும் கசப்பான […]
ஜோதிடம், ஜாதகம், ஓலைச்சுவடி, கிளி ஜோசியம், கை ரேகை பலன், என்று விதவிதமாக, மனிதனின் வாழ்க்கை எப்படி அமையும்? என்ற ரீதியில் பல கோணங்களில் கணித்து சொல்ல பல வகையான ஆட்களை காண முடிகிறது. பெரும்பாலும் ஜாதகம் அதில் பிரதானமான ஒன்றாக உள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்தும் முன்பு இருவரின் ஜாதகங்களும் ஒப்பிடப்பட்டு நன்கு ஆராயப்பட்ட பிறகே பத்திரிக்கை அடிக்கப்படுகிறது. அப்படி இருந்தாலும் கூட சில திருமணங்கள் விவாகரத்தில் முடிவதற்கான காரணம் இருவரின் மனம் […]
நூற்றாண்டு கண்ட கலைஞர் புகழ்
தமிழக அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் இவரது பங்கு எல்லையற்றது. கூட்டணி சாதுர்யம், ஆட்சியில் நற்கவனம், மற்றும் பலவகையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் வல்வராகிய கலைஞர் கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசியல்வாதி என்றாலே நேர்மறையான விமர்சனங்களுக்கு ஈடாக எதிர்மறையான விமர்சனங்களும் இருப்பது நிதர்சனம் தான். ஆனால் நாம் இப்போது அந்த எதிர்மறை விமர்சனங்களை மறந்து அவரிடமிருந்து நாம் பெற்ற இனிய நினைவுகளை மட்டுமே சற்று ஆராயலாம். கலைஞர் என்ற பட்டம் அவரது எழுத்து அவருக்குக் கொடுத்த பரிசு. […]
ஒரு தோராயமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி அல்லது பேரூராட்சிகளில் இருக்கும் கசாப்பு கடைக்காரர்கள் அனைவரும் இதுபோல இருக்கலாம். இது எனது ஊரின் கசாப்புக் கடைக்காரரைப் பற்றிய எனது நினைவுகள். பளபளப்பான கட்டிடம், டைல்ஸ் பதித்த தளமெல்லாம் கிடையாது. ஒரு சின்ன பெட்டிக்கடை அளவில் இருக்கும் கசாப்புக் கடையில், அந்த கடைக்காரரும் அங்குள்ள ஒரு வேலை ஆளும், அவர்கள் இருவரும் கறிவெட்டும் கட்டைகள், இவை மொத்தமும் அந்த இடத்தை ஆக்கிரமித்து விடும். வேலை ஆள் என்பவர் பெரும்பாலும் […]
உலகம் விசித்திரமானது. பல இடங்களிலும், பல விதப்பட்ட, விசித்திரமான விஷயங்கள் இயற்கையாகவோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ இருக்கும். அப்படி ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்த ஒரு உணவகத்தைப்பற்றி நினைவில் கொள்ளலாம். கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் மத்திய இரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் இந்தியன் காபி ஹவுஸ் என்ற உணவகம் பற்றியது தான் இந்தப் பதிவு. அங்கே என்ன அப்படி வித்தியாசம் என்றால், என் வயதுக்கு அப்போது வாத்துக்கறியும், வாத்து முட்டையுமே வித்தியாசமானது தான். அது கேரளாவில் […]