Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

இப்படியும் சில மனிதர்கள்!

கபடு வாராத நட்பும்,அன்பு அகலாத கணவனும் , மனைவியும்,தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும் என்று பாடியிருக்கிறார் பட்டர். சந்தானம் அதாவது, குழந்தைகள் நல்வழியில் நடப்பவர்களாகவும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அன்பு குறையக் கூடாது எனவும் பாடியிருக்கிறார். இது அப்படியே கிடைத்திருக்கிறது ஸ்பெயின் நாட்டில் வாழும் இந்த தம்பதிக்கு.கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பு குறையாதவர்கள். அதேபோல, அவர்களுக்குப் பிறந்த குழந்தையும் நல்ல குழந்தை, பெற்றோரின் மீது அளவற்ற அன்பும், நல்ல பண்பும் உடைய குழந்தை. என்ன ஒரே ஒரு […]

Categories
தற்கால நிகழ்வுகள்

உச்சகட்ட கடுப்பேற்றிய ரயில் பயணம்.

பயணம் என்றாலே மகிழ்ச்சி தான், அதுவும் ரயில் பயணம் என்பது ஒரு தனி அனுபவம் தான். அப்படியான ரயில் பயணங்கள் நமக்கு சில நேரங்களில் கசப்பான அனுபவத்தையும் தரும். அதை நாம் முன்பு ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறோம். அதைப்போலவே கடுப்பேற்றிய இன்னொரு பயணத்தைப் பற்றிய பதிவு தான் இது. பணிநிமர்த்தமாக ஹைதராபாத் பயணம்.தனக்குத் தேவை இருக்கும் வரைக்கும் தான் கடவுளுக்கும் இங்கே அர்ச்சனை என்ற ரீதியாக, எங்களை தங்கள் பணிக்கு அழைத்த தனியார் நிறுவனம், சென்னையிலிருந்து ஹைதராபாத் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இ(து)ன்பச் சுற்றுலா!

இரு நண்பர்களுக்கிடையிலான உரையாடல். நபர் 1: என்ன மச்சான் வெயில் இந்தப் பொள பொளக்குது.நபர் 2: ஆமா, மச்சான்.இப்பத்தான் சித்திரை பிறந்திருக்கு.இப்பவே வெயில் இப்படி இருக்குனா இன்னும் அக்னி வெயில்லாம் வரப்ப நம்ம உசுரோட இருப்போமானே தெரியலியே மச்சான். நபர் 1: ஆமாடா இதுல இந்த சனியன் புடிச்ச டிராபிக் வேற. ச்சேய். காலைல நல்லா குளிச்சி மொழுகி பளபளனு வேலைக்குக் கிளம்பினா, வேலைக்குப் போயி சேரக்குள்ள எம் மூஞ்சியே எனக்கே அடையாளம் தெரியாத போயிடுது மச்சான். […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

ஐயையோ அல்ல- ஹய்யா கோடை விடுமுறை

கோடை விடுமுறை. வரப்போகுது கோடை விடுமுறை.துவங்கிவிட்டது பெற்றோர்களுக்குத் தலைவலி. காலையில் எழுப்பி, குளிப்பாட்டி, சோறு ஊட்டி, பள்ளிக்கூடம் அனுப்புவதைக் காட்டிலும் கடினமான காரியம் கோடை விடுமுறையில் இதுகளைச் சமாளிப்பது. என்ன செய்யலாம்?பேசாம 2 மாசம் தாத்தா, பாட்டிக்கிட்ட அனுப்பிவிடலாமா? நோ நோ மம்மி பாவம். இல்ல இவனுங்கள அவங்க அத்தை வீட்டுக்கு அனுப்பிரலாமா?அவ கெடந்து அனுபவிக்கட்டும். இல்ல இல்ல, நம்ம இதுகள பத்து நாளைக்கு அனுப்பினா, அவ அந்த ரெண்டு பிசாசுகளையும் 20 நாளைக்கு இங்க அனுப்பிருவா. […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

பழைய கசப்பான ரயில் பயண அனுபவம்.

வாழ்வில் சில நேரங்களில் நாம் யோசிக்காமல், ஆராயாமல் செய்யும் சில காரியத்தால் மறக்க முடியாத கசப்பான அனுபவங்களைப் பாடமாகப் பெறுவோம். அப்படி ஒரு சம்பவம். 1 June 2022 ல் நடந்தது. இன்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்வதற்காக, கோவைக்கு நன்கு விடிந்து தாமதமாகப் போனால் போதுமென்று சென்னையில் இரவு 11.15 மணிக்குப் புறப்படும் ரயிலில் இரண்டாம் படுக்கை வசதி இருக்கை ஒன்றை முன்பதிவு செய்துவிட்டேன். திங்கட்கிழமை IRCTC குறுந்தகவலைக் கண்டு அதிர்ந்தேன். “Chart […]

Categories
நினைவுகள்

கொங்கு நாட்டில் ஓர் குதூகலப் பயணம்

பயணம் என்பது மனிதனைப் பக்குவப்படுத்தும் காரணி. ஒரு நல்ல சிந்தனை வேண்டுமென்றால் நல்ல புத்தகத்தை வாசியுங்கள். புத்தகம் வாசித்துக் கிடைக்கும் சிந்தனையோடு, நல்ல பண்புகளும் வேண்டுமென்றால் ஒரு அனுபவஸ்தரிடம் பேசுங்கள். ஒரு அனுபவஸ்தரிடம் பேசும் போது கிடைக்கும் விஷயங்களை நேரடியாகப் பெற விரும்பினால் பயணம் சென்று பாருங்கள். ஒரு பயணம் என்பது உங்களுக்கு, பக்குவத்தையும், பண்புகளையும், முன்யோசனைகளையும், அனுபவத்தையும் தரும். சில நேரங்களில் அது எதிர்பாராத மறக்க முடியாத நல்ல அனுபவங்களாக அமையலாம். மேலும் பயணம் உங்களுக்குப் […]

Categories
நினைவுகள்

தொடக்கப்பள்ளியில் சில நிமிடங்கள் – மலரும் நினைவுகள்

பள்ளிப் பருவம் அனைவருக்கும் அலாதியான ஒரு அனுபவம்தான். ஒவ்வொரு மனிதனிடமும் நாம் இந்தக் கேள்வியைக் கேட்டோமானால், பெரும்பாலானோர் சொல்லக் கூடிய பதில் இதுவாகத்தான் இருக்கும். கேள்வி: உங்கள் வாழ்வில் எந்தப்பகுதியை மீண்டும் பெற விரும்புகிறீர்கள்? பதில்: பள்ளிப் பருவம். காரணம் அதன் அனுபவமும், இன்பமும், அது கற்றுக் கொடுத்த பாடமும், நம் வாழ்வு சிறக்கப் பரிசாக வந்த நட்புகளும், அன்பான ஆசிரியர்களும் என பள்ளிப்பருவ காலத்தை விரும்புவதற்கென மிகப்பெரிய பட்டியலே இருக்கிறது. அதிலும் குறிப்பாக தொடக்கப் பள்ளிகள் […]

Categories
ஆன்மீகம் தகவல்

திருப்பதி பயணம்- இனிய மற்றும் காரசார அனுபவம்

பயணங்கள் பொதுவாக மனிதனைப் பக்குவப்படுத்தும். புதிய மனிதர்களை, புதிய அனுபவங்களை சந்திக்க வைக்கும். அன்றாடம் நாம் பயணிக்கும் சிறிய தொலைவில் கூட சிறிய புது அனுபவங்களை சந்திக்க நேரும், அப்படியிருக்க ஒரு ஆன்மீக சுற்றுலா, புது அனுபவத்தைத் தராமலா போகும்? சமீபத்தில் திருச்செந்தூர் பயணித்த போது நமக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களையும், முகம் சுளிக்கும் சம்பவங்களையும் பகிர்ந்திருந்தோம். ஆனால் திருப்பதி எப்போதுமே முகம் சுளிக்கும் நிகழ்வுகளைப் பரிசாகத் தருவதில்லை. காரணம் கடுமையான நிர்வாக முறை. எப்பேர்ப்பட்ட பெரிய […]

Categories
தற்கால நிகழ்வுகள்

சாமானிய மக்கள் கதிகலங்கும் விமான நிலைய விதிமுறைகள்

சாமானியர்களை மிரட்டுகின்றன விமான நிலைய சோதனைகளும், விதிமுறைகளும். ஆமாம். நான் முதல்முறையாக விமானத்தில் பயணிக்கக் கிளம்பிய போது யாதார்த்தமாக எனது பையை அங்கே கீழே வைத்து விட்டு, சிறிது நகர்ந்து என் குடும்ப்க் கூட்டத்தை ஒருங்கிணைக்கலாம் என்று நகர்ந்த போது அங்கிருந்து பாதுகாவலர்கள் லப லப என்று கத்தியது, ஒரு மாதிரி மனதில் பாரத்தை தான் ஏற்படுத்தியது. ஆனால் அது அவர்களது பணி, விதிமுறை என்பதை நான் அறியாமல் இல்லை. பிறகு பல வருடம் கழித்து விமானம் […]

Categories
கருத்து தகவல்

குஜராத் மாடல் எப்படியானது? – பயண அனுபவம்

குஜராத் மாடல். இந்த வார்த்தை ஒரு மிகப்பெரிய அரசியல் சர்ச்சை.அதாவது குஜராத் மாநிலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகப் பல துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பதாகத் தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 4 முறை இருந்தபோது கூறப்பட்டது. அதாவது அந்த மாநிலம் மின்மிகை மாநிலமாகவும், சூரிய ஒளியில் மின்சாரம் அபிரிமிதமாகத் தயாரிக்கும் மாநிலமாகவும், தொழிற்சாலைகளுக்கும் சூரிய ஒளி மின்சாரம் தரப்பட்டு தொழில் முன்னேற்றமடைந்த மாநிலமாகவும் பேசப்பட்டது. அப்போதைய காலகட்டத்திலேயே விகடனில் […]