Categories
தற்கால நிகழ்வுகள்

அரசுப்பேருந்து ஓட்டுநரின் அகங்காரம்

நமது பக்கத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தோம், அரசு அதிகாரிகளுக்குக் கடிவாளம் அவசியம் என்று. அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, சாதாரணமாக அரசுப் பணி செய்யும் அனைவருக்கும் அந்தக் கடிவாளம் அவசியம். சில வாரங்களுக்கு முன்பு நான் சந்தித்த மோசமான பேருந்து பயணத்தைப் பற்றியும், அது சம்பந்தமாக முதல்வர் பிரிவில் நான் அளித்த புகார் பற்றியும் எழுதியிருந்தேன். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து சரகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. “தெரியாம செஞ்சுட்டாங்க சார், நான் கண்டிச்சிருதேன்” என்று எளிதாக […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

பழைய கசப்பான ரயில் பயண அனுபவம்.

வாழ்வில் சில நேரங்களில் நாம் யோசிக்காமல், ஆராயாமல் செய்யும் சில காரியத்தால் மறக்க முடியாத கசப்பான அனுபவங்களைப் பாடமாகப் பெறுவோம். அப்படி ஒரு சம்பவம். 1 June 2022 ல் நடந்தது. இன்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்வதற்காக, கோவைக்கு நன்கு விடிந்து தாமதமாகப் போனால் போதுமென்று சென்னையில் இரவு 11.15 மணிக்குப் புறப்படும் ரயிலில் இரண்டாம் படுக்கை வசதி இருக்கை ஒன்றை முன்பதிவு செய்துவிட்டேன். திங்கட்கிழமை IRCTC குறுந்தகவலைக் கண்டு அதிர்ந்தேன். “Chart […]

Categories
நினைவுகள்

கொங்கு நாட்டில் ஓர் குதூகலப் பயணம்

பயணம் என்பது மனிதனைப் பக்குவப்படுத்தும் காரணி. ஒரு நல்ல சிந்தனை வேண்டுமென்றால் நல்ல புத்தகத்தை வாசியுங்கள். புத்தகம் வாசித்துக் கிடைக்கும் சிந்தனையோடு, நல்ல பண்புகளும் வேண்டுமென்றால் ஒரு அனுபவஸ்தரிடம் பேசுங்கள். ஒரு அனுபவஸ்தரிடம் பேசும் போது கிடைக்கும் விஷயங்களை நேரடியாகப் பெற விரும்பினால் பயணம் சென்று பாருங்கள். ஒரு பயணம் என்பது உங்களுக்கு, பக்குவத்தையும், பண்புகளையும், முன்யோசனைகளையும், அனுபவத்தையும் தரும். சில நேரங்களில் அது எதிர்பாராத மறக்க முடியாத நல்ல அனுபவங்களாக அமையலாம். மேலும் பயணம் உங்களுக்குப் […]

Categories
ஆன்மீகம் தகவல்

திருப்பதி பயணம்- இனிய மற்றும் காரசார அனுபவம்

பயணங்கள் பொதுவாக மனிதனைப் பக்குவப்படுத்தும். புதிய மனிதர்களை, புதிய அனுபவங்களை சந்திக்க வைக்கும். அன்றாடம் நாம் பயணிக்கும் சிறிய தொலைவில் கூட சிறிய புது அனுபவங்களை சந்திக்க நேரும், அப்படியிருக்க ஒரு ஆன்மீக சுற்றுலா, புது அனுபவத்தைத் தராமலா போகும்? சமீபத்தில் திருச்செந்தூர் பயணித்த போது நமக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களையும், முகம் சுளிக்கும் சம்பவங்களையும் பகிர்ந்திருந்தோம். ஆனால் திருப்பதி எப்போதுமே முகம் சுளிக்கும் நிகழ்வுகளைப் பரிசாகத் தருவதில்லை. காரணம் கடுமையான நிர்வாக முறை. எப்பேர்ப்பட்ட பெரிய […]

Categories
தற்கால நிகழ்வுகள்

சாமானிய மக்கள் கதிகலங்கும் விமான நிலைய விதிமுறைகள்

சாமானியர்களை மிரட்டுகின்றன விமான நிலைய சோதனைகளும், விதிமுறைகளும். ஆமாம். நான் முதல்முறையாக விமானத்தில் பயணிக்கக் கிளம்பிய போது யாதார்த்தமாக எனது பையை அங்கே கீழே வைத்து விட்டு, சிறிது நகர்ந்து என் குடும்ப்க் கூட்டத்தை ஒருங்கிணைக்கலாம் என்று நகர்ந்த போது அங்கிருந்து பாதுகாவலர்கள் லப லப என்று கத்தியது, ஒரு மாதிரி மனதில் பாரத்தை தான் ஏற்படுத்தியது. ஆனால் அது அவர்களது பணி, விதிமுறை என்பதை நான் அறியாமல் இல்லை. பிறகு பல வருடம் கழித்து விமானம் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இதற்குத்தானா இந்தப்பாடு?- கிளாம்பாக்கம்   பேருந்து முனையப் பிரச்சினைகள்

எந்தவொரு விஷயத்தையும் உருவாக்குவதைக் காட்டிலும் அதன் பராமரிப்பில் தான் அதனுடைய முழுப்பலனும் கிடைக்கும். சரியாக கவனிக்கப்படாமல், பராமரிக்கப்படாமல் விடப்பட்ட எதுவுமே அதன் பலனைத்தராது. மேலும் அவப்பெயரையும், மனவருத்தத்தையும் உண்டாக்கி விடும். அதை உருவாக்குவதற்கான உழைப்பு விரயமாகிப்போகும். அப்படிப் பல எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் தாண்டி உருவானது தான் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம். ஆனால் அதன் பராமரிப்பு குறைபாடுகள் காரணமாகவும், நகரத்திலிருந்து அது அமைந்திருக்கும் தொலைவு காரணமாகவும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உள்ளானது மறுக்க முடியாத ஒன்று. ஆரம்ப […]

Categories
நினைவுகள்

கடைசிப் பேருந்து.

எப்போதுமே மிக காட்டமாக ஏதாவது கருத்து சொல்லிக்கொண்டே இருந்தாலும் சிறிது சுவாரஸ்யம் இல்லாமல் தான் போகும். அதனால் அவ்வப்போது மகிழ்ச்சியாக, மிகப்பெரிய சுவாரஸ்யமில்லாத, ஆனால் மறக்க இயலாத ரசிக்கக் கூடியவற்றைப் பேசுவது உசிதம். இன்றைய தலைப்பு அது மாதிரியான ஒரு சின்ன மகிழ்ச்சியான, பேச்சு நிறைந்த நிகழ்வு தான். கடைசிப் பேருந்தின் பயணம் தான் அது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கடைசிப் பேருந்து என்பது உண்டு. அப்படி எனக்கு மிகப் பரிட்சயமான கடைசிப் பேருந்து கோவில்பட்டி எட்டயபுரம் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

என்னங்க சார்? போதுமா இது? – சிறு குற்றங்களின் தண்டனை விகிதம்

தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது மிகப்பெரிய குற்றங்களுக்கு இருந்தால் போதும் என்பது பொது சிந்தனை. ஏனென்றால் சிறு சிறு தவறுகளை அன்றாடம் நாம் அனைவருமே செய்து பழகி விட்டோம். உதாரணத்திற்கு ஒரு சாலை வழித்தடத்தில் சிவப்பு விளக்கு சமிஞ்ஞையைத் தாண்டிய குற்றத்திற்காக அபராதம் 10000 அல்லது வண்டி பறிமுதல் செய்யப்படும் என்று சொன்னால் அதை மொத்த ஜனமும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாறாக பலர் அதை எதிர்த்து வெடிப்பார்கள். உதாரணத்திற்கு இப்படி வசனங்கள் கிளம்பும்.“கொலை பன்றவன், கொள்ளை […]

Categories
தற்கால நிகழ்வுகள்

அரசுப்பேருந்தின் இனிய பயண நினைவுகள்

அரசுப் பேருந்தில் ஏற்பட்ட கசப்பான நினைவுகளைப் பகிர்ந்தோம். அவர்கள் மீது நாம் கொடுத்த புகாருக்கும் பதில் கிடைத்தது.போக்குவரத்துத் துறையிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்புக்கோரியதோடு, அவர்கள் இருவரையும் கண்டிப்பதாகச் சொன்னார்கள். ஒட்டுமொத்த அரசுப் போக்குவரத்தும் குறை சொல்லத்தக்க வகையில் அல்ல. இது ஒரு அருமையான பயண அனுபவம் பற்றிய பதிவு. சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு ஊருக்கு சென்ற பிறகு குடும்பத்துடன், எதிர்பாராத விதமாக பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம்..முன்பதிவுகள் அற்ற நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் […]

Categories
தகவல் வரலாறு

இந்தியாவின் மிக நீளமான தொடர்வண்டிப் பயணமும் அதன் வரலாறும்

விவேக் விரைவு வண்டி. விவேக் எக்ஸ்பிரஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தொடர்வண்டிகள். தொடர் வண்டிகள் என்று குறிப்பிடவும் காரணம் உள்ளது. நமக்குப் பரீட்சையமான, பொதிகை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் , வைகை எக்ஸ்பிரஸ், ரிக்போர்ட் எக்ஸ்பிரஸ் போன்ற பெயர்கள் ஒரு குறிப்பிட்ட தொடர்வண்டியை மட்டுமே குறிக்கும்.அந்தப்பெயரில் அந்த ஒரு வண்டியைத்தான் பார்த்திருப்போம். ஆனால் இந்த விவேக் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கிட்டதட்ட 4 தொடர்வண்டிகள் உள்ளன. அதாவது நான்கு வேறு வேறு வழித்தடங்களில் பயணிக்கும் வேறு வேறு […]