இந்தியாவின் முதல் கடற்பாலம் என்ற பெருமையோடு அல்லாமல் 2010 மும்பையின் பாந்த்ரா பாலம் திறக்கப்படும் வரை, மிக நீளமான பாலம் என்ற பெருமையையும் தன்னுள்ளே தக்கவைத்திருந்த பாலம்.
Tag: வரலாறு
உலகில் மிகப்பிரம்மாண்டமாக பல சிலைகள் வந்துவிட்ட போதிலும், இந்தியாவின் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலை விண்ணை முட்டும் உயரத்தை அடைந்தாலும் , இவையெல்லாம் சமீப காலத்தில் உருவானவை, அல்லது 20 ஆவது நூற்றாண்டில் உருவானவை. இவற்றுக்கெல்லாம் முன்மாதிரியான சிலை, அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை (statue of liberty). பிரம்மாண்டம், மிகப்பிரம்மாண்டம் எல்லாம் பழக்கத்தில் இல்லாத பொறியியல் முன்னேற்றம் வெகுவாக இல்லாத 1886 ஆம் ஆண்டிலேயே 305 அடி உயரத்துக்கு ஒரு வெண்கல சிலை […]
1906 ஆம் ஆண்டு, வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய கப்பல் கம்பெனி. தூத்துக்குடி துறைமுகத்திலும் , இந்தியப்பெருங்கடலிலும் கொடிகட்டிப்பறந்த ப்ரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒடுக்க, எடுக்கப்பட்ட முடிவு தான் இந்த SSNC. ஆனால் இது காகிதத்தில் கப்பல் செய்யும் சமாச்சாரம் அல்ல.அன்றைய காலகட்டத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பு. 2019 ஆம் ஆண்டில் 2000 கோடி ரூபாய் அளவிற்கான ஒப்பீடு. இதை 40 பேரின் பங்களிப்புடன் செய்து காண்பித்தார் வ.உ.சி.இதில் இன்னொரு முக்கியமான பங்களிப்பு, பாண்டித்துரைத்தேவர் என்பவருடையது. […]
இந்த வார்த்தைகளுக்கு ஒரு செவி வழிக்கதை உண்டு.
அதில்லாமல், இந்தத் தலைப்பில் ஒரு புத்தகமும், ஒரு சினிமாவும் வந்திருக்கிறது. அதுவும் ப்ரெஞ்சில் வெளியான மிகப்பிரபலமான திரைப்படங்களுள் ஒன்று.
கீலிங் வளைவு, பூமியின் வளிமண்டலத்தில் ஆண்டுதோறும் திரளும் கரியமிலவாயு (CO2) அளவீட்டை விளக்கும் ஒரு தரவு. கரியமிலவாயு எப்படி உருவாகிறது? உலகின் அத்தனை ஜீவராசிகளும் உயிர் வாழ இன்றியமையாத சுவாசம் ஆனது உயிர் வாயுவை உட்கொண்டு கரியமிலவாயுவை வெளிவிடும் முறையில் தான் நிகழ்கிறது. செடிகளும், கொடிகளும் மரங்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.. பகல் நேரத்தில் மரங்கள் photosynthesis அதாவது ஒளிச்சேர்க்கையின் வாயிலாக கரியமிலவாயுவை உட்கொண்டு oxygen ஐ அதாவது உயிர்வாயுவை மரங்கள் வெளியேற்றுகிறது. கார்பனை பிரித்து தன் […]
இளம் பருவத்தில் பலரும் வரலாற்றை விரும்பி படிப்பது இல்லை. அதுபற்றிய தெளிவான சிந்தனையும் இல்லை. சிறுவர்களாக இருக்கும் போது பல வருடங்ளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களின் தொகுப்பு, நமக்கு ஆர்வத்தை தூண்டாமல், தூங்க வைக்கின்றன. வாழ்க்கை பாடமாக அமைய வேண்டிய வரலாறு வாழ்கையின் துவக்கத்தில் மட்டும் வந்து போகும் கனவாக இருந்து விடுகிறது. ஆமாம் நம் புத்தகத்தில் உள்ள கதைகளும் கட்டுரைகளும் எங்கிருந்து வந்தன? இந்த கேள்வியை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது கேட்டதாக நினைவில்லை. எனினும் வாழ்க்கை […]
சமீபத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த KGF என்ற படத்தைப்பற்றி அறியாதோர் சிலரே. அந்தப்படத்தின் கதையம்சம் என்பது, ஒரு லாபகரமான தங்கச்சுரங்கத்தைக்கட்டி ஆளும் பலசாலியை வீழ்த்தி அந்த இடத்தைத் தட்டிப்பறிக்க நினைக்கும் சில ஆட்கள், அந்த பலசாலியை வீழ்த்த ஆயுதமாக ஒருவரை நிர்ணயிக்கின்றனர். இறுதியில் அந்த பலசாலி வீழ்த்தப்பட்டார் ஆனால் அந்த ஆயுதமாக வந்த ஆள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிறார். இதே கதை. ஒரு மிகப்பெரிய நாட்டிலும் நிகழ்ந்திருக்கிறது. வேறு எதுவுமில்லை, பாரதம், […]