Categories
சிறுகதை தமிழ்

வரதட்சணை- சிறுகதை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வீட்டின் தேவதையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே மணப்பொருத்தம் பார்த்து மாப்பிள்ளை, பெண் இருவரும் புகைப்படம் பார்த்து பிடித்துப்போய், கிட்டதட்ட உறுதி செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு.

பெண்ணுக்கு ஒரு அண்ணன், அன்பான மதினி, வயோதிக அம்மாவும், அப்பாவும். அண்ணனுக்கு பிறகு நீண்ட நாள் கழித்து இவள் பிறந்திருக்கிறாள்.

எதிர்பார்த்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட விருந்து உபசரிப்புகள் தடபுடலாக முடிந்தது.

தாம்பூலம் மாற்றி உறுதி செய்து விடலாம் என பேச்சு ஆரம்பிக்க, மாப்பிள்ளையின் தாயார் பேச ஆரம்பிக்கிறார்.

“எங்களுக்கு இருக்கிறது ஒரே பையன்.
எம் பொண்ணுக்கு 100 சவரன் நகை போட்டு கல்யாணம் முடிச்சு வச்சேன்.
நீங்களும் அதுக்கு குறையாம செஞ்சிடுங்க. மத்தபடி மாப்பிள்ளைக்கு ஏதாவது செய்யனும்னா செய்ங்க. சீர் வரிசை செஞ்சிடுங்க.
கல்யாண செலவு பாதி பாதி பிரிச்சுக்கலாம். ஹனிமூனுக்கு உள்நாடு இல்லாம ஏதாவது ஃபாரின் அனுப்புங்க…“ என்று அடுக்கிக்கொண்டிருக்க,

பெண்ணின் தாயார் குறுக்கிட்டு, ”ஏமா இவருடைய பென்ஷனும், பையனோட வருமானமும் தாம்மா!
பையன் அவன் பிள்ளைகளையும் குடும்பத்தையும் கவனிக்கனும் வேற. நீங்க என்னம்மா இவளோ கேட்குறீங்க?“ என்று பேசி முடிப்பதற்குள்

வெடுக்கென, இந்தாம்மா ”நாங்க எதுவும் வற்புறுத்தல, இஷ்டம் இருந்தா பாப்போம் இல்லாட்டி நாங்க கிளம்புறோம்“னு முகத்தில் அறைந்தாற் போல பேச, குறுக்கிடுகிறாள் பெண்ணின் மதினி!

“நீங்க சொல்றத செஞ்சுடுறோம்மா!
என் கல்யாணத்துக்கு எங்க அப்பா 70 சவரன் நகை போட்டாரு, மாப்பிள்ளை க்கு 10 சவரன் போட்டாரு. இதெல்லாம் நானோ என் வீட்டுக்காரரோ கேட்டு வாங்கிக்கல. பெருமைக்காக என் மாமியார் போட சொன்னாங்க.
என் அப்பா ரொம்ப நொந்து சீரழிஞ்சு இத போட்டாரு. இது இப்ப இங்க சும்மா தான் இருக்கு. யாருமே எப்பயும் 70 சவரன் நகைய கைல கழுத்துல மாட்டிக்கிட்டு திரியுறதில்லையே!“

ஒப்பிட்டுப் படம்
(இணையத்தில் பதிப்பிறக்கியது)

“மணமேடையில இருக்கிற அந்த 4 மணிநேரத்துல தற்பெருமைக்காக ஒவ்வொரு பெண்ணோட, அப்பாவும் அண்ணனும் படுற கஷ்டம் எனக்கு தெரியும். இன்னிக்கு என் மாமியாருக்கு அது புரிஞ்சுருக்கு.”

“இன்னொரு நாள் அது உங்களுக்கு புரியலாம்.”

“நீங்க கேட்கிற எதையும் குறை இல்லாம என் வீட்டுக்காரர் செய்வாரு.”

“தட்டு மாத்திட்டு தயக்கம் இல்லாம வீட்டுக்கு போங்கமா” என்று அந்த பெண்ணின் மதினி பேசியதை கேட்டு வரதட்சனை பேய்கள் இரண்டும் வாயடைத்து போய், கூனிக்குருகி நின்றன!

தொடர்ந்து வாசிக்க, நினைவுகள்.

  • நடிகர் திலகம் சிவாஜியின் புகழ்
    படித்ததில் பிடித்தது. தமிழ் படங்களுக்கு கர்நாடகத்தில் பிரச்சனைகள் பல ஆண்டுகாலமாகவே நடந்து வருவதுதான். அந்தச் சமயத்தில் சில கர்நாடக அமைப்புகள் தமிழ் படங்களை திரையிட விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்து வருவதும் வாடிக்கையான ஒன்றுதான். இதை இங்கே இப்போது சொல்லக் காரணம் என்னவென்றால், முன்பு பல வருடங்களுக்கு முன்பு ஒரு கன்னட நடிகர் சிவாஜி வெறியராகவே இருந்தவர். அவர் சொன்ன ஒரு கருத்துக்காகவே அவருக்கு எதிராக கண்டனங்களும், ஆர்ப்பாட்டங்களையும் கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் செய்தன.​அந்த நடிகர் சொன்ன கருத்துதான் என்ன? “உலகிலேயே சிறந்த நடிகர்… Read more: நடிகர் திலகம் சிவாஜியின் புகழ்
  • பொங்கல் பரிசு வாங்கியாச்சா?
    பொங்கல் பண்டிகை என்றாலே சிறப்பு தான். தமிழர் பண்டிகை , பாரம்பரிய விழா, மத வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் ஒரு விழா என்பது இன்றளவிலும் மாறாமல் உள்ளது. விவசாயிகள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படுகிறது என்பது பாரம்பரியம் என்றாலும் இன்றளவிலும் விவசாயம் அல்லாத மற்ற தொழில் செய்யும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுவது அதன் தனிச்சிறப்பு. இதில் சமீப காலமாக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் பொங்கல் பரிசுத் தொகுப்பு. எனக்கு விவரம் தெரிந்து என்னுடைய கல்லூரி நாட்களில் பச்சரிசி,… Read more: பொங்கல் பரிசு வாங்கியாச்சா?
  • பராசக்தி- திரை விமர்சனம்!
    பொங்கல் படங்களில் எதிர்பார்க்ப்பட்ட படங்களில் ஒன்று வெளிவராமல் போனது.இன்னொரு படம் வெளிவந்து பல நேர்மறை மற்றும் எதர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது 2026 பொங்கல் வெளியீடான பராசக்தி பற்றிய பதிவு தான் இது. இதனோடு வந்திருக்க வேண்டிய இன்னொரு படம் வராமல் போனதாலும், எங்கள் தலைவர் படத்துக்கே நீ போட்டியா என்று ஆரம்பத்தில் இருந்தே கூட இந்தப்படத்திற்கு ஒரு கடுமையான எதிர்ப்பும் எதிர்மறை விமர்சனமும் இருந்தது. அந்த எதிர்ப்பும் , எதிர்மறை விமர்சனமும், அதனோடு படம் பேசிய கருத்துக்கு எதிரான கூட்டமும் இந்தப்… Read more: பராசக்தி- திரை விமர்சனம்!
  • பண முதலைகளிடம் உஷார்.
    பணம். இன்றைய நிலையில் உலகில் வாழும் அத்தனை ஆறறிவு மிருகங்கள் அனைவருக்கும் அடிப்படை நாதமே பணம் தான்.வாழைப்பழம் வேண்டாம் என்று சொல்லாத குரங்கு இல்லை என்பதைப்போல, பணம் வேண்டாம், பணம் தேவையில்லை என்று சொல்லும் மனிதர்கள் இங்கு இல்லவே இல்லை என்பது தான் எழுதப்படாத உண்மை. மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், மறதி வியாதி உள்ளவர்களும், 100 ல்0.00001 சதவீத வித்தியாசமான மனிதர்களைத் தவிர்த்து மீதி அனைவருமே பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடக்காரணம், உணவு , உடை , இருப்பிடம் என்ற அனைத்திற்குமே பணம்… Read more: பண முதலைகளிடம் உஷார்.
  • பயனாளர்களே இது மரியாதையல்ல!
    இன்றைய சமூக வலைத்தளங்களிலும் , வாட்ஸ் அப் செய்திகளிலும் ஒரு விஷயத்தைப் பரவலாகப் பார்க்க முடிந்தது . அரசாங்கம் மாணவர்களுக்காக அளித்த மடிக்கணினியில் உள்ள முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி மற்றும் இன்றைய முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் புகைப்படங்களை , அசிட்டோன் அல்லது தின்னர் கொண்டு அளித்து அதை மகிழ்ச்சியாக காணொளிப் பதிவு செய்து அதைப் பரவச் செய்திருக்கிறார்கள். சிலர் அதன் முன்புறம் மற்றும் பின்புறத்தில் பல்வேறு வண்ணங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டி அதை மறைத்திருக்கின்றனர். இதை விளம்பரப்படுத்தி ஒரு தொழிலாகவும் ஆக்கிவிட்டார்கள். இந்த விஷயம்… Read more: பயனாளர்களே இது மரியாதையல்ல!
  • அரசு மருத்துவர்களின் தரமான சம்பவம்!
    அரசு மருத்துவமனைகள் என்றாலே முகம் சுழிப்பதும், அங்கே நம்மால் சமாளிக்க முடியாது, நமக்கெல்லாம் அது சரியா வராது என்றும் இன்றளவிலும் பல மக்கள் மனிதில் ஆணித்தரமாக நம்புகின்றனர். இது உண்மையில்லை என்றும் சொல்லிவிட முடியாது.அரசு மருத்துவமனைகளின் கடைநிலை ஊழியரில் துவங்கி ஒரு சில மருத்துவர்கள் வரை இப்படி மக்கள் நினைப்பதற்குக் காரணமாகவும் நடந்து கொள்ளத் தான் செய்கின்றனர். தான் அரசு வேலையில் இருப்பதால் ஒரு திமிரான நடைமுறை, ஓசியல மருத்துவம் பாக்க வந்த உனக்கென்ன மரியாதை என்ற எண்ணம், இப்படி பல ஊழியர்களின் அலட்சியப்… Read more: அரசு மருத்துவர்களின் தரமான சம்பவம்!