ஒரு ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த வீட்டின் தேவதையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே மணப்பொருத்தம் பார்த்து மாப்பிள்ளை, பெண் இருவரும் புகைப்படம் பார்த்து பிடித்துப்போய், கிட்டதட்ட உறுதி செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு.
பெண்ணுக்கு ஒரு அண்ணன், அன்பான மதினி, வயோதிக அம்மாவும், அப்பாவும். அண்ணனுக்கு பிறகு நீண்ட நாள் கழித்து இவள் பிறந்திருக்கிறாள்.
எதிர்பார்த்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட விருந்து உபசரிப்புகள் தடபுடலாக முடிந்தது.
தாம்பூலம் மாற்றி உறுதி செய்து விடலாம் என பேச்சு ஆரம்பிக்க, மாப்பிள்ளையின் தாயார் பேச ஆரம்பிக்கிறார்.
“எங்களுக்கு இருக்கிறது ஒரே பையன்.
எம் பொண்ணுக்கு 100 சவரன் நகை போட்டு கல்யாணம் முடிச்சு வச்சேன்.
நீங்களும் அதுக்கு குறையாம செஞ்சிடுங்க. மத்தபடி மாப்பிள்ளைக்கு ஏதாவது செய்யனும்னா செய்ங்க. சீர் வரிசை செஞ்சிடுங்க.
கல்யாண செலவு பாதி பாதி பிரிச்சுக்கலாம். ஹனிமூனுக்கு உள்நாடு இல்லாம ஏதாவது ஃபாரின் அனுப்புங்க…“ என்று அடுக்கிக்கொண்டிருக்க,
பெண்ணின் தாயார் குறுக்கிட்டு, ”ஏமா இவருடைய பென்ஷனும், பையனோட வருமானமும் தாம்மா!
பையன் அவன் பிள்ளைகளையும் குடும்பத்தையும் கவனிக்கனும் வேற. நீங்க என்னம்மா இவளோ கேட்குறீங்க?“ என்று பேசி முடிப்பதற்குள்
வெடுக்கென, இந்தாம்மா ”நாங்க எதுவும் வற்புறுத்தல, இஷ்டம் இருந்தா பாப்போம் இல்லாட்டி நாங்க கிளம்புறோம்“னு முகத்தில் அறைந்தாற் போல பேச, குறுக்கிடுகிறாள் பெண்ணின் மதினி!
“நீங்க சொல்றத செஞ்சுடுறோம்மா!
என் கல்யாணத்துக்கு எங்க அப்பா 70 சவரன் நகை போட்டாரு, மாப்பிள்ளை க்கு 10 சவரன் போட்டாரு. இதெல்லாம் நானோ என் வீட்டுக்காரரோ கேட்டு வாங்கிக்கல. பெருமைக்காக என் மாமியார் போட சொன்னாங்க.
என் அப்பா ரொம்ப நொந்து சீரழிஞ்சு இத போட்டாரு. இது இப்ப இங்க சும்மா தான் இருக்கு. யாருமே எப்பயும் 70 சவரன் நகைய கைல கழுத்துல மாட்டிக்கிட்டு திரியுறதில்லையே!“

(இணையத்தில் பதிப்பிறக்கியது)
“மணமேடையில இருக்கிற அந்த 4 மணிநேரத்துல தற்பெருமைக்காக ஒவ்வொரு பெண்ணோட, அப்பாவும் அண்ணனும் படுற கஷ்டம் எனக்கு தெரியும். இன்னிக்கு என் மாமியாருக்கு அது புரிஞ்சுருக்கு.”
“இன்னொரு நாள் அது உங்களுக்கு புரியலாம்.”
“நீங்க கேட்கிற எதையும் குறை இல்லாம என் வீட்டுக்காரர் செய்வாரு.”
“தட்டு மாத்திட்டு தயக்கம் இல்லாம வீட்டுக்கு போங்கமா” என்று அந்த பெண்ணின் மதினி பேசியதை கேட்டு வரதட்சனை பேய்கள் இரண்டும் வாயடைத்து போய், கூனிக்குருகி நின்றன!
தொடர்ந்து வாசிக்க, நினைவுகள்.
- குபேரா- திரை விமர்சனம்LKG என்ற படத்தில் ,RJ பாலாஜி, ஒரு காதல் ஜோடியைப் பிரிக்க, அவர்கள் இருவரின் அலைபேசிகளை ஒரு இரவு பரிமாற்றம் செய்யச்சொல்வார். அதையே படமாக எடுத்த, லவ்டுடே படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதே போல, லக்கி பாஸ்கர் படத்தில் ராம்கியும், துல்கர் சல்மானும் பிச்சைக்காரர்களை வைத்து ஒரு திருட்டு வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள். அதையே முழுப்படமாக நாகார்ஜூனையும், தனுஷையும் வைத்து எடுத்தால் படம் பட்டாசாக வரும் என்று நினைத்து எடுத்து விட்டார்கள். எடுத்ததெல்லாம் சரிதான்,ஆனால் ரொம்ப எடுத்து விட்டார்கள். படத்தின் நீளம்… Read more: குபேரா- திரை விமர்சனம்
- 2026ல் தளபதியா? தளபதியா? – முதல் பாகம்.கதை கேட்டு, அதில் சிறப்பானதைத் தெரிவு செய்து, ராப்பகலாக உழைத்து, சிறந்த படைப்பாளிகள் மற்றும் உழைப்பாளிகளைக் கொண்டு சீர்படுத்தி, விளம்பரப்படுத்தி வெளிவரும் திரைப்படங்களே சமயங்களில் நாம் எதிர்பார்ப்பது போல நல்ல விதமாக அமையாமல், தோல்வியில் சென்று முடியும் போது, அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும்? எம்ஜிஆர் அரசியலில், வென்று மாபெரும் சாதனைகளைப் படைத்தது உண்மை தான் என்றாலும், அவரது சமாகால நடிகரான சிவாஜி கணேசன் அரசியலில் படுதோல்வி அடைந்தார். அதேபோல, சரத்குமார் அவர்களும் தான் நினைத்து போல , அரசியலில் பெரிய சாதனைகளைப் படைக்க இயலவில்லை.அதற்கான… Read more: 2026ல் தளபதியா? தளபதியா? – முதல் பாகம்.
- நகல் எடுக்க இயலாத அசல்-அப்பாபிரதி எடுக்க முடியாத அசல்.அவரைப்போல ஆயிரம் பேர் அறிவுரை கூறலாம்.. அவரைப்போல அக்கறை காட்ட கூட ஆள் வரலாம்.. அவரது அன்பு போலவே சிலர் அன்பு காட்டலாம்.. ஆனாலும் அவர் அவர்தானே? என்றுமே நகல் எடுக்க இயலாத அசல்.. ஆயிரம் ஆயிரம் கவிஞர்கள் புகழ்பாடினாலும், பல்லாயிரக்கணக்கான வார்த்தைகள் கொண்டு கவிதை நூலாக கோர்த்தாலும் அவரின் பெருமையை ஈடு செய்ய இயலுமோ? இவர்தான் அவர்,நமக்காப அவர் செய்தது இதுதான் என யாராவது விளக்கிட இயலுமோ? இவர் இல்லாதிருந்தால் நம் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் ? என… Read more: நகல் எடுக்க இயலாத அசல்-அப்பா
- உலகின் கேடுகெட்ட உயிரினம்- மனிதன்-1.நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை. ஔவையின் இந்த வாக்கிற்கு ஏற்ப, இந்த உலகில் இன்றும் மழை பெய்யக் காரணமான சில நல்லவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இணையத்தில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் இந்த விஷயம் தான்.சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு முதியவரும் அவரது மனைவியும் ஒரு நகைக்கடைக்குச் சென்றதும், அந்த முதியவர் தனது அறியாமை காரணமாக வெறும் 1120 ரூபாயோடு மனைவிக்குத் தங்க நகை வாங்க வந்ததையும் அறிந்த கடைக்காரர், அந்த முதியவரிடம் வெறும் 20 ரூபாயைப் பெற்றுக்… Read more: உலகின் கேடுகெட்ட உயிரினம்- மனிதன்-1.
- லெவன்- திரை விமர்சனம்சில நல்ல சினிமாக்களை நாம் திரையில் தவற விடுவோம். காரணம், அந்த சினிமாக்கள் வந்த காலத்தில் வரும் வேறு பெரிய சினிமாக்களோ, அல்லது நமக்கு மிகவும் பழகிப் போகாத நடிகர்களோ நடித்திருந்திருக்கலாம். அப்படி இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு வெளிவந்த லெவன் என்ற படம் சத்தமே இல்லாமல் பலர் மனதைக் கவர்ந்து இன்றும் திரையிலும், ஓடிடி தளத்திலும் வெற்றி நடை போடுகிறது. படத்தைப்பற்றி ஆஹா , ஓஹோ என்று சமூக வலைத்தளங்களில் பலர் புகழ்ந்து தள்ளியபோது எனக்குள் ஒரு உந்துதல் ஏற்பட்டது, வார நாட்களிலாவது… Read more: லெவன்- திரை விமர்சனம்
- கண்ணாடியைப் பார்த்து துப்பிக் கொள்வோமா?பழைய பதிவு தான்.ஆனால் இன்றைக்கும் இதன் அவசியம் தீரவில்லை. மெர்சல் திரைப்படம்! ஒரு காட்சியில் விஜய் அவர்கள் கோவில் கட்டுவதை விட மருத்துவமனை கட்டுதல் அவசியம் என்ற முடிவை எடுப்பார்! அதை நமக்கு கொரோனாவின் உச்சகாலம் உணர்த்தியது. சென்னையின் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டது.அதாவது ஆரம்ப கட்ட பரவலின் போது.அதன்பிறகு என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். நம்மிடம் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்று ஒப்புக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.மற்ற நாடுகளுடன் ஒப்பீடு என்றில்லை.ஆனால் கொரோனா… Read more: கண்ணாடியைப் பார்த்து துப்பிக் கொள்வோமா?