Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

தமிழ் புதல்வன் – கல்வி ஊக்க திட்டம்

“பிச்சை புகினும் கற்கை நன்றே“ ஒருவருக்கு பிச்சை எடுக்கும் நிலை வந்தாலும் கல்வி கற்பதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறிய ஔவையின் வழிவந்த தமிழ் சமூகத்தில், நீ நல்லா படி, நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று அரசாங்கமே பல திட்டங்களை முன் எடுத்து செய்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக பல சந்தர்ப்பங்களிலும் இருந்து உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் நல்ல கல்யறிவு மற்றும் அதிகப்படியான பெண்கல்வி விகிதம் இருக்கும் மாநிலம் என்ற ரீதியில் […]

Categories
ஆன்மீகம் தமிழ்

அறிவோம் ஆன்மீக தகவல் -திருக்குறுங்குடியின் கோவில்கள்

அறிவோம்- ஹரி ஓம்.இந்து மதத்தின் இரு முக்கிய பிரிவுகளான சைவமும், வைணவமும், அதாவது பெருமாள் சன்னதியும், சிவன் சன்னதியும் ஒருசேர இருக்கும் கோவில்கள் அரிது தான். அப்படி ஒரு தலம் தான் திருக்குறுங்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள 1300 ஆண்டுகள் பழமையான அழகிய நம்பிராயர் தலம். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் உள்ளது. திருக்குறுங்குடி என்ற கிராமம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் என்ற ஊருக்கு அருகே, மகேந்திரகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஊக்கமது கைவிடேல் – வினேஷ் போகாட்டின் ஒலிம்பிக் பயணம்

ஒரு செயலை செய்யும் போது அதற்கான பலன் கிடைக்காவிட்டால் சோர்வடைந்து அந்த செயலில் இருந்து பின்வாங்குதல் என்பது நம்மில் பலருக்கும் வாடிக்கையான ஒன்று. அப்படியான நமக்கான ஒரு முன்மாதிரி வினேஷ் போகட். இன்று இந்தியர்களின் இதயம் நொறுங்கிப்போக காரணமானவர். ஆனால் அவரும் பிறக்கும் போது நம்மைப்போன்ற ஒரு சாதாரண ஆள்தானே? மல்யுத்தத்தில் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டிக்குத் தகுதியான ஒரே இந்தியப் பெண்மனி என்ற சாதனை புரிந்து, அடுத்த நாளே இறுதிப்போட்டிக்கு தகுதியான ஆள் தகுதிநீக்கம் செய்யப்பட்டார் என்ற வரலாறையும் […]

Categories
சினிமா தமிழ்

தமிழ் திரைப்பட விமர்சனம் -BOAT

மனிதனை விட கொடிய மிருகமும் உண்டோ? தப்பிப் பிழைத்து உயிருக்காக போராடிய ஒரு பாட்டிக்கும், அவர் பேத்திக்கும் இரவு முழுக்க காவல் தெய்வமாய் நின்ற யானை! சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு செய்தி ஒரு மிருகத்தின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது. அதேபோல் இன்னொரு செய்தியும் உண்டு. கேட்பதற்கே இனிமையானது. பசியென்று வந்த யானைக்கு அண்ணாசி பழத்தில் வெடி வைத்துக் கொடுத்த மனிதன். இது பரைசாற்றுவது ஒன்று தான். இந்த கேடு கெட்ட உலகில் மனிதனை விட கொடிய மிருகம் எதுவுமில்லை. […]

Categories
கருத்து தமிழ்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் – அனுபவங்கள்

நிலைகுலைந்து வரும் பொது ஒழுக்கம். தனிமனித ஒழுக்கம் அல்லது பொது ஒழுக்கம் என்பது தற்போது பரவலாக வெகுவாக நிலைகுலைந்து வருகிறது. தண்ணீரை வீணாக்குவது, குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவது, போக்குவரத்து விதிமுறைகளில் அத்துமீறல், இப்படி சிறிய விஷயங்களில் துவங்கி, குறைந்த மதிப்பீட்டில் பத்திரப்பதிவு, வருமான வரி ஏய்ப்பு என்று பெரிய விஷயங்கள் வரை பொது மக்கள் தங்கள் சுய மற்றும் பொது ஒழுக்கத்தில் தவறி தான் இருக்கிறார்கள் என்பது 100 சதவீத உண்மை. ஒரு அரசு அதிகாரி, […]

Categories
அறிவியல் தமிழ் தற்கால நிகழ்வுகள்

வருமுன் காப்போம் – தடுப்பூசி தகவல்

கருப்பை வாய் புற்றுநோய் (cervical cancer) எனப்படும் நோய் மாதவிடாய் முடிந்த பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் ஒரு கொடிய புற்றுநோய். இது மாதவிடாய் முடிந்த பெரும்பாலான பெண்களை பாதிக்கும் நோயாக கண்டறியப்படுகிறது. HPV அதாவது Human Pappiloma Virus என்ற விஷக்கிருமியால் இது உருவாகிறது. இந்த வைரஸ் இருக்கும் அனைவருக்கும் இந்த புற்றுநோய் வரும் என்பது கட்டாயமல்ல. சிலரது உடல்வாகு காரணமாக, எதிர்ப்பு சக்தி அந்த வைரஸ் கிருமிகளை அழித்து விடுகிறது. புகை பழக்கம், பாலியல் தொடர்பு, […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஆடி அமாவாசை – நினைவுகளும் நடப்புகளும்

நினைவுகளுக்கும் இந்த நாளுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. நம்மை விட்டுப் பிரிந்தாலும் நம் நினைவுகளை விட்டு நீங்காமலிருக்கும் நம் முன்னோர்களை நினைத்துக்கொள்ளும் முக்கியமான நாள். தர்ப்பணம் கொடுப்பது, வீட்டிலே படையல் போட்டு பூஜை செய்வது என்று இன்றைய நாளில் இறந்து போன தாத்தா பாட்டி உட்பட அனைவரும் நம் நினைவில், நம் வார்த்தைகளில் ஒருமுறை வந்து போகாமல் இருப்பதில்லை. ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதில் மிக முக்கிய அமாவாசை ஆக கருதப்படுகிறது. புரட்டாசி, தை மாதங்களிலும் தர்ப்பணம் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

தற்கால நிகழ்வுகள் – சென்னையில் தொழில் வரி உயர்வு

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் வரை உயர இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. தொழில் வரி என்பது நாம் அனைவரும் செலுத்தும் மாநில அரசின் வரி. தொழில் வரி என்றால் வியாபாரம் செய்பவர் அல்லது தொழில் செய்பவர் மட்டுமே கட்டும் வரி என்பதல்ல பொருள். ஒவ்வொரு தொழிலாளியும், முதலாளியும் அவரவர் வருமானத்திற்கு ஏற்ப கட்டும் வரி. உதாரணத்துக்கு, நான் ஒரு மிகப்பெரிய உணவகத்தில் சர்வராக வேலை செய்து மாதம் ரூ 20,000 சம்பளம் பெறுகிறேன் எனில் […]

Categories
கருத்து தமிழ் நினைவுகள்

பணி நிறைவு – வாழ்வின் புதிய துவக்கம்

பிடித்த வேலையோ, பிடிக்காதவேலையோ, ஆத்மார்த்தமாக செய்ததோ அல்லது அலுவலுக்காக செய்ததோ, நேர்மையாக இருந்தார்களோ ஏமாற்றினார்களோ. எப்படி இருந்தாலும் ஒரு மனிதனின் ஆன்மா, ஆழ்மனது, ஒரு வேலையை தொடர்ந்து செய்யும் போது அதற்கு அடிமையாகி விடுகிறது.

Categories
இலக்கியம் குட்டி கதை தமிழ்

குறளுடன் குட்டி கதை -பொறையுடைமை

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ். குறள் 156, திருவள்ளுவர் அதாவது ஒருவர் செய்த தீங்குக்காக அவரை தண்டித்தவருக்கு அந்த ஒரு நாள் தான் இன்பம். ஆனால் அதைப் பொறுத்துக் கொண்டவருக்கு , இந்த உலகம் அழியும் வரை புகழ் உண்டாகும். இந்த திருக்குறளை நம்மாளு ஒருத்தரு கொஞ்சம் வித்தியாசமா புரிஞ்சிக்கிட்டாரு. எப்படின்னு விளக்கமா இந்தக் கதை மூலமா தெரிஞ்சிக்கோங்க. நம்மாளு விமான நிலையத்துல வேலை செய்யிற ஆளு. இந்தக்காலம் மாதிரி இல்ல, அந்தக்காலத்துல, அதாவது […]