Categories
தற்கால நிகழ்வுகள்

குதூகலச் சென்னை- பீச் கிரிக்கெட் ஒளிபரப்பு அனுபவம்

சென்னை, என்று சொன்னாலே நம் மக்களிடமிருந்து இரண்டு விதமான எதிர்வினைகள் வரும். என்னப்பா எதுக்கெடுத்தாலும் சென்னை சென்னைனு. மத்த ஊர்ல இருக்கவம்லாம் மனுஷன் இல்லையானு, சென்னைக்கு சம்பந்தமில்லாத சென்னையின் வளர்ச்சி கண்டு பொறாமை கொள்ளும் சிலர் பேசுவதுண்டு. இவர்களாவது பரவாயில்லை. இன்னும் ஒரு சிலர் உண்டு, இங்கேயே வந்து வாழ்ந்து அனுபவித்து சம்பாதித்து விட்டு, இந்த ஊரையே, ஊரா இது? என்று கூறும் நன்றி கெட்ட ரகம். நம்ம சென்னை இதுக்கெல்லாம் கவலைப்படாமல் எத்தனை பேர் வந்தாலும் […]

Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன் –   பாகம் -6

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 4, பாகம் 5 ஆமாம். மனிதநேயம் இங்கே தெரிந்தவர், தெரியாதவர் என்று பார்த்து தானே வருகிறது. ஆட்டோக்காரருக்கு அங்கே அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது கந்தசாமி என்பது தெரியாமல் போனதே? சிறிது நேரத்தில், ஆட்டோ சோழிங்கநல்லூரை அடைந்தது. ஆட்டோக்காரர், பைசாவை வாங்கிவிட்டு காலையில் பசியாற ஏதாவது உணவகம் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தார். அருகிலிருந்த ஒரு மரத்தடியில், பாட்டி ஒருவர் சிறிய கடை ஒன்றை வைத்திருந்ததை கவனித்த ஆட்டோக்காரர், அங்கே […]

Categories
சினிமா

D Ragavan -> Dragon  – திரை விமர்சனம்.

இந்த வாரம் வெளியான படங்கள் எல்லாமே பெரிய நடிகர்களோ, எதிர்பார்ப்போ, விளம்பரங்களோ இல்லாமல், தன்னை நம்பி வெளியானவை.அதாவது நல்ல கதைக்களம், திரைக்கதை அமைப்பு உடையவை போல. மிகப்பெரிய செலவு, விளம்பரம் இல்லாமல் இது அது மாதிரி தான் இருக்கும் போல என்று எதிர்பார்ப்புக் குறைவாக வந்து இன்று பல ரசிகர்களாலும் பத்துக்கு பத்து மதிப்பெண் வழங்கப்படும் படம் டிராகன். இந்தப்படத்தின் இயக்குனர் மாரிமுத்து அவர்கள், கதைக்கு மெனக்கெடவில்லை. தனது முந்தைய படமான ஓ மை கடவுளே படத்தின் […]

Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன்- பாகம் 5

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 4 மல்லிகா படபடக்க ஆட்டோக்கார அண்ணனின் வாயைப் பார்க்க, அவரோ வாயிலிருந்த வெற்றிலை பாக்கை துப்பிவிட்டு, “ஏம்மா பதட்டம்?சவாரிக்கு கிளம்புற முன்னாடி பிள்ளை எப்படி இருக்கான்னு ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு வந்தேன்!” “நீ போயி வேலையப்பாருமா! நான் கிளம்புறேன்,” என்று மல்லிகாவின் மகனை கூப்பிட்டு ஏதோ விசாரித்து விட்டு, கையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டையும் கொடுத்து விட்டு கிளம்பினார். மல்லிகா கணவரின் வருகைக்காக, வாசலையே வாய் பிளந்து […]

Categories
தற்கால நிகழ்வுகள்

சமுதாயம் செய்த கூட்டு பாலியல் வன்முறை

கோவையில் ஒரு 17 வயது பெண் கூட்டு பாலியல் வன்முறை. சமீபத்தில் கூட நம் பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்னு பாலியல் குற்றங்களுக்கு தண்டனை விதத்தில் இது குறையுமா என்று! அது ஒரு பார்வை.குற்றம் நடந்த பிறகான பார்வை. ஆனால்“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்” என்ற வள்ளுவனின் வாக்கை நாம் நினைக்காமல் விட்டது ஏனோ? ஆம், இந்தக்கூட்டுப் பாலியல் வன்முறை ஆள் அரவரமற்ற இரவிலோ, காட்டினுள்ளோ நடைபெறவில்லை. […]

Categories
தற்கால நிகழ்வுகள்

மும்மொழித் தகராறு- மத்திய மாநில அரசுகளின் தவறு.

இன்று அல்ல, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இதுதான் அரசியல் பரபரப்பு. இந்தி மொழியைத் திணிக்காதே! ‘இந்தி மொழியைத் திணிக்காதே’ என்று துவங்கி, ‘இந்தி தெரியாது போடா’ வரை வந்துவிட்டோம்.இப்போது மீண்டும் மத்திய அரசிடமிருந்து இதே மாதிரியான ஒரு போக்கு. இதில் ஆராய வேண்டும் என்றால், கல்வி என்பது மத்திய பட்டியலிலோ, மாநிலப் பட்டியலிலோ இல்லை. அது பொதுப்பட்டியல். அதன் அடிப்படையில் ஒரு தனி மாநிலத்திற்கு அதன் கல்வித்திட்டத்தைக் கட்டமைத்துக் கொள்ள நமது சட்டம் உரிமை அளித்திருக்கிறது. அப்படியிருக்கும் […]

Categories
நினைவுகள்

குழந்தைகள் அழுதுவிட்டன, நாம் என்ன செய்ய?

ஆம் குழந்தைகள் அழுதுவிட்டன.நாம் என்ன செய்ய? ஒரு குடும்பமாக ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஒன்றுகூடும் போது, நமது உறவினர்களை கண்டுகளித்து உறவாடி மகிழும் போது மனதிலிருக்கும் பாரமெல்லாம் காணாமல் போகும். அந்தக்காலங்களில் ஏதாவது சின்ன சின்ன விஷேசமாக இருந்தாலும் மொத்தக் குடும்பத்தையும் கூப்பிட்டு விழாப்போல நடத்திய வழக்கம் உண்டு.விஷேச வீட்டாரின் வசதிக்கு ஏற்றார் போல, விருந்தும் மற்ற உபசரிப்புகளும் இருக்கும். விஷேச வீட்டினர் எத்தகைய வசதியோடிருந்தாலும், மொத்த சொந்தமும் வந்திருந்து விழாவை சிறப்பித்து விட்டுச் சென்ற வழக்கம் […]

Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 4

பாகம் 01, பாகம் 02, பாகம் 03 மல்லிகா மீண்டும் பழைய வாழ்வின் நினைவுகளை அசை போடத்துவங்குகிறாள். அடிபட்ட மகன் மல்லிகாவின் மடியை ஆக்கிரமித்துக்கொள்ள, மூத்தவன் மல்லிகாவின் தோளில் சாய்ந்து கொண்டான். விவரம் தெரிந்த பின் மூத்த பிள்ளை தாயின் அரவணைப்பை தேடும் முதல் தருணம் இதுதான்.மல்லிகாவுக்கும் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி.“அம்மா, தம்பிக்கு என்னால தாம்மா இப்படி ஆச்சு”, என்று வெடித்து அழத்துவங்குகிறான். “விடுடா, நான்தான் எப்படி ஆச்சுணே கேட்கலியே டா?எப்படியும் விளையாடும் போது பட்ட அடிதானே? தெரியாம […]

Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 3

பாகம் 01, பாகம் 02 மல்லிகாவோ மனதில் திகிலுடனும், பக்தியுடனும் கடவுளாக மருத்துவரை கை எடுத்து கும்பிட்டு என்ன ஆச்சுங்கய்யா என்று கேட்க,மருத்துவர், “பயப்படும்படியா ஒன்னுமில்ல மா!கண்ணுக்கு மேல பட்ட அடி கண்ணுல பட்டிருந்தா கஷ்டமாயிருக்கும். அடி பலமா பட்டதால நிறைய இரத்தம் போயிருக்கு, அத பாத்ததும் பையன் மயங்கிட்டான்.” “நான் வலிக்கு ஊசி போட்டு, அந்த இடத்துல தையல் போட்டுருக்கேன், அங்க நர்ஸ்ட்ட மருந்து மாத்திரை எல்லாம் வாங்கிக்கோங்க, எப்படி சாப்பிடனும்னு கேட்டுக்கோங்க!” “இப்ப பால் […]

Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 02

பாகம் 01 குருதி வெள்ளத்தில் மகனை பார்த்த மல்லிகாவுக்கு கைகால் அசையவில்லை! ஆனால் பாசம் உந்துமல்லவா? ஏன் எப்படி என்ற கேள்விகளை எழுப்பாமல், மூத்தவனை ஆட்டோ பிடித்து வர சொல்லி சாமர்த்தியமாக செயல்பட்டால் மல்லிகா! பக்கத்து வீட்டு ஆட்டோகாரர் தான்.பணம் பற்றியெல்லாம் கவலை கொள்ளாது ஏற்றி பரபரப்பாக ஓட்டிச்சென்றார்! போகும் வழியில் இருந்த தனியார் மருத்துவமனைகளில் வண்டி நிற்கவில்லை. தனியார் மருத்துவமனை என்பது இவர்களை பொறுத்தவரை வெறும் பெரிய கட்டிடங்கள் தான்! வேக வேகமாக திருவான்மியூர் சுகாதார […]